Monday, March 05, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (11)

எங்களை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்வது எங்களுக்கு அவமானமாக இல்லை. ஆனால் அரவிந்த் பாபு மட்டும் அவமானமாக உணர்ந்தார். இருப்பினும் சாதுவாக பொறுத்துக் கொண்டார்.


கோர்ட் இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமானையும் மறக்க முடியாது. எங்களுக்கு உணவளிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இராட்சச போலிஸாருக்கு நடுவில் அவர் ஒருவரே கண்ணியமானவராக தெரிந்தார். நாங்கள் நாடு கடத்தப்படலாம் என்று நினைத்து அவர் முகத்தில் தோன்றிய இரக்கம் இன்னமும் நினைவிலிருக்கிறது.



புரட்சிவாதிகள் எல்லாருமே ஒரே கொள்கை கொண்டவர்களல்ல. ஆனால் நாட்டின் விடுதலையை மட்டும் ஒரே கொள்கையாக கொண்டார்கள். அதன்பிறகு என்ன என்ன செய்யவேண்டும் என்று பல வேற்றுமைகள் இருந்தன். அவற்றையெல்லாம் சிறைக்குள்ளையே விவாதித்தோம்.


இந்நிலையில் அமைதியாக இருந்த அரவிந்த பாபு பைத்தியமாகிவிட்டார் என்ற வதந்தி பரவியது. ஆளாளுக்கு ஒவ்வொரு கதைகள் கூறினார்கள்.


அவர் உணவினை பல்லி, கரப்பான், எறும்பு ஆகியவற்றிற்கு தந்து விடுவாராம். இப்படி வதந்திகள் பரவின.


கிட்டத்தட்ட ஒரு சாதுவைப்போல அவர் மாறிக்கொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் எங்கள் வழக்கை பற்றி கேட்டபொழுது. தான் விடுதலையாகிவிடுவேன் என்று கூறினார்


அவர் சொன்னது போலவே ஓராண்டுக்குப்பிறகு அவர் விடுதலை பெற்றுவிட்டார்.


உல்லாஸ்கருக்கும் பாரீனுக்கும் தூக்குத்தண்டனை

பத்துப் பேருக்கு நாடு கடத்தப்படும் தண்டனை

மீதியிருந்தவர்களுக்கு 5 - 7 -10 ஆண்டுகள் சிறை


என தீர்ப்பாயிற்று


தூக்குத்தண்டனை தீர்ப்பை கேள்விப்பட்ட உல்லாஸ்கர் சிரித்துக்கொண்டே சொன்னான். "பொறுப்பு தீர்ந்தது" என்று


ஓர் ஐரோப்பிய காவலாளி இதனைக் கண்டு தன் நண்பனிடம் கேட்டான், "பாரு இவன் தூக்கிலே தொங்கப்போறான் ஆனால் சிரிச்சிக்கிட்டு இருக்கான் "

அந்த நண்பன் சொன்னான் "எனக்குத் தெரியும் சாவுங்கிறது இவங்களுக்கெல்லாம் கேலிக்குரிய விசயம். "

1909 ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வெளியாயிற்று. நாங்கள் 15 பேர் சிறையில் தங்கிவிட்டோம் மற்றவர்கள் சிரித்தபடி வெளியேறினர். நாங்களும் சிரித்தபடி விடைகொடுத்தோம். ஆனால் சிரிப்புக்குப் பின்னால் இதயம் வெடிக்கும் அழுகைகள் உறைந்து கிடந்தன . ரிஷிகேஷ் வேதாந்தமே உருவாக சொன்னான் :"ஒண்ணுமில்லை இது வெறும் கெட்ட கனவுதான் "


எல்லாரும் வெளியேறிய பிறகு நாங்கள் மட்டும் இந்த சிறைக்குள்ளையே காலத்தை கழிக்கவேண்டுமா பேசாமல் தூக்குத்தண்டனையில் செத்திருக்கலாம் என்று நினைத்தேன்


எங்களை விலங்கு பூட்டி அறைகளில் அடைத்து வைத்திருந்தார்கள். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது..


சில காவலாளிகள் நல்லவர்களாகவும் சிலர் எங்களை தொந்தரவு செய்வதையே பிறவிப்பயனாகவும் செய்து வந்தார்கள்.


எங்களில் ஹேம் சந்திரன் ஓவியக்கலை நிபுணர் சுவரிலிருந்து சுண்ணாம்பு செங்கல்லை சுரண்டி வர்ணங்கள் தயாரித்து சுவரின் மேல் வர்ணங்கள் வரைவார். காகிதத்தில் நகங்களால் வரைந்து காவலாளிகளிடம் கொடுப்பார். அப்பொழுதுதான் காவலாளிகளின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம் என்று.


சிலர் கவிதை எழுதுவார்கள். ஒரு பெயர் தெரியாத கவிஞர் சுவரில் கவிதை எழுதியிருந்தார்


சணலைப்பிய்த்துப் பிய்த்து உடம்பு ஆகிவிட்டது கட்டை

கறுத்துவிட்டது தங்கநிறம்

காவல்காரத்தடியன்கள் ஆட்டு மூளைக்காரர்கள் திட்டுகிறார்கள்

இரவும் பகலும்.



இடையிடையே சில நல்ல கவிதைகளும் கண்ணில் படும். சில கவிதைகள் மனதில் தங்கிவிடும் இதுபோல


ராதையின் இரு சிவந்த பாதங்களில்

அகப்பட்டுக்கொண்டான் அனந்தன்

எத்தனை உலகங்கள் எழுந்து மிதக்கின்றன

சித்தானந்தின் போதை வெறியில்.



சில நாட்கள் கழித்து உல்லாஸ்கருக்கும் பாரீனுக்கும் தூக்குத்தண்டனை குறைக்கப்பட்டு நாடு கடத்தப்படும் தண்டனையாகிவிட்டது. பலருக்கு சிறைத்தண்டனை குறைக்கப்பட்டது.


எனக்கும் ஹேம் சந்திரனுக்கும் நாடு கடத்தப்படும் தண்டனையில் எந்த மாற்றமுமில்லை. நாங்கள் அந்தமான் செல்லும் கப்பலுக்காக காத்திருந்தோம்.


அந்தமானுக்கு அனுப்புவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அதிகாரி வந்து வயிற்றை அமுக்கிப் பார்த்தார் இமைகளை தூக்கிப்பார்த்தார். நானும் சுதீரும் வயிற்றுப்போக்கு காரணமாக அந்தமான் செல்வது ஒத்தி வைக்கப்பட்டது. சுமார் 7 பேர்கள் அந்தமானுக்கு சென்று விட்டார்கள்.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு