சில நாட்களுக்குப் பின் தேவவிரதன் நவசக்தி இதழுக்கு போய்விட்டான்
பூபேனும் வந்காளத்திற்கு சுற்றுப்பயணம் போய்விட்டான்.
இதழை நடத்துகின்ற பெரிய பொறுப்பு என்மீதும் பாரீந்திரன் மீதும் விழுந்தது. நானும் பெரிய மனிதர்களுள் ஒருவனாகிப்போனேன்.
வாழ்வும் சாவும் காலில் கிடக்கும் அடிமை. உள்ளத்தில் கவலை இல்லை என்று ரவீந்திரர் தீட்டிய சித்திரம் அந்தக் காலத்து வங்காளி இளைஞர்களின் சித்திரமாகும்.
உண்மையில் ஒரு நம்பிக்கை ஒளி எங்கள் உள்ளங்களின் ஒளிந்திருந்தது. பிரிட்டிஷ் பீரங்கி வெடிகுண்டு பட்டாளம் இயந்திரத்துப்பாக்கி எல்லாமே வெறும் மாயை. இது ஒரு இந்திரஜாலக்காட்சி சீட்டுக்கட்டால் கட்டப்பட்ட வீடு நாங்கள் ஓர் ஊது ஊதினால் பறந்து போய்விடும்.
எங்கள் எழுத்துக்களைப்படித்து நாங்களே திடுக்கிட்டோம். நாட்டின் ஜீவசக்தி எங்கள் கைகள் மூலமாகத்தான் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தோன்றும்
எங்கள் பத்திரிக்கையின் எண்ணிக்கை 1000 த்திலிருந்து ஒரே ஆண்டில் 20000 ஆக மாறியது ஒரே ஆண்டில். ஆவ்வளவு இதழ்கள் அச்சடிப்போம் என்று நாங்கள் நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் அச்சு இயந்திரங்களும் அத்துணை இதழ்கள் அச்சடிப்பதற்கு தகுந்தது இல்லை. எனவே திருட்டுத்தனமாக வேறு அச்சகத்திலும் அச்சிட நேர்ந்தது.
அறையின் மூலையில் உடைந்து போன பெட்டியில் ஜுகாந்தர் விற்ற பணம் இருக்கும். அதைப் பூட்டி யாரும் பார்த்ததில்லை. பணம் எவ்வளவு வந்தது எவ்வளவு செலவாகியது என்று யாருமே கணக்கு பார்ப்பதில்லை. பல இளைஞர்கள் ஜுகாந்தர் அலுவலகம் வந்து இளைப்பாறி சாப்பிடுவதுண்டு. அவர்கள் யார் என்ன என்று கூட விசாரிப்பதில்லை. அவர்கள் சுதேசிகள் ஆகவே எங்களைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும்தான் தெரியும்.
ஆபிசுக்கு வெளிNயு வரும் போது வாசலில் ஓரிருவர் எப்போதும் நின்று கொண்டிருப்பதைப்பார்ப்போம். எங்களைக் கண்டவுடன் ஒருவர் வானத்தை வெறித்துப்பார்ப்பாh. ஒருவர் டீக்கடைக்குள் நுழைந்து விடுவார். வேறொருவர் சீட்டியடித்துக்கொண்டே அங்கிருந்து நழுவுவார். அவர்கள் சிஐடியின் அனுக்கிரகம் பெற்றவர்கள் என்று கேள்விப்பட்டேன். சிஐடி "ப்பூ அதைப்பற்றி எங்களுக்கென்ன கவலை",
ஒருநாள் அரசாங்கத்திடமிருந்து கடிதம் வந்தது நாங்கள் ராஜதுரோக கட்டுரைகள் எழுதுவதாகவும் உடனே அதனை நிறுத்தவேண்டும் என்றும் மீறினால் சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக்கொள்வீர்கள் என்றும் எழுதியிருந்தது.
எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சட்டம் என்ன ஐயா? நாங்கள் பாரதத்தின் எதிர்கால ஆட்சியாளர்கள். எங்களுக்கு சட்டம் சொல்லித்தர நீ யார்?
ஒரு நாள் உண்மையில் ஆட்டு மந்தையில் புலி நுழைந்துவிட்டது. இன்ஸ்பெக்டர் பூர்ணலாகிரி சில சிப்பாய்களுடன் ஆபிஸை சோதனையிட வந்தார்.
அவரிடம் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்ட் இருந்தது." யார் ஆசிரியர்" என அவர் கேட்க.."நான்தான் நான்தான்" என்று ஆளாளுக்கு சொல்ல கடைசியில் அவரே கொஞ்சம் உடல் பருமனனாகவும் தாடியுடனும் இருந்த பூபேனை ஆசிரியராக முடிவுசெய்து கைது செய்தார்.
பின் பூபேனை 1 ஆண்டு சிறையில் தள்ளிவிட்டனர். பின் கொஞ்ச நாட்களில் ஜுகாந்தர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதனை பதிவிட்ட வசந்தகுமார் சிறை சென்றார்.
இப்படி ஒவ்வொருவராக கைதுசெய்யப்பட்டு வந்தனர். பல இளைஞர்கள் சிறை சென்றுவிட்டனர் . இந்த நிலையில்தான் பாரீந்திரன் சொன்னான்
(தொடரும்)
-ரசிகவ் ஞானியார்
Monday, February 26, 2007
ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (தொடர் 2)
அந்த சமயத்தில் கல்கத்தாவிலிருந்து ஜுகாந்தர் என்றும் புரட்சி இதழ் ஒன்று வெளி வந்து கொண்டிருந்தது. அந்தநேரத்தில் புரட்சி என்ற சொல்லுக்கு தனி கவர்ச்சியே இருந்தது. எனக்குள்ளும் ஒரு அலை வந்து மோத ஆரம்பித்தது,
பிரான்சின் ரோபோஸ்பியர் முதல் ஆனந்தமடம் நாவலின் ஜீவானந்தன் வரை எனது மனதில் தோன்றி மறைந்தார்கள். நாட்டின் விடுதலைக்காக எதிர்கால சுதந்தி பாரதத்தின் உருவகமான வீரர்கள் எத்தகைய பிராணிகள் என்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது.
நான் வீட்டு மூலையில் சும்மா உட்கார்ந்திருக்க வேறு சிலர் சேர்ந்துகொண்டு இரவோடு இரவாக பாரதத்தை சுதந்திரமாக்கிவிடுவார்கள் என்பதை பொறுத்துக்கொள்ள முடியுமா?
கல்கத்தா ஜுகாந்தர அலுவலகம் சென்று பார்த்தேன். அஙகே 3 அல்லது 4 இளைஞர்கள் கிழிந்த பாயில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். போரிட்டு ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பது அவ்வளவு பெரிய விசயமில்லை என்று அவர்களது விவாதத்தில் ஒருமித்த கருத்தா இருந்தது. ஆனால் அவர்களின் பேச்சுக்குப் பின்னால் பெரியதாக ஏதோ ஒன்று இருக்கின்றது என்று எனக்குத் தோன்றியது.
சில நாட்கள் போய்வந்த பின் அப்பத்திரிக்கையின் நிர்வாகிகளுடன் பரிச்சயமேற்பட்டது. அநேகமாக அவர்கள் எல்லாருமே நாடோடிககள்தான் என்று தெரிய வந்தது.
தேவவிரதன் - பிஏ பாஸ் செய்துவிட்டு சட்டம் படித்துக் கொண்டிருந்தான் திடீரென்று இந்தியா விடுதலைப் பெற்று விடும் என்று தோன்றியதும் சட்டத்தை விட்டுவிட்டு ஜுகாந்தரின் ஆசிரியர் குழவில் சேர்ந்துவிட்டான்.
விவேகானந்தரின் தம்பி பூபேனும் ஆசிரியர் குழுவில் ஒருவன்
அவினாஷ் : ஒரு குடும்பத்தில் இல்லத்தலைவிக்கு உள்ள பொறுப்பை இந்த பைத்தியகாரக்குடும்பத்தில் வகித்தவன் இவன். பத்திரிக்கையின் நிர்வாகம் முதல் பல பொறுப்புகள் இவன் தலையில் .
பாரீந்திரன் : இவன் அரவிந்தரின் தம்பி. இவனோடு எனக்கு சற்று தாமதமாகத்தான் பரிச்சயம் ஏற்பட்டது. ஏனென்றால் நான் இணைந்த சமயத்தில் மலேரியாவின் கொடுமையால் இவன் தேவ்கருக்கு ஓடிப்போயிருந்தான். பின் எலும்பும் தோலுமாய் வந்திருந்தான்.
சாதிக்க முடியாதவைகளை கற்பனை மற்றும் உணர்ச்சியின் பலத்தாலையே சாதித்து விடுபவன் இந்த பாரீந்திரன். கணக்குப்பாடத்திற்குப் பயந்து கல்லூரியை விட்டு வந்தபின் சாரங்கி இசைப்பது, கவிதை எழுதுவது, பாட்னாவில் டீக்கடை வைப்பது என பல சாதனைகள் நிகழ்;த்திவிட்டான்.
அவன் பெரிய மனிதர்வீட்டு பிள்ளையானாலும் கடவுளின் கிருபையால் அவனுக்கு வறுமை துன்பத்தின் அனுபவம் கிடைத்துவிட்டது. இப்போது அவன் 50 ரூ முதலுடன் ஜுகாந்தர் பத்திரிக்கையை நடத்த முன்வந்திருக்கின்றான்.
நாட்டை விடுவிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை விட்டுவிடக்கூடாதென்று நானும் மூட்டைக்கட்டிக் கொண்டு எனது வீட்டை வெளியேறி ஜுகாந்தர் ஆபிஸில் குடிபுகுந்தேன்
(தொடரும் )
-ரசிகவ் ஞானியார்
பிரான்சின் ரோபோஸ்பியர் முதல் ஆனந்தமடம் நாவலின் ஜீவானந்தன் வரை எனது மனதில் தோன்றி மறைந்தார்கள். நாட்டின் விடுதலைக்காக எதிர்கால சுதந்தி பாரதத்தின் உருவகமான வீரர்கள் எத்தகைய பிராணிகள் என்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது.
நான் வீட்டு மூலையில் சும்மா உட்கார்ந்திருக்க வேறு சிலர் சேர்ந்துகொண்டு இரவோடு இரவாக பாரதத்தை சுதந்திரமாக்கிவிடுவார்கள் என்பதை பொறுத்துக்கொள்ள முடியுமா?
கல்கத்தா ஜுகாந்தர அலுவலகம் சென்று பார்த்தேன். அஙகே 3 அல்லது 4 இளைஞர்கள் கிழிந்த பாயில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். போரிட்டு ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பது அவ்வளவு பெரிய விசயமில்லை என்று அவர்களது விவாதத்தில் ஒருமித்த கருத்தா இருந்தது. ஆனால் அவர்களின் பேச்சுக்குப் பின்னால் பெரியதாக ஏதோ ஒன்று இருக்கின்றது என்று எனக்குத் தோன்றியது.
சில நாட்கள் போய்வந்த பின் அப்பத்திரிக்கையின் நிர்வாகிகளுடன் பரிச்சயமேற்பட்டது. அநேகமாக அவர்கள் எல்லாருமே நாடோடிககள்தான் என்று தெரிய வந்தது.
தேவவிரதன் - பிஏ பாஸ் செய்துவிட்டு சட்டம் படித்துக் கொண்டிருந்தான் திடீரென்று இந்தியா விடுதலைப் பெற்று விடும் என்று தோன்றியதும் சட்டத்தை விட்டுவிட்டு ஜுகாந்தரின் ஆசிரியர் குழவில் சேர்ந்துவிட்டான்.
விவேகானந்தரின் தம்பி பூபேனும் ஆசிரியர் குழுவில் ஒருவன்
அவினாஷ் : ஒரு குடும்பத்தில் இல்லத்தலைவிக்கு உள்ள பொறுப்பை இந்த பைத்தியகாரக்குடும்பத்தில் வகித்தவன் இவன். பத்திரிக்கையின் நிர்வாகம் முதல் பல பொறுப்புகள் இவன் தலையில் .
பாரீந்திரன் : இவன் அரவிந்தரின் தம்பி. இவனோடு எனக்கு சற்று தாமதமாகத்தான் பரிச்சயம் ஏற்பட்டது. ஏனென்றால் நான் இணைந்த சமயத்தில் மலேரியாவின் கொடுமையால் இவன் தேவ்கருக்கு ஓடிப்போயிருந்தான். பின் எலும்பும் தோலுமாய் வந்திருந்தான்.
சாதிக்க முடியாதவைகளை கற்பனை மற்றும் உணர்ச்சியின் பலத்தாலையே சாதித்து விடுபவன் இந்த பாரீந்திரன். கணக்குப்பாடத்திற்குப் பயந்து கல்லூரியை விட்டு வந்தபின் சாரங்கி இசைப்பது, கவிதை எழுதுவது, பாட்னாவில் டீக்கடை வைப்பது என பல சாதனைகள் நிகழ்;த்திவிட்டான்.
அவன் பெரிய மனிதர்வீட்டு பிள்ளையானாலும் கடவுளின் கிருபையால் அவனுக்கு வறுமை துன்பத்தின் அனுபவம் கிடைத்துவிட்டது. இப்போது அவன் 50 ரூ முதலுடன் ஜுகாந்தர் பத்திரிக்கையை நடத்த முன்வந்திருக்கின்றான்.
நாட்டை விடுவிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை விட்டுவிடக்கூடாதென்று நானும் மூட்டைக்கட்டிக் கொண்டு எனது வீட்டை வெளியேறி ஜுகாந்தர் ஆபிஸில் குடிபுகுந்தேன்
(தொடரும் )
-ரசிகவ் ஞானியார்
ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (தொடர் 1)
வங்காளத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர்கள் அரசு ஆவணங்களிலும் ஆங்கிலேயப் பத்திரிக்கைகளிலும் அராஜகவாதிகள் என்று குறிப்பிடப்பட்டார்கள்.
இப்படி ஒரு குழு இந்தியாவில் இருந்ததா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. அடிமைநாடுகளில் சுதந்திர வேட்கை மிகுந்தால் அங்கு இரகசிய சங்கங்கள் தோன்றுவது சகஜம்தான்.
வங்காளிகளின் தன்மானங்கள் ஆட்சியாளர்களின் நடத்தையால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதால் ஆங்கிலேய ஆட்சியில் அவர்கள் மனிதர்களாக வாழுகின்ற வாய்ப்பு இல்லாததாலும் அவர்கள் தங்கள் சக்தி முழுவதையும் திரட்டி எதிர்க்கத் தயாராகினர்.
இந்த நாட்டு புரட்சிவாதிகள் அராஜவாதிகள் அல்ல என்று சொல்வதே என் நோக்கம்.
1906 ம் ஆண்டின் குளிர்காலம் அது. ஆங்காங்கே கச்சேரிகள் சூடுபிடித்துக்கொண்டிருந்தது
நாட்டில் எதிர்ப்பு அலைகள் உருவாகிக்கொண்டிருந்தது. நாடு முழவதும் புதிதாய் எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
நான் அப்பொழுதுதான் என்னுடைய துறவற வாழ்க்கையை விட்டுவிட்டு வாத்தியார் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
ஒருநாள் "வந்தேமாதரம்" இதழ் என் கைக்கு கிடைத்தது. அதில் இந்தியாவின் அரசியல் இலட்சியத்தைப் பற்றி ஒருவர் எழுதியிருந்தார். நாம் வேண்டுவது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விடுபட்ட சுயாட்சி.
இந்தக் காலத்தில் இந்தச் சொற்றொடர் தெருவுக்கு தெரு பேசப்படும் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது
அந்த நேரத்தில் அரசியல்வாதிகள் சுய ஆட்சியைப் பற்றி உரையாற்றும் பொழுது அந்த சொல்லுக்கு முன்னால் காலனி என்ற சொல்லையும் சேர்த்து உச்சரிப்பாhர்கள். அப்படிப்பேசினால்தான் சட்டப்படி ஆபத்து வராது. கைதட்டலும் கிடைத்துவிடும்
ஆனால் நான் ரொம்ப துரதிருஷ்டசாலி. அந்த வார்த்தைகள் என்னுடைய காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. அடிக்கடி எனக்குள் ஏதோ ஒன்று தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது. எழுந்திரு எழுந்திரு நேரம் வந்துவிட்டது.
இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளா அல்லது இதன் ஆழத்தில் வேறு ஏதேனும் இருக்கின்றதா என்று எண்ணிக்கொண்டிருந்தவேளையில் நான் கேட்ட வதந்திகள் என்னை திடுக்கிட வைத்தது.
ஏதோ ஒரு மலை இடுக்கில் இரண்டு லட்சம் நாகர் வீரர்கள் கத்திகளைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். ஆயுதங்கள் எல்லாம் தயாராம். நாட்டின் மற்ற பகுதிகளும் தயாராம் ஆனால் வங்காளம் மட்டும் பின்தங்கியிருப்பதால் போர் தொடங்க தாமதமாம். இருக்கலாம்.
(தொடரும்)
- ரசிகவ் ஞானியார்
இப்படி ஒரு குழு இந்தியாவில் இருந்ததா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. அடிமைநாடுகளில் சுதந்திர வேட்கை மிகுந்தால் அங்கு இரகசிய சங்கங்கள் தோன்றுவது சகஜம்தான்.
வங்காளிகளின் தன்மானங்கள் ஆட்சியாளர்களின் நடத்தையால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதால் ஆங்கிலேய ஆட்சியில் அவர்கள் மனிதர்களாக வாழுகின்ற வாய்ப்பு இல்லாததாலும் அவர்கள் தங்கள் சக்தி முழுவதையும் திரட்டி எதிர்க்கத் தயாராகினர்.
இந்த நாட்டு புரட்சிவாதிகள் அராஜவாதிகள் அல்ல என்று சொல்வதே என் நோக்கம்.
1906 ம் ஆண்டின் குளிர்காலம் அது. ஆங்காங்கே கச்சேரிகள் சூடுபிடித்துக்கொண்டிருந்தது
நாட்டில் எதிர்ப்பு அலைகள் உருவாகிக்கொண்டிருந்தது. நாடு முழவதும் புதிதாய் எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
நான் அப்பொழுதுதான் என்னுடைய துறவற வாழ்க்கையை விட்டுவிட்டு வாத்தியார் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
ஒருநாள் "வந்தேமாதரம்" இதழ் என் கைக்கு கிடைத்தது. அதில் இந்தியாவின் அரசியல் இலட்சியத்தைப் பற்றி ஒருவர் எழுதியிருந்தார். நாம் வேண்டுவது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விடுபட்ட சுயாட்சி.
இந்தக் காலத்தில் இந்தச் சொற்றொடர் தெருவுக்கு தெரு பேசப்படும் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது
அந்த நேரத்தில் அரசியல்வாதிகள் சுய ஆட்சியைப் பற்றி உரையாற்றும் பொழுது அந்த சொல்லுக்கு முன்னால் காலனி என்ற சொல்லையும் சேர்த்து உச்சரிப்பாhர்கள். அப்படிப்பேசினால்தான் சட்டப்படி ஆபத்து வராது. கைதட்டலும் கிடைத்துவிடும்
ஆனால் நான் ரொம்ப துரதிருஷ்டசாலி. அந்த வார்த்தைகள் என்னுடைய காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. அடிக்கடி எனக்குள் ஏதோ ஒன்று தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது. எழுந்திரு எழுந்திரு நேரம் வந்துவிட்டது.
இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளா அல்லது இதன் ஆழத்தில் வேறு ஏதேனும் இருக்கின்றதா என்று எண்ணிக்கொண்டிருந்தவேளையில் நான் கேட்ட வதந்திகள் என்னை திடுக்கிட வைத்தது.
ஏதோ ஒரு மலை இடுக்கில் இரண்டு லட்சம் நாகர் வீரர்கள் கத்திகளைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். ஆயுதங்கள் எல்லாம் தயாராம். நாட்டின் மற்ற பகுதிகளும் தயாராம் ஆனால் வங்காளம் மட்டும் பின்தங்கியிருப்பதால் போர் தொடங்க தாமதமாம். இருக்கலாம்.
(தொடரும்)
- ரசிகவ் ஞானியார்
ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு
இந்திய விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தியாகிகள் சத்தமில்லாமல் எங்கோ புதைக்கப்பட்டு சரித்திரத்தின் சுவடுகளில் எட்டிப்பார்க்காமலையே இருந்துவிட்டனர். நாம் இன்று சுதந்திரமாய் வாழுகிறோம் என்றால் நமக்காக போராடியவர்களின் உயிர்களின் மீதுதான் நாம் உலவிக்கொண்டிருக்கின்றோம்.
விடுதலைக்காக போராடிய ஒரு புரட்சிவீரன் தான் உபேந்திரநாத். இவர் வங்காளதேசத்தைச் ஹ{க்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
துறவறத்தின் மீது ஆர்வம் கொண்டு பின் விடுதலைக்காகப் போராடி புரட்சி இயக்கத்தில் இணைந்து 12 ஆண்டுகளாய் நாடு கடத்தப்பட்டு அந்த வீரனின் சோகம் நிறைந்த கதையை அவரே தன் வரலாறாக ஆங்காங்கே கிண்டல்களுடன் எழுதியிருக்கின்றார். அவரது நூலை நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி.
விடுதலைப்போராட்டத்தின் போது பல ஆண்டு காலங்கள் வீட்டைப் பிரிந்து நட்டைப்பிரிந்து திரும்பி வரமுடியுமா உயிர்பிழைப்போமா என்ற அச்சத்தில் வாழ்க்கையை இழந்த எத்தனை இளைஞர்கள் வரலாற்றில் இருந்து காணாமல் போயிருக்கின்றார்கள்.
அப்படிக் காணாமல் போன ஒரு நாடு கடத்தப்பட்டவனின் சோகத்தை விளக்கப்போகின்றேன்.
மொழிபெயர்க்கப்பட்டாலும் அப்படியே வங்காளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ள சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வார்த்தைகளை கொஞ்சம் கடினமாக கையாண்டிருக்கின்றார்.
ஆகவே எனக்கு புரிந்த மாதிரி படித்து நான் படிப்பது போன்ற நடையில் உங்களுக்கும் அந்த சோகத்தை உபேந்திரநாத் சொல்வது போலவே தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
-ரசிகவ் ஞானியார்
Thursday, February 15, 2007
இன்று செய்திகளே இல்லை
பத்திரிக்கை துறை என்பது மிகவும் இன்னியமையாத ஒரு துறையாகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி இந்த ஊடகத்திற்கு உண்டு.
விடியற்காலை எழுந்தவுடன் பத்திரிக்கை படிக்காவிட்டால் சிலருக்கு அந்த நாள் முழுவதும் ஓடாது.
ஒருநாள் எந்தச் செய்தியுமே இல்லாவிட்டால் என்ன செய்தி போடுவார்கள் ?
இன்று செய்திகளே இல்லை என்று அதையும் செய்தியாகப் போடுவார்கள் என்று யாரோ சொன்னதாய் ஞாபகம்.
தமிழகத்தில் வருகின்ற பத்திரிக்கைகளில் தினத்தந்தி மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் இடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்கு காரணம் அதனுடைய எழுத்து வடிவம் மற்றும் பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள செய்திகள்தான்.
அதனை நிறுவிய தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் பற்றி கொஞ்சம் அலசுவோமோ..?
இவர் 1905 ம் ஆண்டு செப்படம்பர் 17 ம் நாள் திருநெல்வேலியில் காயாமொழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது குடும்பம் செல்வச் செழிப்பானது
அப்பா பெயர் சிவந்தி ஆதித்தன். அம்மா பெயர் கனகம் அம்மையார். அப்பா ஒரு வழக்கறிஞர்.
அவருடைய முழுப்பெயர் சிவந்தி பாலசுப்ரமண்ய ஆதித்தன். சுருக்கமாக சி.பா ஆதித்தன் என அழைக்கப்பட்டார்.
அவங்க அப்பா ஸ்ரீவைகுண்டத்தில் வக்கீலா பணிபுரிந்ததால ஆதித்தனார் படிச்சதெல்லாம் அங்கதான்ங்க. நாலாப்பு வரை அங்கதான் படிச்சாரு.
11ம் வகுப்பு வரும்போது அவருக்கு போதிய வயது வரம்பு இல்லைன்னு சொல்லி தேர்வு எழுத அனுமதிக்கலைங்க. 11 வது வகுப்பு வரைக்கும் அவர் வளரவேயில்லiயாக்கும். திடீர்னா அவருக்கு வயது வரம்பு குறைஞ்சிருச்சி.. என்னங்க நியாயம் இது? ஆரம்பத்துலையே வயது வரம்பு சோதனையிட்டு சேர்க்கவேண்டாமா?.
ஆதித்தனாரை நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்காததால ஒரு வருடம் சும்மா இருந்துட்டு அடுத்த ஆண்டு பரிட்சை எழுதினார். கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் வாங்கினார்
ஸ்ரீவைகுண்டத்திலேயே பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்து பாஸாக்கிவிட்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி ஏ வில் சேர்ந்தார்
அங்கு படிப்பை முடிச்சுட்டு 1927 ல் லண்டனுக்கு சென்றார்.அங்கே பாரிஸ்டர் படிப்பைத் தொடங்கினார். அவர் லண்டன்ல படிக்கும்போதே வீட்டிலயிருந்து பணத்தை எதிர்பார்க்காம கதை - கட்டுரைன்னு எழுதி சம்பாதிக்க ஆரம்பித்து தன் செலவுகளைக் கவனித்துக் கொண்டார்.
லண்டன்ல படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர்ல பெரும் தனவந்தரா ராமசாமி நாட்டாரின் மூத்த மகள் கோவிந்தம்மாளை 01.09.1933ல் திருமணம் செய்து கொண்டார்.
சிங்கப்பூர்ல பாரிஸ்டர் பணி நன்றாகச் சென்றது. பணமும் புகழும் சேர்க்க ஆரம்பித்தார். எட்டு ஆண்டுகள் சிங்கப்பூர்ல வக்கீல் வேலை பார்த்திருக்கார. ஆனா ஒரு வழக்கில்கூட தோற்றது கிடையாது.
இந்த நேரத்துலதாங்க உலகப்போர் ஆரம்பிச்சுடுச்சு. ஜப்பான்காரன் சிங்கப்பூர்ல குண்டு வீச ஆரம்பிச்சுட்டான். ஆதித்தனார் மனைவி குழந்தைகளை தமிழகத்திற்கு அனப்பிவிட்டார். தான் இந்தியா திரும்புவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
பின் சீட்டு போட்டு முடிவு செய்வது என்று தீர்மானிதத்து. "போ", "போகாதே" என்று எழுதிப்போட்டார். எடுத்துப் பார்த்தால் "போ" என்று வந்தது. உடனே விமானம் பிடித்து இந்தியா வரத் தொடங்கினார். ஆனால் ஜப்பான்காரன் விமானத்தை வழிமறித்ததால் எங்கெங்குமோ சுற்றி இறுதியில் இந்தியா வந்தடைந்தார்.
தமிழகம் வந்து என்ன செய்வது என முடிவெடுத்து பத்திரிக்கைத் தொழிலில் கால் பதிக்கத் தொடங்கினார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு கோரும் நாம் தமிழர் இயக்கத்திலும் ஆர்வம் கொண்டார்
இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடினார்
சென்னை வந்த இராஜேந்திர பிரசாத்தை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டினார். இதனால் 1960 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.
ராஜேந்திரபிரசாத் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரையிலும் இவரை சிறையிலையே அடைத்திருந்தார்கள்.
அரசு பனை மரங்களுக்கு வரி விதித்திருந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான பனை மரத் தொழிலாளர்கள் பாதிக்கப்டுவார்கள் என உணர்ந்து அதனை எதிர்த்து போராடியதோடு மட்டுமன்றி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்துவிட்டார்.
செங்கல் பட்டில் உள்ள உழவர்கள் அங்குள்ள மிராசுதாரர்களால் குறைவான கூலி கொடுக்கப்பட்டு நசுக்கப்படுவதை உணர்ந்து அவர்களுக்குப் போராடி பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சிறை சென்று மிராசுதாhர்களிடம் கூலி ஒப்பந்தம் போட்டார்.
பின் 1942 ல் தமிழன் என்ற வாரப் பத்திரிக்கையைத் தொடங்கினார்.
05-10-1942 ல் தினத்தந்தி நாளிதழ் மதுரையில் பதிவு செய்து ஆரம்பித்தார். அவர் பத்திரிக்கை ஆரம்பித்த சூழ்நிலையில் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது.
பத்திரிக்கைக்கு உண்டான காகிதம் கிடைக்காமல் திண்டாடினார். உடனே தானே காகிதம் தயாரிக்க முடிவு செய்து வைக்கோலை ஊறவைத்து கூழாக்கி பின்பு அதனைப் பக்குவப்படுத்தி காகிதமாக்கினார். காலையில் பத்திரிக்கைகளை சுமந்து கொண்டு லாரிகள் வெளிக்கிளம்புகின்ற நேரத்தில் தினத்தந்தி அலுவலகத்திற்கு தினமும் காலையில் வைக்கோல் வண்டி வந்து கொண்டிருந்தது.
இப்படியாக காகிதம் தயாரிக்கும் முறைக்கு தமிழன் கைக் காகிதம் என்று பெயரிட்டார்.
மழை நேரம் என்றால் காகிதத்திற்கு திண்டாட்டமாகிவிடும். மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்தக் காகிதப் பண்ணை இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தருவதில் தினத்தந்தியை முதன்மையாக்கினார். எளிய தமிழில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதியதால் இவரது பத்திரிக்கை 1000 பிரதியிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. 1948 ல் சென்னையில் லாஸ் என்னுமிடத்தில் வாடகைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம் 1960 ல் தான் சென்னையில் எழும்பூரில் நான்கு மாடிக் கட்டிடம் கட்டும் அளவிற்கு உயர்ந்தது.
பின் எல்லா முக்கிய ஊர்களிலும் பதிப்புகள் வருவதற்கு கடுமையாக உழைத்தார். இதன் பிறகு மாலை முரசு நாளிதழைத் தொடங்கினார். அதிலும் இமாலய வளர்ச்சிப் பெற்றார்.
1947 முதல் 1953 வரை தமிழக மேலவை உறுப்பினராகவும்
1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும்
1964 ல் மீண்டும் மேலவை உறுப்பினராகவும் பணி ஆற்றினார்.
1967ல் பேரவைத் தலைவரானார். அப்பொழுது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்ஃ
ஒவ்வொரு பட்ஜெட் கூட்டம் தொடங்கும் முன் "அகர முதல எழுத்தெல்லாம்" என்ற திருக்குறயை பாடி கூட்டத்தை ஆரம்பித்த பழக்கம் ஆதித்தனாரையே சாரும்
"தமிழ்நாடு" என்று மாநிலத்திற்கு பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றத் தலைமை தாங்கியவர் சி.பா ஆதித்தனார்.
சட்டசபையின் பெருன்பான்மையான ஆங்கில நடவடிக்கைகளை தமிழுக்கு மாற்றிய பெருமை இவரைச் சாரும்.
அப்பொழுது எல்லாம் மந்திரிகளை எப்படி அழைப்பது எனத் தெரியாமல் கனம் மந்திரிகள் என்று அழைத்துக்கொண்டிருந்தனர். ஆதித்தனார்தான் "மாண்புமிகு அமைச்சர்" என்று அழைக்கப் படுவதற்கு ஆதித்தனார் பெரும் பாடுபட்டார்.
இவரது மகன் சிவந்தி ஆதித்தனை இவரது தொழிலில் கொண்டு வர விரும்பியபொழுது கூட ஆரம்பத்திலையே தலைமைப் பொறுப்பை அவருக்கு கொடுத்துவிடவில்லை. கம்போஸிங்கில் இருந்து புருப் ரீடிங் வரை படிப்படியாக கற்றுக் கொடுத்துதான் இந்தத் பத்திரிக்கைத் தொழிலில் ஈடுபடுத்தினார்.
உனது தொழிலை நீ முழுமையாக கற்றுக்கொண்டால்தான் அதில் சிறப்பாகத் திகழ முடியும். என்பார்.
சிறந்த பாரிஸ்டர் பத்திரிக்கையாளர் தமிழ் மீது தணியா தாகம் உடையவர் எளிமையாக வாழ்ந்தவர் திருக்குறளை வாழ்வின் வழிகாட்டியாக நினைத்தவர் சி.கா ஆதித்தனார் 24.05.1981 அன்று மரணமடைந்தார்.
இன்றும் ஒவ்வொரு நாள் காலையிலும் பேப்பர் காரன் மூலம் நம்முடைய வீட்டை வந்தடைகின்றார். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி தினமும் வருகின்ற அவருடைய பத்திரிக்கை செய்திகள் மூலம் மறைந்து விட்டது. இன்னமும் எழுத்துக்களாக வலம் வருகின்றார்.
- ரசிகவ் ஞானியார்
ஆங்கிலேயருக்கு செக் வைத்த செம்மல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருக்கிறது வ உ சி மைதானம்.வருடா வருடம் சுதந்திர தினம் குடியரசு தினத்தில் கலெக்டர் வந்து கொடியேற்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இனிதே நடந்து முடியும். அத்தோடு கூட்டங்கள் கலைந்துவிடும்.
ஆனால் அந்த மைதானத்தின் பெயர் கொண்ட வ.உ.சி யை எத்துணை பேர் நினைத்துப்பார்த்திருக்க கூடும் என்றுத் தெரியவில்லை.
பாரதியின் இறுதிச் சடங்கில் ஆட்களின் எண்ணிக்கையை விடவும்
ஈக்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று வைரமுத்துவின் கவிதை ஒன்றில் வாசித்திருக்கின்றேன். கேட்கும்பொழுதே பதறுகின்றது நெஞ்சம்.
அதுபோலவே வஉசி 6 ஆண்டு காலம் சிறைதண்டனை அனுபவித்துவிட்டு கண்ணணூர் சிறையிலிருந்து வெளியே வந்தபொழுது அவரை வரவேற்க ஒரு காங்கிரஸார் கூட இல்லை என்று அவரது மகன் வாலேஸ்வரன் வருத்தப்பட்டிருக்கின்றார்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற கூற்றுப்படி வியாபார வர்க்கமாக வந்து நம்மை ஆண்ட வெள்ளையர்களை வியாபாரம் வழியாகவே விரட்டியடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்ட வஉசி சுதேசி கப்பல் இயக்கத்தை ஆரம்பித்தார். இதன்மூலம் வெள்ளையனின் வியாபார வளத்தை முறியடிக்கலாம் என்று முயற்சி மேற்கொண்டு தோல்வியுற்றார்.
1872 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரன் என்ற ஊரில் பிறந்தார் வஉசி.
இவங்க அப்பா பெயர் உலகநாதம் பிள்ளை. அம்மா பெயர் பரமாயியம்மாள்.
தூத்துக்குடி செயிண்ட் பிரான்சிஸ் உயர்நிலைப்பள்ளியில் படித்துவிட்டு கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் படிப்பில் தேறினார்.
வக்கீலாக வேண்டும் என்று விரும்பி வக்கீலுக்குப் படித்து வெற்றிகண்டார். தனது ஊரிலையே வக்கீல் தொழிலை ஆரம்பித்தவர் 1900 ம் ஆண்டு தூத்துக்குடிக்கு தனது வக்கீல் தொழிலை மாற்றிக்கொண்டார்
1906 ம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவினார். கம்பெனியின் தலைவர் பாண்டித்துரை சாமி காரியதரிசியாக வஉசி
ஆரம்பத்தில் கப்பலை குத்தகைக்கு எடுக்கத் திட்டமிட்டவர் பின்பு சொந்தமாகவே கப்பலை வாங்கிவிட்டார். இதற்குண்டான பணத்திற்காக ஊர் ஊராக சென்று ஷேரை விற்க ஆரம்பித்தார். ஆங்கிலேயர்கள் இதனைக் கண்டு சும்மாவா இருப்பார்கள். அவருக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இருந்தாலும் அந்தத் தொந்தரவுகளையெல்லாம் முறியடித்து சுதேசி கப்பல் வியாபாரம் சிறப்பாக நடத்தினார்
1908 ம் ஆண்டு திருநெல்வேலியில் தேசாபிமானி சங்கத்தை ஏற்படுத்தி விடுதலை வேட்கையைத் தூண்டினார்.
சுப்பிரமணியம், சிவாவும் வஉசியும் பேசுகிறார்கள் என்றாலே ஆங்கிலேயர்கள் கிடுகிடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அலைமோதும் மக்கள் கூட்டத்தை திரட்டுவார்கள்.
மார்ச் மாதம் 9 ம் தேதி தூத்துக்குடியில் பெரிய ஊர்வலம் நடத்தியதை ஆங்கிலேயர்கள் கண்டித்து அவரை திருநெல்வேலியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தேசிய இயக்கத்தில் சேரக்கூடாது என்று வாக்குறுதி தருமாறு உத்தரவிட்டது.
ஆனால் வஉசி அதனை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் வஉசியையும் சுப்ரமணிய சிவாவையும் கைது செய்தார்கள்.
இதனால் நாடே கொந்தளித்தது. துப்பாக்கிச்சூடு கலவரங்கள் நீடித்தன. வஉசி மீதும் சுப்ரமணிய சிவா மீதும் அரசு வழக்கு தொடர்ந்து வஉசிக்கு அந்தமானில் 20 ஆண்டு காலச் சிறையும் சிவாவுக்கு 10 ஆண்டு சிறையும் கொடுத்தது
ஆனால் வஉசி மேல் முறையீடு செய்து தண்டனையை 6 ஆண்டுகளாக குறைத்தார். கோவை சிறையில் அடைக்கப்பட்டார்
சிறையில் அவரை ஆங்கிலேயர்கள் செக்கிழுக்க வைத்து துன்புறுத்தியதால் அவர் மிகவும் உடல் நலம் குன்றிப்போனார். இவர் சிறை சென்றவுடன் இவரது கப்பல் கம்பெனி சரியான தலைமையின்றி சீரழிந்து நஷ்டத்திற்குள்ளாகியது. பங்குதாரர்கள் எல்லாம் இவரால்தான் நஷடமாகியது என்று குறை சொல்ல ஆரம்பிக்க மனம் உடைந்து போனார் வஉசி.
1921 ல் விடுதலையானார். அப்பாழுது சென்னையில் நீதிபதியாக இருந்த வாலஸ் அவருக்கு வக்கீல் பட்டத்தை திரும்ப வாங்கிக்கொடுத்தார்.
1920 ல் காந்தியின் சாத்வீகப் போராட்டங்களை காங்கிரஸ் பரிசீலிக்க ஆரம்பிக்க சாத்வீக போக்கு பிடிக்காமல் காங்கிரஸை விட்டு விலகினார். பின்பு பலரின் வற்புறுதலுக்கு இணங்க 1927 ல் மீண்டும் இணைந்தார்.
சிறையில் செக்கிழுத்ததால் அவர் உடல் நலம் ஏற்கனவே குன்றிக் காணப்பட்டது. இந்நிலையில் வறுமையும் அவரை வாட்ட மிகவும் இளைத்துப் போய்விட்டார்.
சுதந்திரத்திற்காகப் போராடியவர் சுதந்திரத்திற்கு இன்னும் 11 ஆண்டுகளே மீதமிருந்த நிலையில் இந்திய சுதந்திக் காற்றைச் சுவாசிக்கமலையே 1936 ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வஉசி மறைந்து போனார்.
பின்னர் 1949 ல் இராஜாஜி கவர்னராக இருக்கும்பொழுது வஉசி பெயரில் கப்பல் ஒன்றை மிதக்க விட்டார்;.
பின்பு அவரைப் பற்றிய புத்தகமான கப்பலோட்டிய தமிழன் வெளியிடப்பட்டு அதுவே திரைப்படமாகவும் பின்னாளில் எடுக்கப்பட்டது.
இப்பொழுதும் அந்த வஉசி மைதானத்தைக் கடக்கும்பொழுதெல்லாம் எனது வாகனத்தின் சப்தம் செக்கிழுப்பது போலவே கேட்டுக்கொண்டிருக்கின்றது
யாரேனும் பாளையங்கோட்டை வஉசி மைதானம் வர நேரிட்டால் செக்கிழுத்துவிட்டுச் செல்லுங்கள் இல்லை இல்லை செக்கிழுத்தவரின் நினைவை இழுத்து விட்டுச் செல்லுங்கள்.
- ரசிகவ் ஞானியார்
Friday, February 09, 2007
வாஞ்சி மணியாச்சி வரவேற்கிறது
அதிகாலை 7.30 மணி அளவில் சென்னையில் இருந்து திருநெல்வேலி வருகின்ற நெல்லை விரைவு வண்டியானது மணியாச்சி என்ற இரயில் நிலையத்தில் வந்து ஓய்வெடுக்கின்றது.
ஒவ்வொரு முறை சென்னை சென்றுவிட்டு திரும்பும்பொழுதும் திருநெல்வேலி நெருங்கும்பொழுது இந்த ஸ்டேஷன் கண்ணில் படும்பொழுதெல்லாம் எனக்கு வாஞ்சிநாதன் ஞாபகம்தான் வரும
காபி டீ காபி டீ.. சத்தங்கள் ஒலி குறைந்தும் அதிகபட்டும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருக்கின்றது
டீ குடிக்கும் ஆவலில் கதவுக்குப் பக்கத்தில் உள்ள ஒருவரை விலக்கிவிட்டு கீழே இறங்கினேன்.
வாஞ்சி மணியாச்சி என்ற பலகை கொட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. அந்தப் பெயரைசாதாரணமாய் நம் கண்கள் வாசித்து விட்டு விலகி விட முடியாது.
அப்பொழுது முதல் வகுப்பு பெட்டி அருகே பரபரப்பாய் இருந்தது. மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். யாரோ ஒருவர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றார். அப்பொழுது பரபரப்பாய் வந்த ஒருவரிடம் கேட்டேன்..
ஹலோ என்ன ஆச்சு? என் இந்தப் பரபரப்பு?
முதல் வகுப்பில் வந்த கலெக்டரை ஒருவன் சுட்டுவிட்டான் என்று கூறிக்கொண்டே அவர் விரைந்து சென்றார்
யார் என்ன என்று விசாரித்தபொழுதுதான் தெரிந்தது..?
சுட்டவன் பெயர் வாஞ்சிநாதன்
சுடப்பட்டவர் ஆஷ் துரை
தூரத்தில் அதோ வாஞ்சிநாதன் ஓடிக்கொண்டிருக்கின்றான். அப்படியே மறைந்து போகின்றான். அந்த இடத்தில் இரயில்வே தடங்கள் நீண்டு சென்று கொண்டிருக்கின்றது. மறுபடியும் நினைவு மீண்டு பார்த்தால் எந்த பரபரப்பும் இல்லை. நான் வந்த இரயில் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கின்றது.
அட 1911ம் ஆண்டு ஜுன் மாதம் நான் இதே இரயில் வந்திருந்தால் சுட்டுவிட்டு ஓடுகின்ற வாஞ்சிநாதனை கண்டிருக்கக் கூடும். யாருக்கும் தெரியும். வாஞ்சிநாதனுடன் நானும் கூட ஓடியிருக்கலாம்.
அந்த நினைவுகளோடு இரயில் மணியாச்சியை விட்டு சென்று கொண்டிருக்க என் மனதில்
படுவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு இரயிலானது போராட்ட காலத்திற்குச் சென்றது.
தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுள் மறக்கமுடியாத இன்னமும் மக்களால் பேசப்படுகின்ற வீரராக இருப்பவர்களுள் ஒருவன்தான் வாஞ்சிநாதன்.
1911 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்த இடம் எவ்வளவு பரபரப்பாய் இருந்திருக்கும் என்று தற்பொழுது என்னுடன் இரயில் பயணிப்பவர்களுக்கோ அல்லது அந்த நேரத்தில் இரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பவர்களுக்காகவாவது புரிந்திருக்குமா? இனி நீங்கள் திருநெல்வேலி பயணத்தில் மணியாச்சியை நெருங்கும் பொழுது நினைத்துப்பார்ப்பதற்காகவாவது கொஞ்சம் வாஞ்சிநாதன் வாழ்ந்த நாட்களுக்கு சென்று வருவோமா..?
தேசபக்திக் குரல்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த ஒலிச்சப்தத்தின் அதிர்வு திருநெல்வேலி மாவட்டத்திலும் அதிகமாக அலைவரிசைகளை வீசியது.
1880 ம் ஆண்டு எனது அல்வாப்பூமி என்றழைக்கப்படும் திருநெல்வேலியில் செங்கோட்டையில் அம்பிகாபுரம் அருகே உள்ள அம்மன்கோவில் தெருவில் இரகுபதி அய்யருக்கும் குப்பச்சி அம்மாளுக்கும் பிறந்தவன்தான் வாஞ்சிநாதன்.
அவனது தந்தை பெரிதாய்ச் சொல்லிக் கொள்ளும்படியான உத்தியோகம் எதுவுமில்லை. கோவிலில் கிடைக்கின்ற மானியம் மற்றும் சுவாமிக்கு ஆராதனை செய்யும்பொழது விழுகின்ற காசுகளை வைத்துதான் குடும்பத்தை கரையேற்றிக்கொண்டிருந்தார்.
அதிலேயும் பாருங்க அவருக்கு நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள். பாவம் வருமானமும் இல்லாம எவ்வளவு சிரமப்பட்டிருப்பாரு ? வாஞ்சிநாதன்தாங்க மூத்தவன். அவங்கப்பா இட்ட பெயர் சங்கரன்தான். எப்படி வாஞ்சிநாதன்னு பெயர் மாறிச்சுன்னு தெரியலை.
அவ்வளவு கஷ்டத்திலேயும் அவங்கப்பா வாஞ்சிநாதனை செங்கோட்டை ஆங்கில மீடியாவில்தான் படிக்க வச்சார். அங்க பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு திருவனந்தபுரத்துல உள்ள திருநாள் மகாராஜா கல்லூரியில பிஏ வகுப்புப் படித்து அரியர்ஸ் வைக்காம பாஸ் செய்தான் வாஞ்சிநாதன்.
அப்புறம் மரவேலை சம்பந்தமாக படிப்புக்காக பரோடா சென்றான். அங்கேயும் அரியர்ஸ் வைக்காம படிச்சி முடிச்சுட்டு ஊர் திரும்பினான். அப்பெல்லாம் சீக்கிரமே; கல்யாணம் முடிச்சு வச்சிருவாங்கல்ல. அதான் பையன் படிச்சு முடிச்சுட்டான் அடுத்து என்ன ஒரு கல்யாணத்தையும் நடத்தி வச்சுறுவோம்னு முன்னீர்பள்ளத்தைச் சார்ந்த சீதாராமய்யர் பொண்ணு பொன்னம்மாளை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. பாவம். 23 வயசுலேயே அவருக்கு கஷ்டப்படணும்னு விதி.
முன்ன எல்லாம் 10 படிச்சாலே அரசாங்க வேலைதானே. அவனுக்கும் புனலூர் காட்டில கார்டாக வேலை கிடைச்சுது.
பரோடா திருவனந்தபுரம்னு சுத்துனதால தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் இந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் நம்ம வாஞ்சிநாதன் செம கில்லாடிங்க..
தானுண் தன் வேலை உண்டுன்னு நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தான். அந்த நேரத்துலதான் வ.ஊசி - சுப்ரமணிய சிவா ஆகியோர்களை செக்கிழுக்க வைத்து ஆங்கிலேய அரசு கொடுமைப்படுத்தியது. அந்தக்கொடுமையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 4 பேர் மரணமடைய இதனைக் கேள்விப்பட்ட வாஞ்சிநாதனால் பொறுக்க முடியவில்லை.
உடனே வேலையின் ஈடு பாட்டைக் குறைத்துவிட்டு திருநெல்வேலியில் தலைமறைவாக செயல்பட்டு வந்த பாரத மாதா சங்கத்தில் இணைந்தான.
வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தென்காசி எட்டயபுரம் திருநெல்வேலின்னு ஊரெல்லாம் சுத்தி இயக்கத்திற்கு ஆள் சேர்த்தான்.
அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் பாரதமாதாவைத்தான் வணங்குவார்கள். குங்குமத்தைக் கரைத்து குடித்து சத்தியம் செய்வார்கள் கட்டை விரலில் கத்தியால் கீறி அதன் இரத்தத்தில் திலகமிட்டுக்கொள்வார்கள்ஃ அனைவரும் சங்கேதப் பெயர்களையே வைத்திருப்பார்க்ள.
அந்த இயக்கத்தோட தலைவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவர் வேதாந்த கூட்டம் நடத்துவதுபோல தேசபக்திக் கூட்டம் நடத்துவார்.
சிறைக்கொடுமைகளுக்கும் கலவரத்திற்கும் அப்பாவி மக்கள் கொல்லப்படுதலுக்கும் காரணம் ஆஷ்துரைதான் ஆகவே ஆஷ்துரையைக் கொல்ல வாஞ்சிநாதன் சபதமெடுத்தான்.
அந்த நேரத்தில் அவனது குடும்பத்தில் ஒரு சோகம்.. ஆம் அவனது மனைவி பொன்னாம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் அந்தக் குழந்தை பிறந்தவுடனையே இறந்துவிட்டது.
திருனந்தபுரம் போய் தற்குண்டான ஜாதிச் சடங்குகள் செய்யதுட்டு வாடான்னு அவங்க அப்பா சொல்லிப்பார்த்தாரு ஆனால் வாஞ்சி நாதன் கேட்பதாக இல்லை. அரசியல் பக்கம் போகாதடா என்று மகனின் மீது உள்ள பாசத்தில் அவங்கப்பா கெஞ்சிக் கேட்க வாஞ்சிநாதனோ நாட்டின் மீது வைத்த பாசத்தினால் அவங்க அப்பா சொல்றதை அலட்சியப்படுத்தினான்.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்து குறி தவறாமல் சுடப் பழகிக் கொண்டான். அந்த நேரத்தில்தான் ஆஷ்துரை தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்று உல்லாசமாய் இருக்கத் திட்டமிட்டான்.
நம்ம மக்களையெல்லாம் கொன்னுட்டு இவன் மட்டும் உல்லாசமாய் இருக்கிறதா? விடக்கூடாது அவனைக் கொன்றுவிடவேண்டும் என்ற வெறியுடன் திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷன் சென்று ஆஷ் துரை புறப்படுகிற அன்று தனக்கும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கி வைத்துக்கொண்டான். பாரதமாதா இயக்கத்தைச் சார்ந்த மாடசாமி என்பவனும் அப்பொழுது வாஞ்சிநாதனின் உடனிருந்தான்
ஆஷ்துரை முதலாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். வாஞ்சிநாதன் இரண்டாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். வண்டி மெல்ல மெல்ல திருநெல்வேலியில் இருந்து மணியாச்சிக்கு சென்று நின்றது.
கையில் துப்பாக்கியுடனும் மனதில் வீரத்துடனும் கொஞ்சம் படபடப்போடு வாஞ்சிநாதன் அமர்ந்திருந்தான். மணியாச்சி இரயில் நிலையத்தில் வண்டி நின்றவுடன் மெல்ல வாஞ்சிநாதன் வெளியே வருகின்றான். ஒருமுறை பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை உறுதிபடுத்திக்கொள்கின்றான்.
இரண்டாம் வகுப்பிலிருந்து தண்ணீர் குடிப்பது போலவும் காற்று வாங்குவது போலவும் இறங்கி ஆஷ்துரை இருக்கின்ற முதல் வகுப்பை நோக்கி நடக்கின்றான்.
இதோ ஆஷ்துரை இருக்கின்ற பெட்டி வந்துவிட்டது. எட்டிப்பார்க்கின்றான் தனது மனைவியோடு ஆஷ்துரை அமர்ந்திருக்கின்றான். எடுத்தான் துப்பாக்கியை ஆஷ்துரையின் மார்பை நோக்கி குறிவைத்தான். டமால்..டமால் என இரண்டு முறை சுட்டுவிட்டு தப்பியோடினான்.
திடீரென்று யாரோ ஒருவன் தனது கணவனை கண்முன்னால் சுட்டதால் அவன் மனைவி அதிரந்து போய் கத்த ஆரம்பித்தாள். வாஞ்சி நாதன் ஓட ஆரம்பித்தான். அவனைப்பிடிக்க ஒரு கூட்டம் அவைனைப்பின்தொடர்ந்து ஓடியது.
எங்கு ஓடுவது எனத்தெரியாமல் ப்ளாட்பாரத்தில் உள்ள கக்கூஸில் நுழைந்துவிட்டான். அந்த கக்கூஸை சுற்றி வளைத்தனர் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயரிடம் மாற்றி சிறைத்தண்டனை பெறுவதா? கூடாது எனத் தீர்மானித்து தன் வாயில் அந்த துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டான் வாஞ்சிநாதன்.
பரபரப்பான பொது இடத்தில் ஒரு கலெக்டரைக் சுட்டுக் கொன்ற செய்தி கேட்டு நாடே ஸ்தம்பித்தது. இங்கிலாந்து நாட்டில பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது இந்தக் கொலை. அங்குள்ளவர்களால் சுதந்திர நாட்டின் முதல் வெடிச்சப்தம் என்றும் இது அழைக்கப்பட்டது
கூட இருந்த மாடசாமி என்ன ஆனான் என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை.
ஆனால் இந்த வாஞ்சிநாதன் சரித்திரத்தில் பல முரண்பாடுகள் இருப்பபதையும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
தினமும் நடைபயணத்தை மேற்கொள்ளுபவர் ஆஷ்துரை. ஓருநாள் தனது சாரட்டை பின்னால் நடத்தி கூட்டிவரும்படி குதிரையோட்டிக்கு ஆணையிட்டுவிட்டு நடந்து செல்லும்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட பெண் பிரசவவேதனையில்; கத்திக்கொண்டிருக்க அவளை தனது சாரட்டில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு குதிரையோட்டியிடம் ஆணையிடுகிறான் ஆஷ்
ஆனால் அந்த வழியில் உள்ள அக்கிரஹார மக்கள் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை இந்த வழியாக கொண்டு செல்லக் கூடாது என்று ஆஷின் சாரட்டை வழிமறிக்கின்றார்கள். உடனே ஆஷ் குதிரைச் சவுக்கால் அங்குள்ளவர்களை பலமாக அடித்துவிட்டு வண்டியை முன்னேற விடுகிறார். அந்தக்கும்பலில் அடிவாங்கிய ஒரு 16 வயது இளைஞன் ஆஷ் துரையை பழிவாங்கப் புறப்படுகின்றான். அவன் பெயர் என்ன தெரியுமா? வாஞ்சிநாதன்
என்று ழான் வோனிஸ் எழுதிய யுளா ழுககஉயைட ழேவநள எனும் குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது என்று நமது வலைப்பதிவர் வரவனையான் குறிப்பிட்டிருக்கின்றார்.
அது மட்டுமல்ல கொலை செய்ய வந்த இடத்தில் திருநெல்வேலியில் முந்தைய இரவில் ஒரு வேசியின் வீட்டில் அவர் தங்கியிருந்ததாகவும் அதனை அந்த வேசியே வந்து சாட்சி சொன்னதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விசயத்தில் ஒன்று மட்டும் புலப்படுகின்றது. பல சாதிகளாக பிரிந்திருக்கின்ற மக்கள் தனது சாதியை உயர்த்திக் காட்டுவதற்காக சரித்திரத்தின் சுவடுகளை ஆங்காங்கே மாற்றியிருக்கின்றனர் என்பது மட்டும் லேசாய்த் தெரிகின்றது.
இனிமேல் திருநெல்வேலி மணியாச்சியை நெருங்குகின்ற மணி ஆச்சு என்றால் நமது வாஞ்சிநாதனை நினைத்துக்கொள்ளுங்கள்.
- ரசிகவ் ஞானியார்
ஒவ்வொரு முறை சென்னை சென்றுவிட்டு திரும்பும்பொழுதும் திருநெல்வேலி நெருங்கும்பொழுது இந்த ஸ்டேஷன் கண்ணில் படும்பொழுதெல்லாம் எனக்கு வாஞ்சிநாதன் ஞாபகம்தான் வரும
காபி டீ காபி டீ.. சத்தங்கள் ஒலி குறைந்தும் அதிகபட்டும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருக்கின்றது
டீ குடிக்கும் ஆவலில் கதவுக்குப் பக்கத்தில் உள்ள ஒருவரை விலக்கிவிட்டு கீழே இறங்கினேன்.
வாஞ்சி மணியாச்சி என்ற பலகை கொட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. அந்தப் பெயரைசாதாரணமாய் நம் கண்கள் வாசித்து விட்டு விலகி விட முடியாது.
அப்பொழுது முதல் வகுப்பு பெட்டி அருகே பரபரப்பாய் இருந்தது. மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். யாரோ ஒருவர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றார். அப்பொழுது பரபரப்பாய் வந்த ஒருவரிடம் கேட்டேன்..
ஹலோ என்ன ஆச்சு? என் இந்தப் பரபரப்பு?
முதல் வகுப்பில் வந்த கலெக்டரை ஒருவன் சுட்டுவிட்டான் என்று கூறிக்கொண்டே அவர் விரைந்து சென்றார்
யார் என்ன என்று விசாரித்தபொழுதுதான் தெரிந்தது..?
சுட்டவன் பெயர் வாஞ்சிநாதன்
சுடப்பட்டவர் ஆஷ் துரை
தூரத்தில் அதோ வாஞ்சிநாதன் ஓடிக்கொண்டிருக்கின்றான். அப்படியே மறைந்து போகின்றான். அந்த இடத்தில் இரயில்வே தடங்கள் நீண்டு சென்று கொண்டிருக்கின்றது. மறுபடியும் நினைவு மீண்டு பார்த்தால் எந்த பரபரப்பும் இல்லை. நான் வந்த இரயில் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கின்றது.
அட 1911ம் ஆண்டு ஜுன் மாதம் நான் இதே இரயில் வந்திருந்தால் சுட்டுவிட்டு ஓடுகின்ற வாஞ்சிநாதனை கண்டிருக்கக் கூடும். யாருக்கும் தெரியும். வாஞ்சிநாதனுடன் நானும் கூட ஓடியிருக்கலாம்.
அந்த நினைவுகளோடு இரயில் மணியாச்சியை விட்டு சென்று கொண்டிருக்க என் மனதில்
படுவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு இரயிலானது போராட்ட காலத்திற்குச் சென்றது.
தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுள் மறக்கமுடியாத இன்னமும் மக்களால் பேசப்படுகின்ற வீரராக இருப்பவர்களுள் ஒருவன்தான் வாஞ்சிநாதன்.
1911 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்த இடம் எவ்வளவு பரபரப்பாய் இருந்திருக்கும் என்று தற்பொழுது என்னுடன் இரயில் பயணிப்பவர்களுக்கோ அல்லது அந்த நேரத்தில் இரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பவர்களுக்காகவாவது புரிந்திருக்குமா? இனி நீங்கள் திருநெல்வேலி பயணத்தில் மணியாச்சியை நெருங்கும் பொழுது நினைத்துப்பார்ப்பதற்காகவாவது கொஞ்சம் வாஞ்சிநாதன் வாழ்ந்த நாட்களுக்கு சென்று வருவோமா..?
தேசபக்திக் குரல்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த ஒலிச்சப்தத்தின் அதிர்வு திருநெல்வேலி மாவட்டத்திலும் அதிகமாக அலைவரிசைகளை வீசியது.
1880 ம் ஆண்டு எனது அல்வாப்பூமி என்றழைக்கப்படும் திருநெல்வேலியில் செங்கோட்டையில் அம்பிகாபுரம் அருகே உள்ள அம்மன்கோவில் தெருவில் இரகுபதி அய்யருக்கும் குப்பச்சி அம்மாளுக்கும் பிறந்தவன்தான் வாஞ்சிநாதன்.
அவனது தந்தை பெரிதாய்ச் சொல்லிக் கொள்ளும்படியான உத்தியோகம் எதுவுமில்லை. கோவிலில் கிடைக்கின்ற மானியம் மற்றும் சுவாமிக்கு ஆராதனை செய்யும்பொழது விழுகின்ற காசுகளை வைத்துதான் குடும்பத்தை கரையேற்றிக்கொண்டிருந்தார்.
அதிலேயும் பாருங்க அவருக்கு நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள். பாவம் வருமானமும் இல்லாம எவ்வளவு சிரமப்பட்டிருப்பாரு ? வாஞ்சிநாதன்தாங்க மூத்தவன். அவங்கப்பா இட்ட பெயர் சங்கரன்தான். எப்படி வாஞ்சிநாதன்னு பெயர் மாறிச்சுன்னு தெரியலை.
அவ்வளவு கஷ்டத்திலேயும் அவங்கப்பா வாஞ்சிநாதனை செங்கோட்டை ஆங்கில மீடியாவில்தான் படிக்க வச்சார். அங்க பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு திருவனந்தபுரத்துல உள்ள திருநாள் மகாராஜா கல்லூரியில பிஏ வகுப்புப் படித்து அரியர்ஸ் வைக்காம பாஸ் செய்தான் வாஞ்சிநாதன்.
அப்புறம் மரவேலை சம்பந்தமாக படிப்புக்காக பரோடா சென்றான். அங்கேயும் அரியர்ஸ் வைக்காம படிச்சி முடிச்சுட்டு ஊர் திரும்பினான். அப்பெல்லாம் சீக்கிரமே; கல்யாணம் முடிச்சு வச்சிருவாங்கல்ல. அதான் பையன் படிச்சு முடிச்சுட்டான் அடுத்து என்ன ஒரு கல்யாணத்தையும் நடத்தி வச்சுறுவோம்னு முன்னீர்பள்ளத்தைச் சார்ந்த சீதாராமய்யர் பொண்ணு பொன்னம்மாளை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. பாவம். 23 வயசுலேயே அவருக்கு கஷ்டப்படணும்னு விதி.
முன்ன எல்லாம் 10 படிச்சாலே அரசாங்க வேலைதானே. அவனுக்கும் புனலூர் காட்டில கார்டாக வேலை கிடைச்சுது.
பரோடா திருவனந்தபுரம்னு சுத்துனதால தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் இந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் நம்ம வாஞ்சிநாதன் செம கில்லாடிங்க..
தானுண் தன் வேலை உண்டுன்னு நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தான். அந்த நேரத்துலதான் வ.ஊசி - சுப்ரமணிய சிவா ஆகியோர்களை செக்கிழுக்க வைத்து ஆங்கிலேய அரசு கொடுமைப்படுத்தியது. அந்தக்கொடுமையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 4 பேர் மரணமடைய இதனைக் கேள்விப்பட்ட வாஞ்சிநாதனால் பொறுக்க முடியவில்லை.
உடனே வேலையின் ஈடு பாட்டைக் குறைத்துவிட்டு திருநெல்வேலியில் தலைமறைவாக செயல்பட்டு வந்த பாரத மாதா சங்கத்தில் இணைந்தான.
வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தென்காசி எட்டயபுரம் திருநெல்வேலின்னு ஊரெல்லாம் சுத்தி இயக்கத்திற்கு ஆள் சேர்த்தான்.
அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் பாரதமாதாவைத்தான் வணங்குவார்கள். குங்குமத்தைக் கரைத்து குடித்து சத்தியம் செய்வார்கள் கட்டை விரலில் கத்தியால் கீறி அதன் இரத்தத்தில் திலகமிட்டுக்கொள்வார்கள்ஃ அனைவரும் சங்கேதப் பெயர்களையே வைத்திருப்பார்க்ள.
அந்த இயக்கத்தோட தலைவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவர் வேதாந்த கூட்டம் நடத்துவதுபோல தேசபக்திக் கூட்டம் நடத்துவார்.
சிறைக்கொடுமைகளுக்கும் கலவரத்திற்கும் அப்பாவி மக்கள் கொல்லப்படுதலுக்கும் காரணம் ஆஷ்துரைதான் ஆகவே ஆஷ்துரையைக் கொல்ல வாஞ்சிநாதன் சபதமெடுத்தான்.
அந்த நேரத்தில் அவனது குடும்பத்தில் ஒரு சோகம்.. ஆம் அவனது மனைவி பொன்னாம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் அந்தக் குழந்தை பிறந்தவுடனையே இறந்துவிட்டது.
திருனந்தபுரம் போய் தற்குண்டான ஜாதிச் சடங்குகள் செய்யதுட்டு வாடான்னு அவங்க அப்பா சொல்லிப்பார்த்தாரு ஆனால் வாஞ்சி நாதன் கேட்பதாக இல்லை. அரசியல் பக்கம் போகாதடா என்று மகனின் மீது உள்ள பாசத்தில் அவங்கப்பா கெஞ்சிக் கேட்க வாஞ்சிநாதனோ நாட்டின் மீது வைத்த பாசத்தினால் அவங்க அப்பா சொல்றதை அலட்சியப்படுத்தினான்.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்து குறி தவறாமல் சுடப் பழகிக் கொண்டான். அந்த நேரத்தில்தான் ஆஷ்துரை தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்று உல்லாசமாய் இருக்கத் திட்டமிட்டான்.
நம்ம மக்களையெல்லாம் கொன்னுட்டு இவன் மட்டும் உல்லாசமாய் இருக்கிறதா? விடக்கூடாது அவனைக் கொன்றுவிடவேண்டும் என்ற வெறியுடன் திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷன் சென்று ஆஷ் துரை புறப்படுகிற அன்று தனக்கும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கி வைத்துக்கொண்டான். பாரதமாதா இயக்கத்தைச் சார்ந்த மாடசாமி என்பவனும் அப்பொழுது வாஞ்சிநாதனின் உடனிருந்தான்
ஆஷ்துரை முதலாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். வாஞ்சிநாதன் இரண்டாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். வண்டி மெல்ல மெல்ல திருநெல்வேலியில் இருந்து மணியாச்சிக்கு சென்று நின்றது.
கையில் துப்பாக்கியுடனும் மனதில் வீரத்துடனும் கொஞ்சம் படபடப்போடு வாஞ்சிநாதன் அமர்ந்திருந்தான். மணியாச்சி இரயில் நிலையத்தில் வண்டி நின்றவுடன் மெல்ல வாஞ்சிநாதன் வெளியே வருகின்றான். ஒருமுறை பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை உறுதிபடுத்திக்கொள்கின்றான்.
இரண்டாம் வகுப்பிலிருந்து தண்ணீர் குடிப்பது போலவும் காற்று வாங்குவது போலவும் இறங்கி ஆஷ்துரை இருக்கின்ற முதல் வகுப்பை நோக்கி நடக்கின்றான்.
இதோ ஆஷ்துரை இருக்கின்ற பெட்டி வந்துவிட்டது. எட்டிப்பார்க்கின்றான் தனது மனைவியோடு ஆஷ்துரை அமர்ந்திருக்கின்றான். எடுத்தான் துப்பாக்கியை ஆஷ்துரையின் மார்பை நோக்கி குறிவைத்தான். டமால்..டமால் என இரண்டு முறை சுட்டுவிட்டு தப்பியோடினான்.
திடீரென்று யாரோ ஒருவன் தனது கணவனை கண்முன்னால் சுட்டதால் அவன் மனைவி அதிரந்து போய் கத்த ஆரம்பித்தாள். வாஞ்சி நாதன் ஓட ஆரம்பித்தான். அவனைப்பிடிக்க ஒரு கூட்டம் அவைனைப்பின்தொடர்ந்து ஓடியது.
எங்கு ஓடுவது எனத்தெரியாமல் ப்ளாட்பாரத்தில் உள்ள கக்கூஸில் நுழைந்துவிட்டான். அந்த கக்கூஸை சுற்றி வளைத்தனர் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயரிடம் மாற்றி சிறைத்தண்டனை பெறுவதா? கூடாது எனத் தீர்மானித்து தன் வாயில் அந்த துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டான் வாஞ்சிநாதன்.
பரபரப்பான பொது இடத்தில் ஒரு கலெக்டரைக் சுட்டுக் கொன்ற செய்தி கேட்டு நாடே ஸ்தம்பித்தது. இங்கிலாந்து நாட்டில பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது இந்தக் கொலை. அங்குள்ளவர்களால் சுதந்திர நாட்டின் முதல் வெடிச்சப்தம் என்றும் இது அழைக்கப்பட்டது
கூட இருந்த மாடசாமி என்ன ஆனான் என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை.
ஆனால் இந்த வாஞ்சிநாதன் சரித்திரத்தில் பல முரண்பாடுகள் இருப்பபதையும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
தினமும் நடைபயணத்தை மேற்கொள்ளுபவர் ஆஷ்துரை. ஓருநாள் தனது சாரட்டை பின்னால் நடத்தி கூட்டிவரும்படி குதிரையோட்டிக்கு ஆணையிட்டுவிட்டு நடந்து செல்லும்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட பெண் பிரசவவேதனையில்; கத்திக்கொண்டிருக்க அவளை தனது சாரட்டில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு குதிரையோட்டியிடம் ஆணையிடுகிறான் ஆஷ்
ஆனால் அந்த வழியில் உள்ள அக்கிரஹார மக்கள் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை இந்த வழியாக கொண்டு செல்லக் கூடாது என்று ஆஷின் சாரட்டை வழிமறிக்கின்றார்கள். உடனே ஆஷ் குதிரைச் சவுக்கால் அங்குள்ளவர்களை பலமாக அடித்துவிட்டு வண்டியை முன்னேற விடுகிறார். அந்தக்கும்பலில் அடிவாங்கிய ஒரு 16 வயது இளைஞன் ஆஷ் துரையை பழிவாங்கப் புறப்படுகின்றான். அவன் பெயர் என்ன தெரியுமா? வாஞ்சிநாதன்
என்று ழான் வோனிஸ் எழுதிய யுளா ழுககஉயைட ழேவநள எனும் குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது என்று நமது வலைப்பதிவர் வரவனையான் குறிப்பிட்டிருக்கின்றார்.
அது மட்டுமல்ல கொலை செய்ய வந்த இடத்தில் திருநெல்வேலியில் முந்தைய இரவில் ஒரு வேசியின் வீட்டில் அவர் தங்கியிருந்ததாகவும் அதனை அந்த வேசியே வந்து சாட்சி சொன்னதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விசயத்தில் ஒன்று மட்டும் புலப்படுகின்றது. பல சாதிகளாக பிரிந்திருக்கின்ற மக்கள் தனது சாதியை உயர்த்திக் காட்டுவதற்காக சரித்திரத்தின் சுவடுகளை ஆங்காங்கே மாற்றியிருக்கின்றனர் என்பது மட்டும் லேசாய்த் தெரிகின்றது.
இனிமேல் திருநெல்வேலி மணியாச்சியை நெருங்குகின்ற மணி ஆச்சு என்றால் நமது வாஞ்சிநாதனை நினைத்துக்கொள்ளுங்கள்.
- ரசிகவ் ஞானியார்
Monday, February 05, 2007
மண்நேசர்கள்
கொல்லைப்புறத்தில்
காய்கின்ற துணிகள்,
சேகரித்து வைத்த
பழைய கடிதங்கள்,
கல்லூரி ஞாபகக்குறிப்பேடு,
அத்தாட்சிகளே இல்லாமல்போன
நண்பர்களின் ..
முகவரி கிழிசல்கள்,
நேற்று இரவு
அம்மா இட்ட
மருதாணிப் பிசிறுகள்,
தந்தையின் ஞாபகமாய்
இரத்தம் சிதறிய
தோள் துண்டுகள்,
தாயின் ஞாபகமாய்
குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்ட..
சேலை முந்தானைகள்,
இவற்றோடு
அதிகமான கவலைகள்,
எல்லாம் சேகரித்து
அகதி வந்திருக்கின்றேன்...
அகதி வந்திருக்கின்றோம்!
சீதையை மீட்க..
கடல் தாண்டி வந்தான் அனுமன்!
நாங்களும் அனுமர்கள்தான்
எங்கள்
உயிரையும் கற்பையும் மீட்க...
பல உடல்தாண்டி வந்திருக்கின்றோம்!
கடலோரம் பொறுக்கி வந்த ..
சங்குகளில் எல்லாம்
கடல் ஓசையல்ல,
எங்கள்
தலைமுறைகளின் ..
வெற்றிச்சப்தம் மட்டுமே
ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது!
கால் கடித்துவிட்டு
மண்ணுக்குள் மறைந்துபோகும்..
நண்டுகள் எல்லாம்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றது!
உதிக்கும் சூரியன்
எங்கள்
கண்களின் வெறிக்கு முன்னால்
கற்பிழந்து போகின்றது!
வானத்துப்பறவைகள்தான்
எங்கள்
எதிர்கால எடுத்துக்காட்டு!
நம்பிக்கையிருக்கிறது
ஒரு விடியலில் சேதி வரும்!
விட்டுச்சென்ற படகுகள் எல்லாம்..
ஒருநாள் திரும்பகூடும்
சுதந்திரக்காற்றை ரொப்பிக்கொண்டு..
அகதிகளாய் அல்ல..
சொந்தங்களாய் திரும்புவோம்!
காத்திருக்கின்றோம்
இராமேஸ்வரம்
மற்றும்
நம்பிக்கைகளின் கரையோரங்களில்..
- ரசிகவ் ஞானியார்
Saturday, February 03, 2007
முந்தைய இரவு
ஓட்டை வீடான..
ஓட்டு வீடு,
மாடி வீடாக..
மாறிப்போனது!
நகைக்கடை விளம்பர
நகைகள்..
வீட்டுப்பெண்களின்
கைகளிலும், கழுத்திலும்..
ஏறத்துவங்கின!
கடன்காரர்களின் வருகை..
குறைய ஆரம்பித்தது!
கனவாகப்போய்விடுமோ? என்ற
தங்கையின் திருமணம்
நான் இல்லாவிடினும்
லட்சம் இருந்ததால்..
லட்சணமாய் முடிந்தது!
அயல்நாட்டிலிருந்து
காசோலை மூலமாய்
வாழ்க்கை நடத்தியவன்..
இப்பொழுது
காசோடு வந்திருக்கின்றேன்!
இழந்துபோன காலத்திற்கும்
சேர்த்து வாழ..
தந்தையின் நினைவைச்சுமந்து
தனியாய் ஆடிக்கொண்டிருந்த..
சாய்வு நாற்காலிச்சப்தம் வந்து
காதுகளில் ..
கிறீச்சிடுகிறது!
தந்தையின் இறுதிநாட்களுக்கு கூட
வரமுடியாமல்..
விசாவினால் விலங்கிடப்பட்ட
எனக்கு,
யாரேனும் திருப்பித்தரக்கூடுமா?
தந்தையின் இறுதிச்சடங்குக்கு
முந்தைய நாளை?
நிம்மதி இல்லாமல் போகின்ற
இந்த பகலின்..
முந்தைய இரவுக்காக
காத்திருக்கின்றேன்!
யாரேனும் திருப்பித்தாங்களேன்?
- ரசிகவ் ஞானியார்
Thursday, January 25, 2007
ஒரு நிஜ எம்டன்
"எனது தந்தை இருக்கின்றாரே அவர் வீரப்பன் மாதிரி. தான் தவறுகள் செய்துவந்தாலும் தன்னை பிடிக்க தேடி வந்த காவலர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தன்மீது தவறு இல்லாதவனாய் காட்டிக்கொண்ட வீரப்பன் போலத்தான் என் தந்தையும். இது சரியல்ல என்று தெரிந்தும் அந்த தவறை தெரிந்தே செய்பவன் "
என்னடா பெற்றெடுத்த தந்தையை ஒருமையில் வெறுப்பில் அழைக்கும் அந்த நபர் யார்?
ஒரு பதிவில் ( ஏதாவது செய்யணும் சார்) மகன்களால் விரட்டப்பட்ட தந்தையின் பரிதாப நிலையைப்பற்றி மனம் வருந்தி எழுதியிருந்தேன். அதற்கு எதிர்மாறாக தனது தந்தையின் கொடுமையாலும் ஆதிக்க மனப்பான்மையாலும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையோடும் போராடிக்கொண்டிருக்கும் மனிதரைப்பற்றியது இது..?
அவர் பெயர் காஜாமைதீன். வயது 32க்குள் இருக்கும். நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பு. படிப்பில் ஆர்வமின்றி எட்டாம் வகுப்போடு பள்ளியை முடித்துவிட்டு தந்தையோடு தொழிலில் ஈடுபட்டார். கல்வியறிவுதான் இல்லையென்றாலும் உலக அறிவு அனுபவங்கள் ஏராளம்.
கவிதை இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். நல்ல கவிதைகளை படித்து பாராட்டும் குணம் உடையவர். மனிதநேயம் பற்றிய கவிதைகள் வாசித்துக் காட்டினால் இவர் கண்களில் கண்ணீர் திரள்கள் வந்துவிடும்
எந்தப்பிரச்சனை என்றாலும் இவரை அணுகினால் அதற்கு ஒரு தீர்வு சொல்லுவார். சட்டரீதியாக எந்த எந்த பிரச்சனைக்கு யார் யார் முறையாக அணுகுவது
அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்யும்பொழுது அதனை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பது
இளைஞர் நல மன்றம் விளையாட்டுத் திடல் சிறுவர் பூங்கா அமைப்பது
இரத்ததான முகாம், இலவச மருத்துவ பரிசோதனை என்று எல்லாவிதமான சமூக சேவைகளும் மக்கள் மனிதநேய அமைப்பு என்ற பெயரில் சமூகத்திற்காக சேவைபுரிந்துகொண்டிருக்கின்றார். இவர் மற்றவர்களுக்கு உதவுகின்ற அளவுக்கு வசதியானவர் அல்ல இருந்தாலும் தன்னால் முடிந்தவரை உதவுபவர்.
யாருக்கேனும் இரத்தம் தேவைப்பட்டால் என்னுடைய தொலைபேசி அழைக்கின்ற முதல் நபர் இவர்தான். உடனே தன்னுடைய குடும்பத்தில் உள்ள அவசரம் போல பம்பரமாய் இயங்குபவர்.
சாலையில் நடந்து செல்லும்பொழுது எந்தப்பகுதியிலாவது அசுத்தமாகி ,துப்புரவு செய்யாமல், கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தால், உடனே பேப்பரும் பேனாவும் எடுத்து அதற்குண்டானஅதிகாரிகளிடம் தெரிவிப்பது அல்லது புகைப்படம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு குறையாக சுட்டிக்காட்டி அனுப்பி வைப்பார்
எந்த விசயத்தைப் பற்றி கேட்டாலும் அழகாய் பதிலளிப்பார். இவர் மட்டும் படித்திருந்தால் இவரின் சேவையால் அவரைச்சுற்றியுள்ள சமூகத்திற்கு இதைவிடவும் ஒரு முக்கிய பங்கு கிடைத்திருக்கும்.
இப்படி சுற்றியுள்ள மக்களால் அன்புக்குரியவராக கருதப்படுகின்ற இவர்தான் சொல்கின்றார் தனது தந்தையைப் பற்றி.
"எனது தந்தை வீரப்பன் மாதிரி... .................................."
சுற்றியுள்ள மக்கள் எல்லாரும் மதிக்கின்றார்கள் ஆனால் பெற்றெடுத்த தந்தையால் புரிந்துகொள்ளமுடியவில்லை. தவறு யார் மீது?
பக்கத்தில் உள்ள பொருளின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. அது நம்மை விட்டு விலகிய பிறகுதான் இழப்பின் வலியை உணருவோம்.
தன்னை அடிமையாகவே வளர்க்க ஆசைப்பட்ட தந்தையின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுதந்திரமாய் தனிவியாபாரத்தில் ஈடுபட்டு வாழ்க்கையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருப்பவர்.
"எங்க அப்பா இருக்காரே ஒரு சாடிஸ்ட்..யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது..ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க.. "
"எனது தங்கையின் கணவர் வெளிநாடு சென்று விட்டு 2 வருடம் கழித்து வந்திருக்கின்றார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. எனது தங்கையின் குழந்தை என் வீட்டில் இருக்கின்றது. எனது தங்கை கணவர் வீட்டில் இருந்தாள்.அப்பொழுது எனது தந்தை சொல்லுகின்றார்.. :"
"நல்ல தகப்பனா இருந்தா என்னங்க செய்யணும்? சரி 2 வருடம் கழிச்சி மாப்பிள்ளை வந்துறுக்காரே - மகளும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கணும் குழந்தையை கொஞ்சநேரம் நாம வச்சிருப்போங்கிற எண்ணம் வருதா..? "
"யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது.. "
"நம்ம குழந்தை யார் வீட்டு பிள்ளையையோ அடிச்சிட்டு வந்திருக்கு. அடிபட்ட குழந்தையின் சொந்தக்காரங்க வந்தா என்ன பண்ணுவோம் நாம? "
"நம்ம குழந்தையை கண்டிப்போம். இல்லைனா நாம அடிப்போம். இல்லை வலி அதிகம் உணராதபடி அடிப்போம்.ஆனா எங்கப்பன் என்ன பண்ணுனான்னு தெரியுமா.. அடிபட்ட குழந்தைக்கு சொந்தக்காரங்களை விட்டே என்னை அடிக்க வைச்சான்.. இது எங்கேயாவது நடக்குமாங்க..? "
"என்னை இதுநாள் வரைக்கும் ஒரு அடிமைமாதிரிதான் நடத்துனான். எனக்குன்னு ஒரு தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. நல்லதோ கெட்டதோ வியாபாரத்துல அவர் சொல்றபடிதான் கேக்கணும். நான் ஒரு முடிவு சொன்னா அதை அலட்சியப்படுத்திவிடுவார். "
"வியாபார முன்னேற்த்திற்காக நான் சில வழிகள் சொன்னால் அதனை அலட்சியப்படுத்திவிடுவார். "
"எனக்கு கல்யாணமான பிறகு கூட என் பொண்டாட்டிக்கு வடை கூட என்னால வாங்கிக்கொடுக்க முடியாது. அதற்காகவே அவனுக்கு தெரியாம மறைச்சி மறைச்சி கொண்டு வருவேன். மீறி பார்த்துட்டான்னா சத்தம் போட ஆரம்பிச்சுடுவான்.. "
"அது மட்டுமல்ல என்னோட மனைவியை மதிக்கிறதே கிடையாது. வீட்டுக்கு வாழ வந்தவகிட்ட மரியாதையா நடந்துக்க வேண்டாமா..? அவளும் மனுஷிதானுங்க.. "
"இதையெல்லாம் எதிர்த்து கேட்டா வீட்டை விட்டு போகச்சொல்றாரு. நான் ஏன் வீட்டை விட்டு போகணும்? "
"என்னுடைய அம்மாவின் தங்கை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு இவன் ஒரு இடத்தில் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தான்."
"சரி நல்லதுதான் பண்றானுன்னு பார்த்தா.. கல்யாணம் பண்ணி வச்சிட்டு எனது அம்மாவின் தங்கைக்கு, தற்போதைய கணவர் தந்த வீட்டை தனது பெயருக்கு மாற்ற முயற்சிக்கின்றார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.? "
தந்தையின் தவறான போக்கை எண்ணி மனம் குமுறுகின்றார். தன்னை அடக்கி வைத்த தந்தையின் ஆளுமைக்குள் இருந்து வெளிவரத்துடிப்பவர் தந்தையின் தவறை தட்டிக்கேட்க நினைத்ததால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்.
"நான் செத்து என்னுடைய பாடிதான் இந்த வீட்டை விட்டு போகும். அதுவரைக்கும் இங்கதான் இருப்பேன்னு" ஒரு தடவ ஒரு பையனை விட்டு அவங்க அப்பாகிட்ட சொல்லச்சொன்னாரு.
அந்தப்பையன் போய் சொல்லிட்டு முகம் வெளிறிப்போய் வந்து சொன்னான்
உங்கப்பா சொல்றாரு.:
உங்க மேல உங்க தந்தைக்கு அப்படியென்னங்க கோவம்?
"என் மேலயா...அய்யய்யோ அவனுடைய குணமே அப்படித்தான்ங்க.. "
"உங்களுக்கு அவனைப்பற்றி தெரியாது "
"என்னை வீட்டை விட்டு போகச்சொன்னான். நான் போகமாட்டேன்னு சொன்னதால எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று எங்க வீட்டுல கரண்டை கட் பண்ண வச்சுட்டான்னா பாருங்களேன் எந்த அளவுக்கு மோசமா இருக்கான்னு.? "
ஏன் கரண்ட் போனா அவருக்கும் இடைஞ்சல்தானே..?
"அதான்ங்க..தான் கொசுக்கடியில் இருந்தாலும் சரி நான் சந்தோஷமா இருக்க கூடாது.. அதற்குத்தான் நான் வச்சேன் பாரங்க ஆப்பு.. "
"பக்கத்து வீட்டுல இருந்து என்னுடைய அறைக்கு மட்டும் தனியா கரண்ட் கொடுத்துட்டேன். அது அவனுக்கு எரிச்சலாகி மறுபடியும் புகார் கொடுத்துறுக்கான்.நான் திருட்டுத்தனமா பக்கத்து வீட்டுல இருந்து கரண்ட் எடுக்குறேன்னு.. "
"நான் உடனே எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று இது தந்தை - மகன் பிரச்சனைதான் என்று விளக்க வேண்டியதாகிப்போய்விட்டது "
இப்படியெல்லாமாங்க செய்வார் ஒரு தந்தை?
"நிறைய இருக்கு சொல்றதுக்கு. அவர் தீயை பஞ்சை போட்டு அணைக்கும் முயற்சியி-ல் ஈடுபடுறாரு.. தான் போலியாய் வாழ்றதை பெருமையா நினைக்கிறாரு.. "
நான் வேணுமின்னா உங்கப்பாகிட்ட பேசிப்பார்க்கவா..?
"இல்லை வேண்டாம் எனக்காக என்னுடைய நண்பர்கள் அவமானப்படறது எனக்குப்பிடிக்காது "
அவருடை கடைசிகாலத்துல பணத்தை எங்கோ கொண்டுபோகப்போறாரு . நீங்க அவருக்கு ஒரே ஆண்மகன்தானே பின்ன ஏன் இப்படி பண்றாரு?
"அவனுக்கு மகன் தேவையில்லை ஒரு அடிமை தேவை. ஆனால் என்னால் அடிமையாக இருக்க முடியாது. "
என்னை என்னவெல்லாம் சொல்லியிருக்காரு தெரியுமா. ?
"எனக்கு மரியாதை இல்லை. என்னுடைய மனைவிக்கு மரியாதை இல்லை.
அவருடைய ஆளுமைக்குள் அவரைச் சார்ந்து இருக்கிறதால நான் தனியே போய் என்ன பண்ணிறமுடியுமுன்னு கர்வத்துல இருக்காரு. "
"அவர் சொன்ன வார்த்தைகள்தான் என்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. கண்டிப்பா என்னுடைய உழைப்பால நான் முன்னேறிக்காட்டுவேன்" என்று தன் உழைப்பின்மீது உள்ள நம்பிக்கையில் கூறினார்.
அப்பொழுது எனக்கு ஞாபகம் இருந்த பாவிஜய்யின் சில கவிதைகளை சொன்னேன்.
தோல்வியைச் சந்திக்காத யாரையும்
வெற்றிவந்து சந்திக்காது
தோல்வியே அடையாத ஒருவன்
இதுவரை இருந்ததில்லை
தோல்வியோடு மட்டுமே ஒருவன்
இதுவரை இருந்ததில்லை
உனக்குப் பத்துபேரில்
ஒரு எதிரியும் இல்லையென்றால்
நீ முன்னேறவே இல்லை
இந்த தன்னம்பிக்கை வரிகளை நான் எடுத்துச் சொல்லியபொழுது மிகவும் ரசித்தார்.
"போலிஸ்ல போய் புகார் கொடுத்துட்டாரு. அவங்க வந்து என்னய சமாதானப்படுத்தி வீட்டை காலிபண்ணச்சொல்றாங்க.. "
"முன்னாடி ஒரு தடைவை தெரியாத்தனமா பினாமி பெயர்ல வாங்குவதற்குப் பதிலா என் பெயர்ல வீடு வாங்குனதால இப்போ அந்த வீட்டுக்கு நான் போயிட்டேன். "
"இப்போ நான் என் மனைவியையும் என் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியே சென்றாலும் என்னுடைய ரேஷன்கார்டை வைத்து பொருட்கள் வாங்கி விற்று வருகின்றார். என்னுடைய ரேஷன்கார்டை திருப்பி தர மறுக்கிறார். "
"நான் உடனே அந்த ரேஷன் கார்டை அவருக்கு தெரியாமல் எடுத்து கேஸ் சிலிண்டர் எனக்கு கேட்டு எழுதி மண்ணெண்ணெய் வேண்டாம்னு சொல்லிட்டேன். இது கூட அவருக்கு சரியான கடுப்பு "
"என்னுடைய நிலைமை என் குழந்தைக்கு வரக்கூடாது. நான் எனது தந்தையை பார்த்து கேட்ட கேள்விகளை என் பையன் என்னைப்பார்த்து கேட்கக்கூடாது. அப்படித்தான் என்னுடைய பையனை நான் வளர்க்கின்றேன் "
"இப்ப நான் என்னுடைய மனைவிக்கு தைரியமா வடை வாங்கி கொண்டுபோக முடியுது "
"வியாபாரத்துல தனிப்பட்ட முடிவு எடுத்து வெற்றிகரமா கொண்டு செல்ல முடியுது "
"அவர விட்டு வரும்பொழுது என்னுடைய பணம் 0 சதவிகிதம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு வருகின்றேன். "
"உங்களுக்கு தவளை கதை தெரியுமா ?" என்று ஒரு தவளைக் கதையை சொல்ல ஆரும்பித்தார்
இரண்டு தவளைங்க ஒரு பால் கிண்ணத்துல தவறி விழுந்துடுச்சாம். ஒரு தவளை நினைச்சிதாம் நாம அவ்வளவுதான் இதுல இருந்து வெளியே வரவே முடியாது. இதுலேயே இருந்து செத்துறுவோம். அப்படின்னு நினைச்சு நினைச்சே இறந்துபோயிடுச்சாம்.
இன்னொரு தவளை என்ன பண்ணுச்சாம்..? அந்தப்பால்ல தனது கால்களால அடிச்சி அடிச்சி போராடிக்கொண்டிருந்துச்சாம். அது கால்களால் அடிக்க அடிக்க அந்தப் பால் எல்லாம் வெண்ணெயாய் மாற அந்த வெண்ணெயில் ஏறி தப்பிச்சுடுச்சாம்.
"நானும் அந்த இரண்டாவது தவளை மாதிரி.. போராடிக்கொண்டு இருக்கின்றேன். "
என்று ஒரு அருமையான கதையை அவர் சொல்லி முடித்து தன்னுடைய போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தியிருக்கிறார் பாருங்களேன்.
இப்பொழுது இவர் தனது தந்தையின் தொழிலான ஜவுளிக்கடையில் இருந்து பிரிந்து தந்தையின் கடை அருகில் தனியாக ஒரு ஜவுளிக்கடையை நடத்திவருகின்றார்.
"இப்ப கூட என்னை அழைத்து நாம ஒண்ணா தொழில் செய்வோம் வா என்று அழைத்தால் சந்தோஷமாக ஒரு நல்ல மகனா நடந்து பொறுப்பை நான் சுமந்து வியாபாரத்தை பெருக்க என்னால் முடியும். ஆனா அவனுக்கு என்னை அடிமைப்படுத்தாத வாழ்க்கை பிடிக்காது. "
சமீபத்தில் வெளியான எம்டன் மகன் படத்தின் கதையை கேட்டு கூட இவர் ஆதங்கப்பட்டார்.
" நாசர் மாதிரி கதாபாத்திரங்கள் ஏன்தான் இருக்காங்களோ? பெத்த மகனை மத்தவங்களுக்கு முன்னால அவமானப்படுத்துறாங்க. ஏன் இப்படி செய்யுறாங்க..? "
இவருடைய தற்போதைய குறிக்கோள் :வியாபாரம் - வெற்றி - முன்னேற்றம் மட்டும்தான்.
அடிமையாக வாழப்பிடிக்கவில்லை என சுயமரியாதையை விட்டுவிடக்கூடாது என்று வாதிட்டு தந்தையால் விரட்டப்பட்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் காஜா போன்றவர்களின் போராட்டம் மற்ற இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை.
அவர் வாழ்க்கையில் வெற்றிபெற நாமும் பிரார்த்தித்துக் கொள்வோம்.
- ரசிகவ் ஞானியார்
என்னடா பெற்றெடுத்த தந்தையை ஒருமையில் வெறுப்பில் அழைக்கும் அந்த நபர் யார்?
ஒரு பதிவில் ( ஏதாவது செய்யணும் சார்) மகன்களால் விரட்டப்பட்ட தந்தையின் பரிதாப நிலையைப்பற்றி மனம் வருந்தி எழுதியிருந்தேன். அதற்கு எதிர்மாறாக தனது தந்தையின் கொடுமையாலும் ஆதிக்க மனப்பான்மையாலும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையோடும் போராடிக்கொண்டிருக்கும் மனிதரைப்பற்றியது இது..?
அவர் பெயர் காஜாமைதீன். வயது 32க்குள் இருக்கும். நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பு. படிப்பில் ஆர்வமின்றி எட்டாம் வகுப்போடு பள்ளியை முடித்துவிட்டு தந்தையோடு தொழிலில் ஈடுபட்டார். கல்வியறிவுதான் இல்லையென்றாலும் உலக அறிவு அனுபவங்கள் ஏராளம்.
கவிதை இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். நல்ல கவிதைகளை படித்து பாராட்டும் குணம் உடையவர். மனிதநேயம் பற்றிய கவிதைகள் வாசித்துக் காட்டினால் இவர் கண்களில் கண்ணீர் திரள்கள் வந்துவிடும்
எந்தப்பிரச்சனை என்றாலும் இவரை அணுகினால் அதற்கு ஒரு தீர்வு சொல்லுவார். சட்டரீதியாக எந்த எந்த பிரச்சனைக்கு யார் யார் முறையாக அணுகுவது
அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்யும்பொழுது அதனை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பது
இளைஞர் நல மன்றம் விளையாட்டுத் திடல் சிறுவர் பூங்கா அமைப்பது
இரத்ததான முகாம், இலவச மருத்துவ பரிசோதனை என்று எல்லாவிதமான சமூக சேவைகளும் மக்கள் மனிதநேய அமைப்பு என்ற பெயரில் சமூகத்திற்காக சேவைபுரிந்துகொண்டிருக்கின்றார். இவர் மற்றவர்களுக்கு உதவுகின்ற அளவுக்கு வசதியானவர் அல்ல இருந்தாலும் தன்னால் முடிந்தவரை உதவுபவர்.
யாருக்கேனும் இரத்தம் தேவைப்பட்டால் என்னுடைய தொலைபேசி அழைக்கின்ற முதல் நபர் இவர்தான். உடனே தன்னுடைய குடும்பத்தில் உள்ள அவசரம் போல பம்பரமாய் இயங்குபவர்.
சாலையில் நடந்து செல்லும்பொழுது எந்தப்பகுதியிலாவது அசுத்தமாகி ,துப்புரவு செய்யாமல், கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தால், உடனே பேப்பரும் பேனாவும் எடுத்து அதற்குண்டானஅதிகாரிகளிடம் தெரிவிப்பது அல்லது புகைப்படம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு குறையாக சுட்டிக்காட்டி அனுப்பி வைப்பார்
எந்த விசயத்தைப் பற்றி கேட்டாலும் அழகாய் பதிலளிப்பார். இவர் மட்டும் படித்திருந்தால் இவரின் சேவையால் அவரைச்சுற்றியுள்ள சமூகத்திற்கு இதைவிடவும் ஒரு முக்கிய பங்கு கிடைத்திருக்கும்.
இப்படி சுற்றியுள்ள மக்களால் அன்புக்குரியவராக கருதப்படுகின்ற இவர்தான் சொல்கின்றார் தனது தந்தையைப் பற்றி.
"எனது தந்தை வீரப்பன் மாதிரி... .................................."
சுற்றியுள்ள மக்கள் எல்லாரும் மதிக்கின்றார்கள் ஆனால் பெற்றெடுத்த தந்தையால் புரிந்துகொள்ளமுடியவில்லை. தவறு யார் மீது?
பக்கத்தில் உள்ள பொருளின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. அது நம்மை விட்டு விலகிய பிறகுதான் இழப்பின் வலியை உணருவோம்.
தன்னை அடிமையாகவே வளர்க்க ஆசைப்பட்ட தந்தையின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுதந்திரமாய் தனிவியாபாரத்தில் ஈடுபட்டு வாழ்க்கையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருப்பவர்.
"எங்க அப்பா இருக்காரே ஒரு சாடிஸ்ட்..யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது..ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க.. "
"எனது தங்கையின் கணவர் வெளிநாடு சென்று விட்டு 2 வருடம் கழித்து வந்திருக்கின்றார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. எனது தங்கையின் குழந்தை என் வீட்டில் இருக்கின்றது. எனது தங்கை கணவர் வீட்டில் இருந்தாள்.அப்பொழுது எனது தந்தை சொல்லுகின்றார்.. :"
"இந்த குழந்தையை கொண்டு போய் அவர்கிட்டேயே போய் விடுங்க..அப்பத்தான் குழந்தை வளர்ப்போட கஷ்டம் அவருக்கும் தெரியும்.. "
"நல்ல தகப்பனா இருந்தா என்னங்க செய்யணும்? சரி 2 வருடம் கழிச்சி மாப்பிள்ளை வந்துறுக்காரே - மகளும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கணும் குழந்தையை கொஞ்சநேரம் நாம வச்சிருப்போங்கிற எண்ணம் வருதா..? "
"யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது.. "
"நம்ம குழந்தை யார் வீட்டு பிள்ளையையோ அடிச்சிட்டு வந்திருக்கு. அடிபட்ட குழந்தையின் சொந்தக்காரங்க வந்தா என்ன பண்ணுவோம் நாம? "
"நம்ம குழந்தையை கண்டிப்போம். இல்லைனா நாம அடிப்போம். இல்லை வலி அதிகம் உணராதபடி அடிப்போம்.ஆனா எங்கப்பன் என்ன பண்ணுனான்னு தெரியுமா.. அடிபட்ட குழந்தைக்கு சொந்தக்காரங்களை விட்டே என்னை அடிக்க வைச்சான்.. இது எங்கேயாவது நடக்குமாங்க..? "
"என்னை இதுநாள் வரைக்கும் ஒரு அடிமைமாதிரிதான் நடத்துனான். எனக்குன்னு ஒரு தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. நல்லதோ கெட்டதோ வியாபாரத்துல அவர் சொல்றபடிதான் கேக்கணும். நான் ஒரு முடிவு சொன்னா அதை அலட்சியப்படுத்திவிடுவார். "
"வியாபார முன்னேற்த்திற்காக நான் சில வழிகள் சொன்னால் அதனை அலட்சியப்படுத்திவிடுவார். "
"எனக்கு கல்யாணமான பிறகு கூட என் பொண்டாட்டிக்கு வடை கூட என்னால வாங்கிக்கொடுக்க முடியாது. அதற்காகவே அவனுக்கு தெரியாம மறைச்சி மறைச்சி கொண்டு வருவேன். மீறி பார்த்துட்டான்னா சத்தம் போட ஆரம்பிச்சுடுவான்.. "
"அது மட்டுமல்ல என்னோட மனைவியை மதிக்கிறதே கிடையாது. வீட்டுக்கு வாழ வந்தவகிட்ட மரியாதையா நடந்துக்க வேண்டாமா..? அவளும் மனுஷிதானுங்க.. "
"இதையெல்லாம் எதிர்த்து கேட்டா வீட்டை விட்டு போகச்சொல்றாரு. நான் ஏன் வீட்டை விட்டு போகணும்? "
"என்னுடைய அம்மாவின் தங்கை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு இவன் ஒரு இடத்தில் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தான்."
"சரி நல்லதுதான் பண்றானுன்னு பார்த்தா.. கல்யாணம் பண்ணி வச்சிட்டு எனது அம்மாவின் தங்கைக்கு, தற்போதைய கணவர் தந்த வீட்டை தனது பெயருக்கு மாற்ற முயற்சிக்கின்றார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.? "
தந்தையின் தவறான போக்கை எண்ணி மனம் குமுறுகின்றார். தன்னை அடக்கி வைத்த தந்தையின் ஆளுமைக்குள் இருந்து வெளிவரத்துடிப்பவர் தந்தையின் தவறை தட்டிக்கேட்க நினைத்ததால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்.
"நான் செத்து என்னுடைய பாடிதான் இந்த வீட்டை விட்டு போகும். அதுவரைக்கும் இங்கதான் இருப்பேன்னு" ஒரு தடவ ஒரு பையனை விட்டு அவங்க அப்பாகிட்ட சொல்லச்சொன்னாரு.
அந்தப்பையன் போய் சொல்லிட்டு முகம் வெளிறிப்போய் வந்து சொன்னான்
உங்கப்பா சொல்றாரு.:
"செத்தபிறகு வேணுமின்னா உங்க பாடியை வீட்டுக்கு கொண்டுவந்துட்டு அடக்கம் பண்ண அனுப்பலாம்னு சொல்றாருங்க என்று அந்தப்பையன் கூற எனக்கு அவரது தந்தையின் மீது பெரும் வெறுப்பு கிளம்பிற்று. அப்படி என்ன மகன் மீது அந்த அளவிற்கு வெறுப்பு? "எந்த தந்தையாவது மகனை இப்படிச் சொல்வாங்களாங்க..? என்னு என்னிடம் புலம்பினார் .
உங்க மேல உங்க தந்தைக்கு அப்படியென்னங்க கோவம்?
"என் மேலயா...அய்யய்யோ அவனுடைய குணமே அப்படித்தான்ங்க.. "
"உங்களுக்கு அவனைப்பற்றி தெரியாது "
"என்னை வீட்டை விட்டு போகச்சொன்னான். நான் போகமாட்டேன்னு சொன்னதால எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று எங்க வீட்டுல கரண்டை கட் பண்ண வச்சுட்டான்னா பாருங்களேன் எந்த அளவுக்கு மோசமா இருக்கான்னு.? "
ஏன் கரண்ட் போனா அவருக்கும் இடைஞ்சல்தானே..?
"அதான்ங்க..தான் கொசுக்கடியில் இருந்தாலும் சரி நான் சந்தோஷமா இருக்க கூடாது.. அதற்குத்தான் நான் வச்சேன் பாரங்க ஆப்பு.. "
"பக்கத்து வீட்டுல இருந்து என்னுடைய அறைக்கு மட்டும் தனியா கரண்ட் கொடுத்துட்டேன். அது அவனுக்கு எரிச்சலாகி மறுபடியும் புகார் கொடுத்துறுக்கான்.நான் திருட்டுத்தனமா பக்கத்து வீட்டுல இருந்து கரண்ட் எடுக்குறேன்னு.. "
"நான் உடனே எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று இது தந்தை - மகன் பிரச்சனைதான் என்று விளக்க வேண்டியதாகிப்போய்விட்டது "
இப்படியெல்லாமாங்க செய்வார் ஒரு தந்தை?
"நிறைய இருக்கு சொல்றதுக்கு. அவர் தீயை பஞ்சை போட்டு அணைக்கும் முயற்சியி-ல் ஈடுபடுறாரு.. தான் போலியாய் வாழ்றதை பெருமையா நினைக்கிறாரு.. "
நான் வேணுமின்னா உங்கப்பாகிட்ட பேசிப்பார்க்கவா..?
"இல்லை வேண்டாம் எனக்காக என்னுடைய நண்பர்கள் அவமானப்படறது எனக்குப்பிடிக்காது "
அவருடை கடைசிகாலத்துல பணத்தை எங்கோ கொண்டுபோகப்போறாரு . நீங்க அவருக்கு ஒரே ஆண்மகன்தானே பின்ன ஏன் இப்படி பண்றாரு?
"அவனுக்கு மகன் தேவையில்லை ஒரு அடிமை தேவை. ஆனால் என்னால் அடிமையாக இருக்க முடியாது. "
என்னை என்னவெல்லாம் சொல்லியிருக்காரு தெரியுமா. ?
"எனக்கு மரியாதை இல்லை. என்னுடைய மனைவிக்கு மரியாதை இல்லை.
அவருடைய ஆளுமைக்குள் அவரைச் சார்ந்து இருக்கிறதால நான் தனியே போய் என்ன பண்ணிறமுடியுமுன்னு கர்வத்துல இருக்காரு. "
"அவர் சொன்ன வார்த்தைகள்தான் என்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. கண்டிப்பா என்னுடைய உழைப்பால நான் முன்னேறிக்காட்டுவேன்" என்று தன் உழைப்பின்மீது உள்ள நம்பிக்கையில் கூறினார்.
அப்பொழுது எனக்கு ஞாபகம் இருந்த பாவிஜய்யின் சில கவிதைகளை சொன்னேன்.
தோல்வியைச் சந்திக்காத யாரையும்
வெற்றிவந்து சந்திக்காது
தோல்வியே அடையாத ஒருவன்
இதுவரை இருந்ததில்லை
தோல்வியோடு மட்டுமே ஒருவன்
இதுவரை இருந்ததில்லை
உனக்குப் பத்துபேரில்
ஒரு எதிரியும் இல்லையென்றால்
நீ முன்னேறவே இல்லை
இந்த தன்னம்பிக்கை வரிகளை நான் எடுத்துச் சொல்லியபொழுது மிகவும் ரசித்தார்.
"போலிஸ்ல போய் புகார் கொடுத்துட்டாரு. அவங்க வந்து என்னய சமாதானப்படுத்தி வீட்டை காலிபண்ணச்சொல்றாங்க.. "
"முன்னாடி ஒரு தடைவை தெரியாத்தனமா பினாமி பெயர்ல வாங்குவதற்குப் பதிலா என் பெயர்ல வீடு வாங்குனதால இப்போ அந்த வீட்டுக்கு நான் போயிட்டேன். "
"இப்போ நான் என் மனைவியையும் என் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியே சென்றாலும் என்னுடைய ரேஷன்கார்டை வைத்து பொருட்கள் வாங்கி விற்று வருகின்றார். என்னுடைய ரேஷன்கார்டை திருப்பி தர மறுக்கிறார். "
"நான் உடனே அந்த ரேஷன் கார்டை அவருக்கு தெரியாமல் எடுத்து கேஸ் சிலிண்டர் எனக்கு கேட்டு எழுதி மண்ணெண்ணெய் வேண்டாம்னு சொல்லிட்டேன். இது கூட அவருக்கு சரியான கடுப்பு "
"என்னுடைய நிலைமை என் குழந்தைக்கு வரக்கூடாது. நான் எனது தந்தையை பார்த்து கேட்ட கேள்விகளை என் பையன் என்னைப்பார்த்து கேட்கக்கூடாது. அப்படித்தான் என்னுடைய பையனை நான் வளர்க்கின்றேன் "
"இப்ப நான் என்னுடைய மனைவிக்கு தைரியமா வடை வாங்கி கொண்டுபோக முடியுது "
"வியாபாரத்துல தனிப்பட்ட முடிவு எடுத்து வெற்றிகரமா கொண்டு செல்ல முடியுது "
"அவர விட்டு வரும்பொழுது என்னுடைய பணம் 0 சதவிகிதம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு வருகின்றேன். "
"உங்களுக்கு தவளை கதை தெரியுமா ?" என்று ஒரு தவளைக் கதையை சொல்ல ஆரும்பித்தார்
இரண்டு தவளைங்க ஒரு பால் கிண்ணத்துல தவறி விழுந்துடுச்சாம். ஒரு தவளை நினைச்சிதாம் நாம அவ்வளவுதான் இதுல இருந்து வெளியே வரவே முடியாது. இதுலேயே இருந்து செத்துறுவோம். அப்படின்னு நினைச்சு நினைச்சே இறந்துபோயிடுச்சாம்.
இன்னொரு தவளை என்ன பண்ணுச்சாம்..? அந்தப்பால்ல தனது கால்களால அடிச்சி அடிச்சி போராடிக்கொண்டிருந்துச்சாம். அது கால்களால் அடிக்க அடிக்க அந்தப் பால் எல்லாம் வெண்ணெயாய் மாற அந்த வெண்ணெயில் ஏறி தப்பிச்சுடுச்சாம்.
"நானும் அந்த இரண்டாவது தவளை மாதிரி.. போராடிக்கொண்டு இருக்கின்றேன். "
என்று ஒரு அருமையான கதையை அவர் சொல்லி முடித்து தன்னுடைய போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தியிருக்கிறார் பாருங்களேன்.
இப்பொழுது இவர் தனது தந்தையின் தொழிலான ஜவுளிக்கடையில் இருந்து பிரிந்து தந்தையின் கடை அருகில் தனியாக ஒரு ஜவுளிக்கடையை நடத்திவருகின்றார்.
"இப்ப கூட என்னை அழைத்து நாம ஒண்ணா தொழில் செய்வோம் வா என்று அழைத்தால் சந்தோஷமாக ஒரு நல்ல மகனா நடந்து பொறுப்பை நான் சுமந்து வியாபாரத்தை பெருக்க என்னால் முடியும். ஆனா அவனுக்கு என்னை அடிமைப்படுத்தாத வாழ்க்கை பிடிக்காது. "
சமீபத்தில் வெளியான எம்டன் மகன் படத்தின் கதையை கேட்டு கூட இவர் ஆதங்கப்பட்டார்.
" நாசர் மாதிரி கதாபாத்திரங்கள் ஏன்தான் இருக்காங்களோ? பெத்த மகனை மத்தவங்களுக்கு முன்னால அவமானப்படுத்துறாங்க. ஏன் இப்படி செய்யுறாங்க..? "
இவருடைய தற்போதைய குறிக்கோள் :வியாபாரம் - வெற்றி - முன்னேற்றம் மட்டும்தான்.
அடிமையாக வாழப்பிடிக்கவில்லை என சுயமரியாதையை விட்டுவிடக்கூடாது என்று வாதிட்டு தந்தையால் விரட்டப்பட்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் காஜா போன்றவர்களின் போராட்டம் மற்ற இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை.
அவர் வாழ்க்கையில் வெற்றிபெற நாமும் பிரார்த்தித்துக் கொள்வோம்.
- ரசிகவ் ஞானியார்
Tuesday, January 23, 2007
இறைவனின் சிறப்புக் குழந்தைகள்
"அட அநாதைப்பயலே.. "
"நீ ஒரு அநாதைடா.. "
என்று சினிமாத்தனமான வசனங்கள் நிறைய கண்டிருக்கின்றோம். ஆனால் அவ்வாறு சொல்லப்படும்பொழுது அந்த அநாதைகளின் மனநிலை எப்படியிருக்கும்?

பார்த்திபனின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை:
இன்னொரு மனிதன்
இருக்கும்வரை
எவனுமே அநாதையில்லை.
இந்த மனிதநேய உணர்வுகள் அனைவருக்கும் வந்துவிட்டால் அநாதைகள் என்ற வார்த்தை அநாதையாகிவிடும்.
தந்தை தாயை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்தேசத்தில் பணிபுரிபவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் பிரிவின் வலி. வீட்டில் இருக்கும்பொழுது அம்மா சமைத்துக்கொடுப்பதைக் குறைசொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதனை விடவும் திருப்தியில்லாத உணவு கிடைக்கும்பொழுதுதான் அம்மாவின் சமையல் அருமை புரிய ஆரம்பிக்கும்.
குறைசொல்லியே ...
சாப்பிட்ட நான்,
இப்பொழுது
குறைகளை மட்டும்தானம்மா ..
சாப்பிடுகின்றேன்!
கொஞ்சநேரம் அம்மா வீட்டில் இல்லையென்றாலே மனசு என்னவோ மாதிரி இருக்கின்றது. ஆனால் அம்மா அப்பாவே இல்லாத வாழ்க்கை என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.
இன்று திருவனந்தபுரம் சென்று விட்டு வரும்பொழுது பாதையில் ஒரு மொட்டை மனிதர் வெயிலில் கிழிந்த அழுக்கு ஆடையணிந்து கையில் வெற்று தண்ணீர் பாட்டிலுடன் நடந்து கொண்டிருந்தார்.
பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது. நண்பனிடம் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த கேக் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தேன். ஆவலுடன் வாங்கி தின்று கொண்டே அந்த கடும் வெயிலில் நடந்து சென்றார். ஆனால் அடுத்தவேளை உணவுக்கு அவருக்கு யார் கொடுப்பது? எங்கு செல்வார்?
நான் கொஞ்சநேரம் உணவருந்த தாமதமாகிவிட்டாலே அம்மாவின் குரல் ஓங்கி கேட்க ஆரம்பித்துவிடும்
"அங்க என்னடா பண்றே..வந்து சாப்பிடுடா "
"டேய் என்னடா இன்னமுமா சாப்பிடலை.."
நமக்கு பசிக்குமோ, இல்லையோ? நம்முடைய பசியை தாங்கிக்கொள்ளும் சக்தி எந்த தாய்க்கும் கிடையாது.
ஆனால் அந்த மொட்டை மனிதர் சாப்பிட தாமதமாகி விட்டாலோ அல்லது சாப்பாடே கிடைக்கவில்லையெனில் அவருக்கு யார் வந்து கேட்ககூடுமோ..?
"தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்.
இறைவன் தான் எங்கும் வந்துகொண்டிருக்கமுடியாது என்றுதான் அன்னையை படைத்ததாக தாயின் பெருமையைப்பற்றி சிறப்பித்துக் கூறுவார்கள்.
ஆனால் இறைவன் தாயில்லாமல் இருப்பவர்களுக்கு தானே நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கின்றானோ..?
உடல் ஊனமுற்றவர்களை, மாற்றுத்திறன் உடையவர்கள் என்று அழைப்பது போல அநாதைகளை, அநாதைகள் என்று அழைக்காதீர்கள், இறைவனின் சிறப்புக் குழந்தைகள் என்று அழையுங்களேன் ப்ளீஸ்..
"இறைவனின் சிறப்புக்குழந்தைகள் காப்பகம் "
"டேய்! நீ அப்பா அம்மா இல்லாத இறைவனின் சிறப்புக் குழந்தைடா "
என்று சொல்ல ஆரம்பித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் எண்ணிப்பாருங்கள்.? யாரிடம் முறையிட்டு இவற்றை மாற்றச் சொல்வது?
அது மட்டுமல்ல இதுபோன்ற வெளியில் திரிகின்ற இறைவனின் சிறப்புக் குழந்தைகளை அரசாங்கம் கவனித்து அவர்களுக்கு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுக்கலாமே..?
-ரசிகவ் ஞானியார்
"நீ ஒரு அநாதைடா.. "
என்று சினிமாத்தனமான வசனங்கள் நிறைய கண்டிருக்கின்றோம். ஆனால் அவ்வாறு சொல்லப்படும்பொழுது அந்த அநாதைகளின் மனநிலை எப்படியிருக்கும்?
பார்த்திபனின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை:
இன்னொரு மனிதன்
இருக்கும்வரை
எவனுமே அநாதையில்லை.
இந்த மனிதநேய உணர்வுகள் அனைவருக்கும் வந்துவிட்டால் அநாதைகள் என்ற வார்த்தை அநாதையாகிவிடும்.
தந்தை தாயை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்தேசத்தில் பணிபுரிபவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் பிரிவின் வலி. வீட்டில் இருக்கும்பொழுது அம்மா சமைத்துக்கொடுப்பதைக் குறைசொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதனை விடவும் திருப்தியில்லாத உணவு கிடைக்கும்பொழுதுதான் அம்மாவின் சமையல் அருமை புரிய ஆரம்பிக்கும்.
குறைசொல்லியே ...
சாப்பிட்ட நான்,
இப்பொழுது
குறைகளை மட்டும்தானம்மா ..
சாப்பிடுகின்றேன்!
கொஞ்சநேரம் அம்மா வீட்டில் இல்லையென்றாலே மனசு என்னவோ மாதிரி இருக்கின்றது. ஆனால் அம்மா அப்பாவே இல்லாத வாழ்க்கை என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.
இன்று திருவனந்தபுரம் சென்று விட்டு வரும்பொழுது பாதையில் ஒரு மொட்டை மனிதர் வெயிலில் கிழிந்த அழுக்கு ஆடையணிந்து கையில் வெற்று தண்ணீர் பாட்டிலுடன் நடந்து கொண்டிருந்தார்.
பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது. நண்பனிடம் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த கேக் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தேன். ஆவலுடன் வாங்கி தின்று கொண்டே அந்த கடும் வெயிலில் நடந்து சென்றார். ஆனால் அடுத்தவேளை உணவுக்கு அவருக்கு யார் கொடுப்பது? எங்கு செல்வார்?
நான் கொஞ்சநேரம் உணவருந்த தாமதமாகிவிட்டாலே அம்மாவின் குரல் ஓங்கி கேட்க ஆரம்பித்துவிடும்
"அங்க என்னடா பண்றே..வந்து சாப்பிடுடா "
"டேய் என்னடா இன்னமுமா சாப்பிடலை.."
நமக்கு பசிக்குமோ, இல்லையோ? நம்முடைய பசியை தாங்கிக்கொள்ளும் சக்தி எந்த தாய்க்கும் கிடையாது.
ஆனால் அந்த மொட்டை மனிதர் சாப்பிட தாமதமாகி விட்டாலோ அல்லது சாப்பாடே கிடைக்கவில்லையெனில் அவருக்கு யார் வந்து கேட்ககூடுமோ..?
"தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்.
இறைவன் தான் எங்கும் வந்துகொண்டிருக்கமுடியாது என்றுதான் அன்னையை படைத்ததாக தாயின் பெருமையைப்பற்றி சிறப்பித்துக் கூறுவார்கள்.
ஆனால் இறைவன் தாயில்லாமல் இருப்பவர்களுக்கு தானே நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கின்றானோ..?
உடல் ஊனமுற்றவர்களை, மாற்றுத்திறன் உடையவர்கள் என்று அழைப்பது போல அநாதைகளை, அநாதைகள் என்று அழைக்காதீர்கள், இறைவனின் சிறப்புக் குழந்தைகள் என்று அழையுங்களேன் ப்ளீஸ்..
"இறைவனின் சிறப்புக்குழந்தைகள் காப்பகம் "
"டேய்! நீ அப்பா அம்மா இல்லாத இறைவனின் சிறப்புக் குழந்தைடா "
என்று சொல்ல ஆரம்பித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் எண்ணிப்பாருங்கள்.? யாரிடம் முறையிட்டு இவற்றை மாற்றச் சொல்வது?
அது மட்டுமல்ல இதுபோன்ற வெளியில் திரிகின்ற இறைவனின் சிறப்புக் குழந்தைகளை அரசாங்கம் கவனித்து அவர்களுக்கு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுக்கலாமே..?
-ரசிகவ் ஞானியார்
Sunday, January 21, 2007
ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?
மந்ருந்ந்ந்துந்ச்ந் சீந்ட்ந்டுந்
"என்னடா என்ன எழுதியிருக்கான்னு குழப்பமா இருக்கா? மருந்து சீட்டுங்கிறதான் இப்படி எழுதியிருக்கேன்பா.. "
நேற்று எனது உறவினரின் ஒருவருக்கு மாத்திரைகள் வாங்குவதற்கா மருத்துவர் எழுதிக்கொடுத்த கோழிக்கிறுக்கல்களை எடுத்துக்கொண்டு பார்மஸிக்குச் சென்றேன்.
அவன் பார்த்த உடனையே 2 மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தான்.
"ஹலோ என்ன தந்திருக்கீங்க "
"குரோசின் சார் அதானே எழுதியிருக்கு "
"குரோசின் இல்லைங்க நல்லா படிச்சுப் பாருங்க..குராடன்" - வேறு ஒரு மருந்து எழுதப்பட்டிருந்தது.
"அய்யோ! சாரி சாரிங்க அவங்க அதுமாதிரிதான் எழுதியிருக்காங்க என்ன செய்ய? "என்று மாத்திக் கொடுத்தார்
எனக்கு மருந்து கடைக்காரர் மீது ஆத்திரம் வரவேயில்லை. மாறாக அதனை எழுதிக்கொடுத்த டாக்டர்மீதுதான் கோபமாக வந்தது.
டாக்டர்னா என்னங்க கொம்பா முளைச்சிருக்கு? ஏன் இப்படி கோழி கிறுக்குற மாதிரி கிறுக்குறாங்க.. இல்லை அவங்க மருத்துவ படிப்பில் ஏதேனும் சட்டதிட்டம் இருக்கா..இப்படித்தான் எழுதணும்னு? ஒழுங்கா தெளிவா எழுதுன அவங்க கௌரவம் குறைஞ்சாங்க போயிடும்.

இல்லை மருத்துவக் கல்லூரிக்கும் கோழிகளுக்கும் கையெழுத்து விசயத்தில் பரஸ்பர ஒப்பந்தம் பண்ணியிருக்காங்களோ..? அல்லது அவங்க எல்கேஜியில எழுத பழகியதை இன்னமும் மறக்காமல் இருக்கின்றார்களா?
ஒரு டாக்டர் இப்படி எழுதுனா சரி கையெழுத்து அப்படி என்று அவர் தலையெழுத்தை நொந்து கொள்ளலாம் . ஆனால் சொல்லிவைத்தாற்போன்று எல்லா மருத்துவர்களும் இப்படித்தான் எழுதுறாங்க..
இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விசயங்க..அதனால மருத்துவர்கள் எல்லாம் கவனமா எழுதிக் கொடுக்கணுங்குறதுதான் என்னோட கோரிக்கை..
ஒரு திரைப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவனாக நடித்த விவேக் ஒரு காட்சியில்
இது நகைச்சுவையாக அவர் சொன்னாலும் சிந்திக்க வேண்டிய விசயம். அப்படி எழுதுனாத்தான் மக்கள் அவரை ஒரு பக்குவப்பட்ட மருத்துவராக ஏற்றுக்கொள்வார்களோ..?
நான் கூட ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தேன்
இப்படி கோழிகிறுக்கல்களினால் என்றேனும் பயங்கர உயிர்ப்பலிகள் நேர்ந்தவுடன்தான் அரசாங்கம் இதனைக் கவனிக்குமோ?
எதுக்கெல்லாமோ போராடுறாங்க..இதுக்கு மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடக்கூடாதாங்க..
ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?
- ரசிகவ் ஞானியார்.
"என்னடா என்ன எழுதியிருக்கான்னு குழப்பமா இருக்கா? மருந்து சீட்டுங்கிறதான் இப்படி எழுதியிருக்கேன்பா.. "
நேற்று எனது உறவினரின் ஒருவருக்கு மாத்திரைகள் வாங்குவதற்கா மருத்துவர் எழுதிக்கொடுத்த கோழிக்கிறுக்கல்களை எடுத்துக்கொண்டு பார்மஸிக்குச் சென்றேன்.
அவன் பார்த்த உடனையே 2 மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தான்.
"ஹலோ என்ன தந்திருக்கீங்க "
"குரோசின் சார் அதானே எழுதியிருக்கு "
"குரோசின் இல்லைங்க நல்லா படிச்சுப் பாருங்க..குராடன்" - வேறு ஒரு மருந்து எழுதப்பட்டிருந்தது.
"அய்யோ! சாரி சாரிங்க அவங்க அதுமாதிரிதான் எழுதியிருக்காங்க என்ன செய்ய? "என்று மாத்திக் கொடுத்தார்
எனக்கு மருந்து கடைக்காரர் மீது ஆத்திரம் வரவேயில்லை. மாறாக அதனை எழுதிக்கொடுத்த டாக்டர்மீதுதான் கோபமாக வந்தது.
டாக்டர்னா என்னங்க கொம்பா முளைச்சிருக்கு? ஏன் இப்படி கோழி கிறுக்குற மாதிரி கிறுக்குறாங்க.. இல்லை அவங்க மருத்துவ படிப்பில் ஏதேனும் சட்டதிட்டம் இருக்கா..இப்படித்தான் எழுதணும்னு? ஒழுங்கா தெளிவா எழுதுன அவங்க கௌரவம் குறைஞ்சாங்க போயிடும்.
இல்லை மருத்துவக் கல்லூரிக்கும் கோழிகளுக்கும் கையெழுத்து விசயத்தில் பரஸ்பர ஒப்பந்தம் பண்ணியிருக்காங்களோ..? அல்லது அவங்க எல்கேஜியில எழுத பழகியதை இன்னமும் மறக்காமல் இருக்கின்றார்களா?
ஒரு டாக்டர் இப்படி எழுதுனா சரி கையெழுத்து அப்படி என்று அவர் தலையெழுத்தை நொந்து கொள்ளலாம் . ஆனால் சொல்லிவைத்தாற்போன்று எல்லா மருத்துவர்களும் இப்படித்தான் எழுதுறாங்க..
இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விசயங்க..அதனால மருத்துவர்கள் எல்லாம் கவனமா எழுதிக் கொடுக்கணுங்குறதுதான் என்னோட கோரிக்கை..
ஒரு திரைப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவனாக நடித்த விவேக் ஒரு காட்சியில்
"அய்யா என்னய்யா எழுதியிருக்கீங்க ஒண்ணுமே புரியமாட்டேங்குது ? "
"சும்மா விக்ஸ்ங்கிறதத்தான்டா அப்படி சுத்தி சுத்தி
எழுதியிருக்கின்னு."
இது நகைச்சுவையாக அவர் சொன்னாலும் சிந்திக்க வேண்டிய விசயம். அப்படி எழுதுனாத்தான் மக்கள் அவரை ஒரு பக்குவப்பட்ட மருத்துவராக ஏற்றுக்கொள்வார்களோ..?
நான் கூட ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தேன்
மெடிக்கல் ரெப்பின் காதல் கவிதை
கடைசி வரை புரியவேயில்லையடி ...
உனது
காதல் !
அந்த
டாக்டரின் கையெழுத்துப்போலவே !
இப்படி கோழிகிறுக்கல்களினால் என்றேனும் பயங்கர உயிர்ப்பலிகள் நேர்ந்தவுடன்தான் அரசாங்கம் இதனைக் கவனிக்குமோ?
எதுக்கெல்லாமோ போராடுறாங்க..இதுக்கு மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடக்கூடாதாங்க..
ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?
- ரசிகவ் ஞானியார்.
Thursday, January 18, 2007
தயவுசெய்து வாங்கிக்கோங்க
Tuesday, January 16, 2007
எண்(ன்) குழப்பம்
இன்று வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று செக்கில் One Hundred Thousand Only (100,000/-) என்று எழுதி அவர்களிடம் கொடுத்தேன். வாங்கிய அதிகாரி ஏதோ நான் கொலைக்குற்றம் செய்தது போல குதிக்கிறார்.
அந்தச் செக்கை பக்கத்தில் உள்ள அதிகாரியிடம் கொடுத்து விவாதிக்கின்றார். அவர் அவருக்கு பக்கத்தில் உள்ள பெண் ஊழியரிடம் காண்பித்த நக்கலாகச் சிரிக்கிறார்.
"இல்லை சார் திருப்பிக் கொடுத்துறுங்க.. "
"இது என்ன இப்படி எழுதியிருக்காங்க" என்று ஆளாளுக்கு சத்தம் போட நான்
"சார்.. சார்ர்ர்.. என்று கத்தினேன்.
என்னடா வங்கியில் இப்படி கத்துகிறார் என்று அவர்கள் திரும்பி பார்க்க.
"வெளிநாடுகளில் எல்லாம் இப்படித்தான் சார் எழுவாங்க..அதான் அப்படி எழுதிட்டேன். "- என்று கூறினேன்
"எந்த நாடு சார்? "
"துபாய்ல .."
"நீங்க இப்ப இந்தியால இருக்கீங்க சார் முதல்ல இந்தியாவுக்கு வாங்க..? "
"அப்படின்னா நான் பணத்தை வங்கியில் போடும்பொழுது இருந்த செக்கில் இப்படித்தானே எழுதியிருந்துச்சு அப்ப யாரும் ஒண்ணுமே சொல்லலையே. பணம் போடும்போது கண்டுக்கமாட்டீங்க..எடுக்கும்போது மட்டும் நக்கலா பார்க்குறீங்க..இது என்ன நியாயம் சார்? "
"அந்த செக் துபாய்ல இருந்து வந்ததுனால அவங்க வழக்கப்படி எழுதியிருக்காங்க.." என்று விளக்கமளித்தார்.
எப்படியோ விவாதத்திற்குப் பிறகு பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். பணத்தைப்பெற்றுக்கொண்டு நக்கலடித்த ஊழியர்களைப் பார்த்து லேசாய் புன்னகை சிந்திவிட்டு நகர்ந்தேன்.
அப்படியே கண்களுக்கு முன்னால் ஒரு கொசுவர்த்தி சுருள் ஒன்று வலம் வருகின்றது. அதான்ங்க ப்ளாஷ்பேக்..
நான் துபாயில் வேலைக்கு சேர்ந்தபொழுது இதே பிரச்சனை ஏற்பட்டது
யாருக்கோ பணம் கொடுப்பதற்காக சுமார் 2,50,000 பணத்தை Two Lakhs Fifty Thousand என்று எழுதினேன்.
ஒப்புதல் வாங்குவதற்காக மேலாளரிடம் கொண்டு சென்றபொழுது அந்த எகிப்து மேலாளர் என்னைக் கடிச்சித் துப்பிட்டாருப்பா..
"என்ன எழுதியிருக்கீங்க ?"
" சரியாத்தானே எழுதியிருக்கேன்" என்று மறுபடியும் நான் எழுதியதை சரிபார்த்தேன்.
"இது என்ன Lakhs ..?"என்று விநோதமாய் கேட்டார்
என்னடா முட்டாப்பசங்களா இருக்காங்க லட்சம்னா என்னன்னு தெரியாதா இவங்களுக்கு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு 2 லட்சம் என்று விளக்கினேன்.
ஒன்றுமே பேசவில்லை சரியாய் எழுதிவிட்டு வருமாறு கூறினார்.
நான் குழப்பத்துடன் வந்து அமர்ந்தேன். எதைத் திருத்தச் சொல்றார். ஒருவேளை ( , )கமா எதுவும் போடாமல் விட்டுவிட்டோமா என்று பார்த்தேன் சரியாகத்தான் போட்டிருந்தேன்.
எனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் இந்திய நண்பரிடம் கேட்டேன்.
அவர்தான் விளக்கினார். "இவங்க இப்படி எழுதமாட்டாங்க என்று Two Hundred Fifty Thousand என்று எழுதிக்காட்டினார்.
அப்பொழுதான் எனக்கு விளங்கியது அட இவனுங்க லட்சத்தை உபயோகிக்க மாட்டங்க என்று. லட்சத்தையெல்லாம் ஆயிரத்தில் தான் உச்சரிக்கின்றார்கள். லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தானா? இல்லை மற்ற நாடுகள் எங்கேனும் கடைப்பிடிக்கின்றார்களா? யாராவது சொல்லுங்களேன்.
- ரசிகவ் ஞானியார்
Friday, January 12, 2007
விடைபெறுகின்றேன்
என் இனிய ஜனநாயக எண்ணெய் வியாபாரியே
என் இனிய
ஜனநாயக எண்ணெய் வியாபாரியே!
உன்
கறுப்படைந்த கலாச்சாரத்தில்..
தூக்குதண்டனைதான்
ராஜ உபசாரமா?
உன்
எண்ணெய் வியாபாரத்திற்கு..
இன்னொரு பெயர்
ஜனநாயகமா?
தூக்கிலிடப்பட்டது..
சதாம் மட்டுமல்ல
உன்னுடைய பாதுகாப்பும்தான்!
அவன் விளையாடி மகிழ்ந்த
சிறுவயதுக் கோலிக்குண்டுகள்..
உன்
அசுரப்பார்வைக்கு ஏன்..
அணுகுண்டாய் தெரிந்தது?
மரணத்தை அவன் ..
மகிழ்ச்சியோடு அழைத்தான்!
மரணபயத்தை நீ..
கறுப்புத்துணி அணிந்து
மறைத்தாய்!
தவளையை தொண்டைக்குள்
தக்கவைத்த
பாம்பு எப்படி..
பச்சாதாபம் காட்டும்?
எந்த சரித்திரத்தையும்..
ஒரு
மரணம் வந்து
முடித்துவிடாது!
அவன்
உயிர் பிரிந்தது
இறப்பு அல்ல!
அது
கண்களுக்கு மறைக்கப்பட்ட
உயிர்பித்தல்!
அவன்
மரணிக்கும்பொழுது விட்ட
கடைசி மூச்சுக்காற்று...
இன்னமும்
ஈராக்கில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறதாம்!
உனது
சாம்ராஜ்யம்
சமுத்திரமாகிவிட்டதாக நினைக்கின்றாய்!
ஆனால் புரிந்துகொள்
உனது
பாதுகாப்புதான்..
பனித்துளியாகிவிட்டது!
தீவிரவாதி என்று
நீ
பட்டம் சூட்டியவன்..
தியாகியாகிவிட்டான்!
தியாகி போல நடிக்கின்ற ..
நீ
தீவிரவாதியாகிவிட்டாய்!
அப்பாவிகளைக் கொன்றதற்கு
மரணதண்டனையா?
ஒத்துக்கொள்கிறேன்
ஆனால்
உனக்கான தூக்குக்கயிறு
சதாமின்
காலடியில் அல்லவா
கண்டுபிடித்திருக்க வேண்டும்!
ஈராக்கில் நீ வெட்டிய
ஒவ்வொரு
பதுங்குகுழிக்குப்
பக்கத்திலும்
உனக்கும் ஒரு குழி
தோண்டப்பட்டது ..
உன்
சாட்டிலைட்டுக்கு தெரியவில்லையா?
சதாமின்
புதைகுழியில் இருந்து
புறப்படுகின்ற..
புற்களை வெட்டிவிடு!
யாருக்குத் தெரியும்?
அதிலிருந்து கூட உனக்கு
ஆயுதம் தயாராகலாம்!
உனக்கு
குண்டு போட்டு
குண்டு போட்டு..
களைத்துவிட்டது!
எங்களுக்கு
செத்து செத்து..
சோர்வாகிவிட்டது!
புஷ்ஷே!
எந்த புத்தாண்டில் ...
நீ சபதம் எடுக்கப்போகின்றாய்?
மனிதனாய் மாறப்போவதாக!
சதாமைப்போலவே
இந்தக் கவிதையும்
முடிந்துவிட்டது
ஆனால்
முற்றுப்பெறவில்லை........
- ரசிகவ் ஞானியார்
Tuesday, January 09, 2007
Friday, January 05, 2007
ஏதாவது செய்யணும் சார்..?
"தம்பி கோர்ட்டுக்கு எப்படி போகணும்..?"
சுமார் 70 வயது இருக்கும் அந்தப் பெரியவர்க்கு. அழுக்கு ஆடையணிந்தாலும் கண்ணியமான தோற்றம். கையில் ஒரு பாலிதீன் பை.
"இந்த ரோட்டுல நேராக போனீங்கன்னா ஒரு ரோடு வரும். அங்கிருந்து பஸ்ல போகணும்..பக்கம்தான் ரெண்டு ஸ்டாப்புக்கு பிறகு இறங்கிருங்க.. "
என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே தனது பெரிய பாலிதீன் பையை சரிப்படுத்திக்கொண்டு நான் கூறியதை காதில் வாங்கியும், வாங்காததுமாய் நான் சுட்டிக்காட்டிய திசையைநோக்கி மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்
நடக்க முடியாமல் அவர் விந்தி நடக்கின்றதைப்பார்த்து இதயம் லேசாய் சிந்தியது உடனே அவரை அழைத்தேன்..
"ஹலோ என் வண்டியில வாங்க நான் உங்களை அந்த ஸ்டாப்புல இறக்கி விடுறேன்" என்று நான் அவரை அழைத்தேன்..
இப்படி யாராவது சொல்ல மாட்டார்களா? என்று ஏங்கியது போல் ஒரு பார்வை பார்த்து தனது வயதுக்குண்டான முக சுருக்கங்களில் மலர்ச்சி அரும்ப என்னை நோக்கி வந்தார்
பார்ப்பதற்கு பாவமான தோற்றம். முகத்தினில் அனுபவம் கலந்த முதிர்ச்சி. பார்வையில் ஒரு விதமான ஏக்கம்.
என் அருகே வந்து எனது வண்டியில் ஏறிக்கொண்டார். கண்களில் லேசாய் திரண்டிருக்கும் நீர்த்துளிகளோடு
"தம்பி ரொம்ப நன்றிப்பா.. என்னால உங்களுக்கு தொந்தரவு..
நான் சங்கரன்கோவிலில் இருந்து வருகின்றேன்.." என்றார்
"ம்.."என்றேன்;.
"நான் நல்லா வாழ்ந்தவன்பா..இப்படியெல்லாம் வாழணும்னு தலை விதி"
என்று அவர் நொந்து புலம்பும்பொழுதே தெரிந்துகொண்டேன். அவர் மனதில் ஆழமாய் ஏதோ ஒரு சோகம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
"ஏன் என்ன ஆச்சுங்க..?" மெல்ல கேட்டேன்
"என்னுடைய பசங்களால இப்படி ஆயிட்டேன். யாருமே என்னை கவனிக்கறது இல்லைப்பா.." அழுகுற தொனியில் கூறினார்
"உங்க பசங்க என்ன பண்றாங்க..?" ஆறுதலாய் கேட்டேன்
"ம் பொறுப்பத்த பயலுவ.. மனுசங்களா அவங்க.." என்று திட்டினார்
நான் இதனை எதிர்பார்த்தேன்.
"ஏன்..? அவங்க உதவுறது இல்லையா..? "
"அவங்கவங்க நல்லா வாழுறானுங்க..என்னைய தனியா விட்டுட்டானுங்க.." என்று ஏக்கத்தோடும் ஒருவிதமான சலிப்போடும் கூறியபடி தொடர்ந்தார்
"நான் டிப்ளமோ சிவில் படிச்சேன்..பெங்களுர்ல நல்ல வேலை -கை நிறைய சம்பளம் அதுமட்டுமல்ல மிலிட்டரியில வேற கொஞ்ச நாள் சர்வீஸ் பண்ணினேன்..
நான். நடந்ததே இல்லைப்பா எங்கே போனாலும் கார்தான்....இப்ப பாவிங்க நடக்க வச்சுட்டானுங்க.."
புரிந்துகொண்டேன் ஒரு காலத்தில் நல்லா வாழ்ந்தவர். இப்போ வயதானவுடன் மகன்களின் ஆதரவு கிடைக்காமல் துரத்திவிடப்பட்டவர் என்று.
"எதுக்கு கோர்ட்டுக்கு போறீங்க..?"
"ஒரு வழக்கு சம்பந்தமாக மனு ஒன்று கேட்டேன். அனுப்புறேன்னு சொன்னவங்க இழுத்தடிக்குறாங்கப்பா அதான் நேர்ல வந்து பார்க்கலாம்னு வந்தேன்.."
என்ன வழக்கு என்று சொல்ல மறுக்கின்றார். சரி எதற்கு நோண்டி நோண்டி கேட்க வேண்டும் என விட்டுவிட்டேன். பின் அவர் இறங்க வேண்டிய இடம் நெருங்கும்பொழுது
"யப்பா..யப்பா.. இப்படி பண்ணிட்டாங்களே நல்லா வாழ்ந்தேனே" என்று புலம்பிக்கொண்டே வந்தார். ஒருவித ஏக்கத்தில் குரல் பிசிறிப்போய் அவர் அப்படி கூறியது எனக்கு மனசே சரியில்லாமல் போனது..
அவரைப் பார்க்கின்ற வழிப்போக்கர்கள் கூட பரிதாப்பட்டு அவருக்கு ஏதாவது உதவவேண்டும் என்று நினைப்பார்கள். அந்த அளவிற்கு அமைதியான முகம். ஆனால் அவருடைய மகன்களுக்கு எப்படி மனசு வந்தது இவரை அநாதையாக்குவதற்கு? அவரின் மகன்களின் மீது கோபம் கோபமாய் வந்தது.
"இங்கே இறங்கிக்கோங்க..தூத்துக்குடி வண்டி வரும் அதில ஏறி நீதிமன்றம்னு சொல்லுங்க இறக்கி விட்டுறுவாங்க.."என்று சொன்னேன்..
அவரும் மெதுவாய் இறங்கினார்.
"கால் விளங்காம போயிடுச்சுப்பா அதான் இறங்குவதற்கு சிரமமா இருக்கு" என்று சொல்லியபடி மெதுவாய் இறங்கினார்..
திரும்பி பார்த்தேன்
விந்தி விந்தி நடக்கின்றது
அவருடைய
கால்களும் கனவுகளும்.
விளங்காமல் போனது அவருடைய கால்கள் அல்ல, அவருடைய மகன்கள்தான் என்று மனசுக்குள் எண்ணிக்கொண்டு அப்பொழுது கடந்து போன மணல்லாரியை விடவும் அதிகமான மனபாரத்தோடு விடைபெற்றேன்.
அந்தப்பெரியவரைப்போல எத்தனையோ பேர் சொந்த மகன்களால் துரத்தப்பட்டு வீதியில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்து, குழந்தைகளை கள்ளம் கபடமில்லாமல் கொஞ்சி மகிழ்ந்து , தன்னுடைய வருமானத்தில் முக்கால்வாசியை குழந்தைகளின் படிப்புக்காய் செலவிட்டு, அவர்களை முன்னேறவிட்டுவிட்ட பிறகு கடைசிகாலங்களில் அவர்கள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று எண்ணிய அவர்களது கனவுகளில் மண்ணை அள்ளி வீசுகின்றார்கள் மகன்கள்.
இவனுங்கள எல்லாம் தேசத்துரோகிகள் என்று தூக்குத்தண்டனை கொடுத்தால்தான் என்ன..?
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்....
மனைவியை அடித்தால் தண்டனை என்ற சட்டத்தைப்போல தந்தையை அல்லது தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்களுக்கும் தண்டனை தரவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றக்கூடாதா..?
கண்டிப்பா ஏதாவது செய்யணும் சார்?
- ரசிகவ் ஞானியார்
Saturday, December 23, 2006
தன்னம்பிக்கையின் மனித வடிவம்
3 மாதத்திற்கு முன் புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா ஒன்றிற்கு செல்ல நேரிட்டது. அதில் நான் சந்தித்த ஒரு கண்தெரியாத நண்பரைப்பற்றிய ஒரு நினைவு.
ஒரு கண்தெரியாத மாணவர் ஒருவரை இன்னொரு மாணவர் அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார். எனக்கு குறிப்பு எழுதுவதற்கு பேப்பர் தேவைப்பட்டதால் அந்த கண்தெரியாத மாணவர் வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து கிழித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அவர் அருகே சென்று அமர்ந்தேன்.
அவரிடம் மெல்ல கேட்டேன். "உங்க நோட்டிலிருந்து சில பேப்பர்ஸ் தரமுடியுமா? நான் கொஞ்சம் குறிப்பெடுக்க வேண்டும்"
அவரும் "இதோ கிழித்துக்கொள்ளுங்கள் ஆனால் பிசிறில்லாமல் இருக்கட்டும் " என்று நோட்டுப்புத்தகத்தை தந்தார். பிசிறில்லாமல்..எவ்வளவு சுத்தமான தமிழ்..
நோட்டுப்புத்தகத்தை திறந்தபொழுது எழுதப்பட்டுள்ள கவிதைகள் என்னைக் கவர்ந்தது.
நீங்க கவிதை எழுதுவீங்களா.?
"ஆமா கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன்..மனசுல தோன்றியதை யாரிடம் சொல்லமுடியும்..ஆகவே என் மனதின் வடிகால் கவிதை" என்று கூறினார்
அவரைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இன்னமும் அதிகமாயிற்று. "படிக்கலாமா" என்று அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன். கவிதைகள் புரிவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.
அதில் ஒரு கவிதை இதோ:
காலம் தன்னை
நீட்டியும் குறுக்கியும்
பாதை எங்கிலும் விரிய
இவ்வளவு பொய்க்காசுகள்
எப்படியோ இவர்களால்
அள்ளி வரமுடிகிறது
கலை ததும்பும்
சித்திரக்கோட்டைகளை
அப்பட்டமாக பேரம்பேசும்
சில்லறைப்பேச்சுகளை
பதியம் போட்ட
எனது ப்ரியமான ஏடுகளை
எந்த நிபந்தனையும் அற்ற
தீயிடம் சமர்ப்பிக்கின்றேன்
இப்படிக்கு
சாம்பல் தூதன்
அவரிடம் மெல்லக் கேட்டேன்.
இந்தக் கவிதைக்கு அர்த்தம் என்ன என்று?
"கவிதை எனக்கும் உலகத்திற்கும் உள்ள விசயம். உலகம் என்னை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை கவிதையின் மூலமாக வெளிப்படுத்துகின்றேன் " என்றார்.
சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கிறாரா இல்லை எனக்குத்தான் அவர் சொல்வது புரியவில்லையா? என்று தெரியாமல் பக்கத்தில் உள்ள நண்பர் ஷாபியிடம் கேட்டேன்.
" என்ன ஷாபி ? இந்தக் கவிதையின் அர்த்தம் என்ன..? "
"எல்லாருமே பொய்யர்களாகவே இருக்கின்றார்கள். யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை " என்பதைத்தான் இந்தக்கவிதையில் சொல்லியிருக்கின்றார் என்று சுருக்கமாக கூறி முடித்துவிட்டார்.
நீங்க எங்க படிக்கிறீங்க..?
ரமேஷிடம் மெல்லக் கேட்டேன்..
"எம்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில்கின்றேன் என்றார்"
ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா..?
"ம் இரவின் உயரம் என்ற ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றேன்.."
அப்பொழுது விழா ஆரம்பிப்பதற்குண்டான சலசலப்புகள் அதிகமாகியதால் அவரிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டு விழாவில் கவனம் செலுத்தினேன்.
விழா முடியும் தருவாயில் அந்த கண்தெரியாத மாணவர் ரமேஷ் என்னிடம் தன்னை வாசற்படி வரை கொண்டு வந்து விடுமாறு கேட்டுக்கொள்ள நான் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவரிடம் ஒரு சின்ன பேட்டி.
உங்க வீட்டுல எத்தனை பேர்?
"3 பேருங்க 1 அண்ணன் 1 தம்பி"
அவங்க என்ன பண்றாங்க?
"அண்ணன் டாக்டர் -- தம்பி ஊர்ல படிக்கின்றான்"
பெற்றோர்?
"அப்பா கோழி வியாபாரம்
அம்மா பால் வியாபாரம்
நான் புத்தக வியாபாரம்"
ஏன்? அப்பா அம்மா பணம் அனுப்ப மாட்டாங்களா?
"அவங்க கை அந்த அளவுக்கு நீளமில்லை "( அழகாய் பதில் அளித்தார்)
நீங்க ஊர்லையே இருக்க வேண்டியதுதானே?
"பெற்றோர்கள் உதவுவதே இல்லை. அவர்களுக்கு சரியான திட்டமிடுதல் கிடையாது. அவர்கள் தேடலில் மூழ்கி விட்டார்கள் . பொறுப்பில்லை "
என்று பதில் சொல்லிக்கொண்டே வந்தவர் தேவநேயப்பாவாணர் நூலகத்தின் வெளியே வந்ததும் "நீங்க போங்க சார் நான் இனிமேல் போயிருவேன் " என்றர்.
"இல்லை ரோட்டை க்ராஸ் பண்ணித்தானே போகனும். நான் அந்த பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து விடுறேன்" என்று கூறி பேட்டியை தொடர்ந்தேன்.
"அப்பப்ப பணம் அனுப்புவாங்க..யு. ஜி வரைக்கும் படிக்க வச்சாங்க..அதுக்குப்புறம் நான்தான் பார்த்துக்குறேன்.."
"வீட்டுக்குப் போனா சாப்பாடு கிடைக்கும். ஆனா மரியாதை...?"
என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதை கண்ணீரோடு கவனித்தேன்.
அப்ப அண்ணன் டாக்டர்னு சொன்னீங்க..?
"ஆமா..கண் தெரியாத எனக்கு செலவழிச்சா நான் காப்பாத்துவேனான்னு அவர்களுக்கு சந்தேகம் . அதனால அண்ணனை மட்டும் படிக்க வச்சாங்க.."
"அவனுக்கு அங்க கடன் அதிகம் .. அவன் பணம் அனுப்ப முடியாது.."
"என்செலவுக்கு நானே உழைக்கின்றேன். நாம பெரியாரோட சுயமரியாதை புத்தகமெல்லாம் படிக்கின்றோம் மத்தவங்கிட்ட கைநீட்ட முடியுமா..? சுயமரியாதை என்னாகுறது..?" என்று தான் வார விடுமுறையில் இரயிலில் புத்தகம் விற்பதாக கூறினார்.
அவரை கைப்பிடித்து அழைத்து வரும்பொழுது வாசற்படிகளிலும் சாலையிலும் இரண்டு முறை தடுமாறி விழப்பார்த்தேன் நான்.
அவரோ "பார்த்து வாங்க சார் இங்கே ஒரு மேடு இருக்கும்" என்று என்னிடம் கூறி என்னை பார்வையில்லாதவனாக்கினார். அவர் என் கைப்பிடித்தாலும் வெகு அலட்சியமாக நடந்து வந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.
பேருந்து நிலையம் வந்ததும் கூட்ட நெரிசல் உள்ள ஒரு பேருந்தில் அவரை ஏற்றிவிட அவர் நான் நின்றிருந்த திசையை நோக்கி டாட்டா காட்டிவிட்டு சென்றுகொண்டிருந்தார்.
ஒரு கண்தெரியாத மாணவர் ஒருவரை இன்னொரு மாணவர் அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார். எனக்கு குறிப்பு எழுதுவதற்கு பேப்பர் தேவைப்பட்டதால் அந்த கண்தெரியாத மாணவர் வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து கிழித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அவர் அருகே சென்று அமர்ந்தேன்.
அவரிடம் மெல்ல கேட்டேன். "உங்க நோட்டிலிருந்து சில பேப்பர்ஸ் தரமுடியுமா? நான் கொஞ்சம் குறிப்பெடுக்க வேண்டும்"
அவரும் "இதோ கிழித்துக்கொள்ளுங்கள் ஆனால் பிசிறில்லாமல் இருக்கட்டும் " என்று நோட்டுப்புத்தகத்தை தந்தார். பிசிறில்லாமல்..எவ்வளவு சுத்தமான தமிழ்..
நோட்டுப்புத்தகத்தை திறந்தபொழுது எழுதப்பட்டுள்ள கவிதைகள் என்னைக் கவர்ந்தது.
நீங்க கவிதை எழுதுவீங்களா.?
"ஆமா கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன்..மனசுல தோன்றியதை யாரிடம் சொல்லமுடியும்..ஆகவே என் மனதின் வடிகால் கவிதை" என்று கூறினார்
அவரைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இன்னமும் அதிகமாயிற்று. "படிக்கலாமா" என்று அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன். கவிதைகள் புரிவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.
அதில் ஒரு கவிதை இதோ:
காலம் தன்னை
நீட்டியும் குறுக்கியும்
பாதை எங்கிலும் விரிய
இவ்வளவு பொய்க்காசுகள்
எப்படியோ இவர்களால்
அள்ளி வரமுடிகிறது
கலை ததும்பும்
சித்திரக்கோட்டைகளை
அப்பட்டமாக பேரம்பேசும்
சில்லறைப்பேச்சுகளை
பதியம் போட்ட
எனது ப்ரியமான ஏடுகளை
எந்த நிபந்தனையும் அற்ற
தீயிடம் சமர்ப்பிக்கின்றேன்
இப்படிக்கு
சாம்பல் தூதன்
அவரிடம் மெல்லக் கேட்டேன்.
இந்தக் கவிதைக்கு அர்த்தம் என்ன என்று?
"கவிதை எனக்கும் உலகத்திற்கும் உள்ள விசயம். உலகம் என்னை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை கவிதையின் மூலமாக வெளிப்படுத்துகின்றேன் " என்றார்.
சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கிறாரா இல்லை எனக்குத்தான் அவர் சொல்வது புரியவில்லையா? என்று தெரியாமல் பக்கத்தில் உள்ள நண்பர் ஷாபியிடம் கேட்டேன்.
" என்ன ஷாபி ? இந்தக் கவிதையின் அர்த்தம் என்ன..? "
"எல்லாருமே பொய்யர்களாகவே இருக்கின்றார்கள். யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை " என்பதைத்தான் இந்தக்கவிதையில் சொல்லியிருக்கின்றார் என்று சுருக்கமாக கூறி முடித்துவிட்டார்.
நீங்க எங்க படிக்கிறீங்க..?
ரமேஷிடம் மெல்லக் கேட்டேன்..
"எம்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில்கின்றேன் என்றார்"
ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா..?
"ம் இரவின் உயரம் என்ற ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றேன்.."
அப்பொழுது விழா ஆரம்பிப்பதற்குண்டான சலசலப்புகள் அதிகமாகியதால் அவரிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டு விழாவில் கவனம் செலுத்தினேன்.
விழா முடியும் தருவாயில் அந்த கண்தெரியாத மாணவர் ரமேஷ் என்னிடம் தன்னை வாசற்படி வரை கொண்டு வந்து விடுமாறு கேட்டுக்கொள்ள நான் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவரிடம் ஒரு சின்ன பேட்டி.
உங்க வீட்டுல எத்தனை பேர்?
"3 பேருங்க 1 அண்ணன் 1 தம்பி"
அவங்க என்ன பண்றாங்க?
"அண்ணன் டாக்டர் -- தம்பி ஊர்ல படிக்கின்றான்"
பெற்றோர்?
"அப்பா கோழி வியாபாரம்
அம்மா பால் வியாபாரம்
நான் புத்தக வியாபாரம்"
ஏன்? அப்பா அம்மா பணம் அனுப்ப மாட்டாங்களா?
"அவங்க கை அந்த அளவுக்கு நீளமில்லை "( அழகாய் பதில் அளித்தார்)
நீங்க ஊர்லையே இருக்க வேண்டியதுதானே?
"பெற்றோர்கள் உதவுவதே இல்லை. அவர்களுக்கு சரியான திட்டமிடுதல் கிடையாது. அவர்கள் தேடலில் மூழ்கி விட்டார்கள் . பொறுப்பில்லை "
என்று பதில் சொல்லிக்கொண்டே வந்தவர் தேவநேயப்பாவாணர் நூலகத்தின் வெளியே வந்ததும் "நீங்க போங்க சார் நான் இனிமேல் போயிருவேன் " என்றர்.
"இல்லை ரோட்டை க்ராஸ் பண்ணித்தானே போகனும். நான் அந்த பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து விடுறேன்" என்று கூறி பேட்டியை தொடர்ந்தேன்.
"அப்பப்ப பணம் அனுப்புவாங்க..யு. ஜி வரைக்கும் படிக்க வச்சாங்க..அதுக்குப்புறம் நான்தான் பார்த்துக்குறேன்.."
"வீட்டுக்குப் போனா சாப்பாடு கிடைக்கும். ஆனா மரியாதை...?"
என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதை கண்ணீரோடு கவனித்தேன்.
அப்ப அண்ணன் டாக்டர்னு சொன்னீங்க..?
"ஆமா..கண் தெரியாத எனக்கு செலவழிச்சா நான் காப்பாத்துவேனான்னு அவர்களுக்கு சந்தேகம் . அதனால அண்ணனை மட்டும் படிக்க வச்சாங்க.."
"அவனுக்கு அங்க கடன் அதிகம் .. அவன் பணம் அனுப்ப முடியாது.."
"என்செலவுக்கு நானே உழைக்கின்றேன். நாம பெரியாரோட சுயமரியாதை புத்தகமெல்லாம் படிக்கின்றோம் மத்தவங்கிட்ட கைநீட்ட முடியுமா..? சுயமரியாதை என்னாகுறது..?" என்று தான் வார விடுமுறையில் இரயிலில் புத்தகம் விற்பதாக கூறினார்.
அவரை கைப்பிடித்து அழைத்து வரும்பொழுது வாசற்படிகளிலும் சாலையிலும் இரண்டு முறை தடுமாறி விழப்பார்த்தேன் நான்.
அவரோ "பார்த்து வாங்க சார் இங்கே ஒரு மேடு இருக்கும்" என்று என்னிடம் கூறி என்னை பார்வையில்லாதவனாக்கினார். அவர் என் கைப்பிடித்தாலும் வெகு அலட்சியமாக நடந்து வந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.
பேருந்து நிலையம் வந்ததும் கூட்ட நெரிசல் உள்ள ஒரு பேருந்தில் அவரை ஏற்றிவிட அவர் நான் நின்றிருந்த திசையை நோக்கி டாட்டா காட்டிவிட்டு சென்றுகொண்டிருந்தார்.
எனக்கு நம்பிக்கை என்ற வார்த்தைகள் முழு உருவமாகி விழாவுக்கு வந்து விட்டு
சென்றதைப் போல ஒரு உணர்வு.
இதுதான் அவருயை தொலைபேசி எண்
"மு. ரமேஷ் - 9942191838 . "
யாரேனும் எந்த வகையிலாவது அவருக்கு உதவ முடிந்தால் உதவுங்களேன்.
அவருடைய கவிதைக்கு வாழ்த்தோ அல்லது தனியாக இரயிலில் புத்தகம் விற்று சம்பாதிக்கும் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டியோ பேசுங்களேன். அவர் கொஞ்சம் உற்சாகமடையக்கூடும்.
- ரசிகவ் ஞானியார்
Wednesday, December 20, 2006
புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா
இடம் : தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம் - மௌண்ட் ரோடு -
சென்னை
நாள் : 10.09.2006 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 3.30 மணி
தமிழ்நாடு கலை இலக்கியப்பேரவை நடத்தும் "புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா "
என்ற அறிவிப்பை திணமணியில் கண்டதும் நண்பர் ஷாபியும் நானும் அந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டோம்.
சென்னையில் சுற்றிப்பார்க்க அல்லது பொழுதுபோக்க எத்தனையோ இடங்கள் இருக்க நாங்கள் இந்த விழாவுக்கு செல்ல முடிவெடுத்தது சென்னை இரைச்சல்களிலிருந்து தப்பித்து இதயத்திற்கு அமைதி கொடுப்பதற்கும் முக்காடு போட்டு தன்னை மறைத்துக்கொண்டு பைக்கில் பறக்கின்ற பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன சில புனிதமான காதல் காட்சிகளை விட்டு தப்பிப்பதற்கும் மன அமைதிக்காகவும் மற்றும் அந்த விழாவுக்கு வரப்போகின்ற முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களைச் சந்திப்பதற்காகவும்தான்.
சரியாக 3.30 மணிக்கு தேவநேயப்பாவாணர் நூலக அரங்கத்தை அடைந்ததும் விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டு இருந்த சில முதியவர்கள் எங்களை வித்தியாசமாய் பார்த்தார்கள். "என்னடா இலக்கிய விழாவுக்கு இளைஞர்களா? " என்ற ஆச்சர்யத்தில் பார்த்தார்களோ என்னவோ? அல்லது எங்களைப்போன்ற இளைஞர்களை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்
மெல்ல சென்று முன்னால் சென்று அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது இளைஞர்களும் வயதானவர்களுக்கு சம எண்ணிக்கையில் வர ஆரம்பித்தார்கள்.
வைரமுத்து ஒரு கவிதையில் சொல்லியது போல பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் ஈக்களின் எண்ணிக்கையை விட ஆட்களின் எண்ணிக்கை குறைவு என்று. அதுபோல இருக்கைகளின் எண்ணிக்கையானது ஆட்களின் எண்ணிக்கைவிட அதிகமாக இருந்தது. வாழும்காலத்தில் எந்த இலக்கியவாதிகளும் சரியாக மதிக்கப்படவில்லை என்பார்கள் ஆனால் வாழ்ந்து முடிந்தாலும் மதிப்புகள் சரியாக கிடைக்கவில்லையோ?
சிறுகதைக்கு ஒரு வடிவம் கொடுத்து தமிழ் சிறுகதை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா எவ்வளவு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் இடைவெளியில் "வாழ்க ஒழிக" என்ற கோஷமின்றி எந்தவித ஆரவாரமின்று முதுபெரும் எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணன் அவர்கள் என் இருக்கையை கடந்து சென்றார்கள்.
அப்பொழுது விழாவுக்கு வந்த கண்தெரியாத மாணவர் ஒருவரிடம் இருந்து விழா பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கு சில காகிதங்களை கடன் வாங்கினேன்.
முன் வரிசையில் அமர்ந்திருந்த வல்லிக்கண்ணன் அவர்களிடம் சென்று மரியாதை நிமித்தமாக பார்த்து விட்டு வரலாம் என்று அவர் அருகே சென்று ,
"ஐயா..ஞாபகம் இருக்கிறதா"
"தெரியலையே யாரு..நீங்க.."
"பானிபட் இதயங்கள் புத்தகம்" என்று ஆரம்பித்தவுடனையே கண்டுபிடித்துவிட்டார்..
"என்ன தம்பி நல்லாயிருக்கீங்களா..? உங்க நண்பர் நல்லாயிருக்காரா? "என்று விசாரித்தார்.
நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு விழாவுக்கு வருகிறவர்களை நோட்டமிட ஆரம்பித்தேன்.
யார் யாரையோ எங்கை எங்கையோ பார்த்த மாதிரி ஞாபகம்..
நமக்குத் தெரிந்த அல்லது நம்மைத் தெரிந்த வலைப்பூ நண்பர்கள் எவரேனும் வந்திருக்க கூடுமோ? என்று திரும்பி திரும்பி பார்த்தேன்.
அதோ தூரத்தில் ஜோல்னாப்பையோடு ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரையோ ஏதோ பத்திரிக்கையில் பார்த்ததாக ஞாபகம்.
நீண்ட தாடியோடும் கையில் குறிப்பெடுக்க காகிதங்களும் பேனாவோடும் ஒரு வயதானவர் முன் இருக்கையில் வந்து அமர்கின்றார். பத்திரிக்கையாளரா அல்லது வலைப்பதிவாளரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னால் திரும்பி பார்த்து ஆச்சர்யப்பட்டேன். 40 சதவிகித இளைஞர்கள் ஆக்ரமித்து இருந்தார்கள். தான் வாழும்காலத்தில் இல்லாத அல்லது தான் பிறக்கும் பொழுது இல்வுலகில் இல்லாத ஒரு இலக்கியவாதியின் நூற்றாண்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது அவரது எழுத்துக்கு கிடைத்த மரியாதை.
காதுக்கு இரைச்சலாக ஏதோ ஒரு பாட்டு ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நான் ஷாபியின் காதில் கிசுகிசுத்தேன்.. "பேசாமல் இதற்கு வாளமீனு பாட்டையாவது போட்டுவிடலாம் "என்று கூற பின்னால் இருந்த அந்தப்பெரியவர் நான் கிசுகிசுத்ததை காதில் வாங்கினாரோ என்னவோ சிரிக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது விழாவுக்கு வந்திருந்தவர்களை வாழ்த்திவிட்டு வந்திருந்த முக்கியமானவர்களை அழைத்து மேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்தார்கள்.
அப்பொழுது
14.08.06 அன்று இலங்கையில் நடந்த தாக்குதலில் 61 மாணவிகள் இறந்ததற்காகவும்
கடந்த வாரம் இயற்கை எய்திய தமிழ்த்திரு டி எஸ் மணி அவர்களுக்காகவும் மற்றும்
20.06.06 அன்று இறந்து போன சுரதா அவர்களுக்காகவும் 5 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்தரங்க தலைமை உரையை முனைவர் ராஜபாண்டியன் அவர்கள் ஆரம்பித்தார். இவரைப்பற்றி குறிப்பிடும்பொழுது ,
தமிழ் ஆசிரியர்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
ஆனால் இவர் இலக்கியம் படைப்பார் என்று புகழ்ந்து கூறினார்கள்
"3000 ஆண்டு பழமை வாய்ந்த காலாக கவிதை விளங்குகின்றது. மேல்நாட்டின் நூல்களின் வாயிலாக வந்த சிறுகதையை புதுமைப்பித்தன் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் "
"வவெசு அய்யரின் "குளத்தங்கரை அரசமரம் " சிறுகதைக்கு ஒரு தடத்தைக் கொடுத்தது. "
"புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் அனைவருமே சிறுகதையில் தடம் பதித்தார்கள். "
நாள் : 10.09.2006 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 3.30 மணி
தமிழ்நாடு கலை இலக்கியப்பேரவை நடத்தும் "புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா "
என்ற அறிவிப்பை திணமணியில் கண்டதும் நண்பர் ஷாபியும் நானும் அந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டோம்.
சென்னையில் சுற்றிப்பார்க்க அல்லது பொழுதுபோக்க எத்தனையோ இடங்கள் இருக்க நாங்கள் இந்த விழாவுக்கு செல்ல முடிவெடுத்தது சென்னை இரைச்சல்களிலிருந்து தப்பித்து இதயத்திற்கு அமைதி கொடுப்பதற்கும் முக்காடு போட்டு தன்னை மறைத்துக்கொண்டு பைக்கில் பறக்கின்ற பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன சில புனிதமான காதல் காட்சிகளை விட்டு தப்பிப்பதற்கும் மன அமைதிக்காகவும் மற்றும் அந்த விழாவுக்கு வரப்போகின்ற முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களைச் சந்திப்பதற்காகவும்தான்.
சரியாக 3.30 மணிக்கு தேவநேயப்பாவாணர் நூலக அரங்கத்தை அடைந்ததும் விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டு இருந்த சில முதியவர்கள் எங்களை வித்தியாசமாய் பார்த்தார்கள். "என்னடா இலக்கிய விழாவுக்கு இளைஞர்களா? " என்ற ஆச்சர்யத்தில் பார்த்தார்களோ என்னவோ? அல்லது எங்களைப்போன்ற இளைஞர்களை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்
மெல்ல சென்று முன்னால் சென்று அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது இளைஞர்களும் வயதானவர்களுக்கு சம எண்ணிக்கையில் வர ஆரம்பித்தார்கள்.
வைரமுத்து ஒரு கவிதையில் சொல்லியது போல பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் ஈக்களின் எண்ணிக்கையை விட ஆட்களின் எண்ணிக்கை குறைவு என்று. அதுபோல இருக்கைகளின் எண்ணிக்கையானது ஆட்களின் எண்ணிக்கைவிட அதிகமாக இருந்தது. வாழும்காலத்தில் எந்த இலக்கியவாதிகளும் சரியாக மதிக்கப்படவில்லை என்பார்கள் ஆனால் வாழ்ந்து முடிந்தாலும் மதிப்புகள் சரியாக கிடைக்கவில்லையோ?
சிறுகதைக்கு ஒரு வடிவம் கொடுத்து தமிழ் சிறுகதை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா எவ்வளவு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் இடைவெளியில் "வாழ்க ஒழிக" என்ற கோஷமின்றி எந்தவித ஆரவாரமின்று முதுபெரும் எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணன் அவர்கள் என் இருக்கையை கடந்து சென்றார்கள்.
அப்பொழுது விழாவுக்கு வந்த கண்தெரியாத மாணவர் ஒருவரிடம் இருந்து விழா பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கு சில காகிதங்களை கடன் வாங்கினேன்.
முன் வரிசையில் அமர்ந்திருந்த வல்லிக்கண்ணன் அவர்களிடம் சென்று மரியாதை நிமித்தமாக பார்த்து விட்டு வரலாம் என்று அவர் அருகே சென்று ,
"ஐயா..ஞாபகம் இருக்கிறதா"
"தெரியலையே யாரு..நீங்க.."
"பானிபட் இதயங்கள் புத்தகம்" என்று ஆரம்பித்தவுடனையே கண்டுபிடித்துவிட்டார்..
"என்ன தம்பி நல்லாயிருக்கீங்களா..? உங்க நண்பர் நல்லாயிருக்காரா? "என்று விசாரித்தார்.
நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு விழாவுக்கு வருகிறவர்களை நோட்டமிட ஆரம்பித்தேன்.
யார் யாரையோ எங்கை எங்கையோ பார்த்த மாதிரி ஞாபகம்..
நமக்குத் தெரிந்த அல்லது நம்மைத் தெரிந்த வலைப்பூ நண்பர்கள் எவரேனும் வந்திருக்க கூடுமோ? என்று திரும்பி திரும்பி பார்த்தேன்.
அதோ தூரத்தில் ஜோல்னாப்பையோடு ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரையோ ஏதோ பத்திரிக்கையில் பார்த்ததாக ஞாபகம்.
நீண்ட தாடியோடும் கையில் குறிப்பெடுக்க காகிதங்களும் பேனாவோடும் ஒரு வயதானவர் முன் இருக்கையில் வந்து அமர்கின்றார். பத்திரிக்கையாளரா அல்லது வலைப்பதிவாளரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னால் திரும்பி பார்த்து ஆச்சர்யப்பட்டேன். 40 சதவிகித இளைஞர்கள் ஆக்ரமித்து இருந்தார்கள். தான் வாழும்காலத்தில் இல்லாத அல்லது தான் பிறக்கும் பொழுது இல்வுலகில் இல்லாத ஒரு இலக்கியவாதியின் நூற்றாண்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது அவரது எழுத்துக்கு கிடைத்த மரியாதை.
காதுக்கு இரைச்சலாக ஏதோ ஒரு பாட்டு ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நான் ஷாபியின் காதில் கிசுகிசுத்தேன்.. "பேசாமல் இதற்கு வாளமீனு பாட்டையாவது போட்டுவிடலாம் "என்று கூற பின்னால் இருந்த அந்தப்பெரியவர் நான் கிசுகிசுத்ததை காதில் வாங்கினாரோ என்னவோ சிரிக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது விழாவுக்கு வந்திருந்தவர்களை வாழ்த்திவிட்டு வந்திருந்த முக்கியமானவர்களை அழைத்து மேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்தார்கள்.
அப்பொழுது
14.08.06 அன்று இலங்கையில் நடந்த தாக்குதலில் 61 மாணவிகள் இறந்ததற்காகவும்
கடந்த வாரம் இயற்கை எய்திய தமிழ்த்திரு டி எஸ் மணி அவர்களுக்காகவும் மற்றும்
20.06.06 அன்று இறந்து போன சுரதா அவர்களுக்காகவும் 5 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்தரங்க தலைமை உரையை முனைவர் ராஜபாண்டியன் அவர்கள் ஆரம்பித்தார். இவரைப்பற்றி குறிப்பிடும்பொழுது ,
தமிழ் ஆசிரியர்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
ஆனால் இவர் இலக்கியம் படைப்பார் என்று புகழ்ந்து கூறினார்கள்
"3000 ஆண்டு பழமை வாய்ந்த காலாக கவிதை விளங்குகின்றது. மேல்நாட்டின் நூல்களின் வாயிலாக வந்த சிறுகதையை புதுமைப்பித்தன் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் "
"வவெசு அய்யரின் "குளத்தங்கரை அரசமரம் " சிறுகதைக்கு ஒரு தடத்தைக் கொடுத்தது. "
"புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் அனைவருமே சிறுகதையில் தடம் பதித்தார்கள். "
"இனி அய்யா
நான் செத்தபிறகு
நிதி திரட்டாதீர்கள்
நினைவை செதுக்கி
கல்லில் வடித்து காக்காதீர்கள்
என்று புதுமைப்பித்தனே தனது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். பின் எதற்கு இந்த விழா.? இதனைப்பார்த்து மற்றவர்கள் சாதிக்க வேண்டும் என்பதும் வாழும் தலைமுறையினர்கள் புதுமைப்பித்தனை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும்தான். "
"வாழும்பொழுது பாராட்டமாட்டார்கள். இல்லாதபோதுதான் பாராட்டுவோம். புதுமைப்பித்தனின் நிழலில் ஒதுங்கி நாம் சாதிக்க வேண்டும். "
"42 ஆண்டு காலம் வாழ்ந்த படைப்பாளி 92 சிறுகதைகள் படைத்திருக்கின்றார். ( கட்டுரை - மொழிப்பெயர்ப்பு தவிர்த்து)
உப்பு புளி கணக்கைப்பார்த்தால்
எப்போ எழுதுவது சமுதாயத்திற்கு?
- பாரதி
இப்படி சமுதாயத்திற்காக கவலைப்பட்டவர்களுள் பாரதிக்கு அடுத்து புதுமைப்பித்தன்தான். "
""எங்க அப்பா எப்போதும் புகையிலை போடுவார்" என்று அவரது அவர் மகள் கூறினார். அவர் புகைப்பழக்கத்திற்கு அடிமை இல்லை. பசியை மறப்பதற்காக புகையிலை போடும் பழக்கத்தை ஆரம்பித்தார். "
புதுமைப்பித்தனைப்பற்றி நிறைய தகவல்கள் அக்கூட்டத்தில் பரிமாறப்பட்டன . மேலும் கனாசு என்பவர் மிகவம் மேன்மைபடுத்தி கூறியதாவது
சிவனுக்கு நாயன்மார்கள் தமிழ் செய்தது போல
சிறுகதைக்கு புதுமைப்பித்தன் தமிழ் செய்தார்
தி.க.சி யை ஒருவர் கடுமையாக விமர்சித்தார். இவர் மட்டும் சிறுகதைக்கு ஒருவர் என்று எப்படி சொல்லலாம். பன்றி பல குட்டிகள் போடும் ஆனால் யானை ஒரு குட்டிதான் போடும் ஆகவே சிறுகதைக்கு புதுமைப்பித்தன் ஒருவர்தான் என்று மோசமான உதாரணம் ஒன்றை எடுத்து விட்டார்
திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா இந்துக்கல்லூரியில் புதுமைப்பித்தன் தனது பி.ஏ பட்டத்தை படித்தவர். இதே கல்லூரியில்தான் வ.உ.சி மற்றும் பாரதி அவர்களும் படித்தார்கள். இது அக்கல்லூரிக்கே உள்ள பெருமை. அந்த திருநெல்வேலியில் நானும் வசிக்கின்றேன் என்பது எனக்குப்பெருமை.
புதுமைப்பித்தன் கதையில் மட்டுமல்ல கவிதையிலும் பேச்சுத்தமிழையே கையாண்டார். அவர் பிறந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆகும். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய இலக்கிய ஆர்வத்திற்கு அவரது பெற்றோர்களும் ஆதரவு தரவில்லை.
"தமிழ்ச்சிறுகதையை உலகப்பார்வைக்கு கொண்டவந்த பெருமை புதுமைப்பித்தனைச் சாரும் "என்று புதுமைப்பித்தனை பாராட்டினார்.
பின் நெய்வேலி பாலு என்பவர் தனது தொடக்க உரையில் கூறியதாவது
சிறுகதை வடிவம் ஐரோப்பியாவில் இருந்து வந்தது. பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்து பகுதிகள்தான் சிறுகதைக்கு தோற்றுவாயாகவும் வடிகாலாகவும் இருந்திருக்கின்றது.
முதலாம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அச்சு இயந்திரம் இந்தியாவுக்கு வந்தபிறகு சிறுகதையின் வடிவம் மேலும் பலம் பெற ஆரம்பித்தது
இந்து முஸ்லிம் ஒற்றுமை, வெள்ளைனை விரட்டுதல், காந்தீயச் சிந்தனையை வலியுறுத்துதல்,
சம்பந்தமான சிறுகதைகள் வெளிவரஆரம்பித்தன.
மொழிப்பெயர்ப்பு கதைகளும் யதார்த்தமான மக்கள் வாழ்வியல் கதைகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஆதவன் போன்றோர்களின் தனிமனித முக்கியத்துவம் பெற்ற கதைகள் வெளிவந்தன.
தஞ்சை மாவட்ட பண்ணை அடிமைகளின் துன்பத்தை மையமாக எழுதிய இந்திரா பார்;த்தசாரதியின் "குருதிப்புனல்" கதை மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.
பின்னர் ஒரு காலகட்டத்தில் யதார்த்தம் - நம்பிக்கை - நம்பிக்கை மறுப்பு - அவநம்பிக்கை கதைகள் வந்துகொண்டிருந்தன.
அந்தக்களத்திலிருந்து அப்படியே மாறி தலித்தியம் - பெண்ணியம் - சுற்றுச்சூழல் - தமிழ் தேசியம் சம்பந்தமான கதைகள் வெளிவந்தன.
தற்பொழுதுள்ள நிலையில் நல்ல தமிழ் எங்கும் இல்லை. மின் ஊடகம் பத்திரிக்கைகளின்; ஆங்கில மோகத்தால் தமிழ் களை இழந்து வருகின்றது. நல்ல படைப்புகள் முற்போக்கு சிந்தனைகள் உள்ள கதைகள் வரவேண்டும்.
பின் புதுச்சேரி பஞ்சாங்கம் என்பவர் பேசும்பொழுது புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற கதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது,
கடவுளை தெருவுக்கு அழைத்துவந்து கேள்விகேட்கின்றார் புதுமைப்பித்தன்.
"பெண்ணைத் தீக்குளிக்க வைத்த
அவர் கால்பட்டா
நான் பெண்ணாகவேண்டும்
நான் மீண்டும் கல்லாவேன்" என்று இராமனைப்பார்த்து அகலிகை கேட்பதாக கதை இருக்கின்றது.
மொழிப்பெயர்ப்பு கதைகளும் யதார்த்தமான மக்கள் வாழ்வியல் கதைகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஆதவன் போன்றோர்களின் தனிமனித முக்கியத்துவம் பெற்ற கதைகள் வெளிவந்தன.
தஞ்சை மாவட்ட பண்ணை அடிமைகளின் துன்பத்தை மையமாக எழுதிய இந்திரா பார்;த்தசாரதியின் "குருதிப்புனல்" கதை மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.
பின்னர் ஒரு காலகட்டத்தில் யதார்த்தம் - நம்பிக்கை - நம்பிக்கை மறுப்பு - அவநம்பிக்கை கதைகள் வந்துகொண்டிருந்தன.
அந்தக்களத்திலிருந்து அப்படியே மாறி தலித்தியம் - பெண்ணியம் - சுற்றுச்சூழல் - தமிழ் தேசியம் சம்பந்தமான கதைகள் வெளிவந்தன.
தற்பொழுதுள்ள நிலையில் நல்ல தமிழ் எங்கும் இல்லை. மின் ஊடகம் பத்திரிக்கைகளின்; ஆங்கில மோகத்தால் தமிழ் களை இழந்து வருகின்றது. நல்ல படைப்புகள் முற்போக்கு சிந்தனைகள் உள்ள கதைகள் வரவேண்டும்.
பின் புதுச்சேரி பஞ்சாங்கம் என்பவர் பேசும்பொழுது புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற கதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது,
கடவுளை தெருவுக்கு அழைத்துவந்து கேள்விகேட்கின்றார் புதுமைப்பித்தன்.
"பெண்ணைத் தீக்குளிக்க வைத்த
அவர் கால்பட்டா
நான் பெண்ணாகவேண்டும்
நான் மீண்டும் கல்லாவேன்" என்று இராமனைப்பார்த்து அகலிகை கேட்பதாக கதை இருக்கின்றது.
இது மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்;பட்டது. ஆனால் சர்ச்சைகளுக்குப் பயந்தால் பாரதியார் புதுமைப்பித்தன் தோன்றியிருக்கமுடியாது.
தாய்மொழியின் அவசியத்தைப்பற்றி பேசினார். நமது கண்களுக்கும் மூளைக்கும் இடையே மொழி வந்து நிற்கின்றது.
நாம் மொழியைக் கையாள்கின்றோம் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம் ஆனால் உண்மையில் மொழிதான் நம்மைக் கையாள்கின்றது.தாய்மொழிக்கல்வி இல்லாமல் தமிழன் முன்னேறவே முடியாது.
வெளிநாட்டிற்கு தனது அறிவை விற்றுவிட்டு வெறும் நுகர்வோராக நாம் மாறி வருகின்றோம் என்று பின் நவீனத்துவம் பேசுகின்றது.
சினிமாக்களில் கதாநாயகர்களை உச்சத்திற்கு சென்று காட்டுகின்றார்கள். ஏன் இந்த பெருங்கதையாக்கம்? மனிதர்களை மனிதர்களாக காட்டுங்களேன்.
சின்னவயதில் நிலாவெளிச்சத்தில் ஆற்றுப்படுகையில் விளையாடியது எல்லாம் கனவாகத்தான் இருக்கின்றது. இப்பொழுதுள்ள தலைமுறைகள் கேமிராவில் மட்டும்தான் நிலாவை பார்க்கின்றார்கள்.
என்று நிறைய பேசிவிட்டு "இன்னும் முடிக்கலையா?" என்று யாரோ கேட்பது புரிகின்றது." இதோ முடித்துக்கொள்கின்றேன் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் " என்று தனது உரையை ஆர்வத்தில் தொடர்ந்தார்.
பின் நவீனத்துவம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே பயன்படுகின்றது. பெண்ணிம் தலித்திய சிந்தனை மேலாதிக்கம் பெற்றிருக்கிறது என்றால் பின் நவீனத்துவ சிந்தனையால்தான்.
என்று பல கருத்துக்களை பேசிவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.
பின்பு காட்டேறி என்பவர் வந்து சிறுகதைகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவேண்டும் என்று கூறி "நந்தனார் தெரு" என்ற சிறுகதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது
நகராட்சியில் கழிப்பறை வேண்டி மனுகொடுத்து மனுகொடுத்து ஓய்ந்து போய்விட்டனர். பின் நகராட்சி அலுவலகம் முன்பு மலம் கழித்து விட்டனர். ஒரு பலகையில்
"இந்த நிலை தொடரவேண்டுமா? இப்படிக்கு நந்தனார் தெரு மக்கள்" என்று எழுதியிருக்கின்றார்.
இப்படி சிறுகதையின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிக்கொணர விரும்புகின்றார்கள்.
பின்பு புதுமைப்பித்தன் நினைவுநாளில் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டிக்கு வந்த சிறுகதைகள் குறித்து பீர் முகம்மது என்பவர் பேசினார்.
ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு விவசாயி இறந்து கொண்டிருக்கின்றான் இதனைத் தடுக்க வேண்டும்.
திராவிட இலக்கியங்களை சாகடிப்பதே திராவிட இயக்கங்களின் சாதனை என்ற அதிரடியாக கூறினார்.
பின் வல்லிக்கண்ணன் அவர்கள் பேச வந்தார்.
புதுமைப்பித்தனின் 100 ஆண்டுவிழாவினை திருநெல்வேலியில் 5 அமைப்புகள் தனித்தனியே விழா எடுத்திருக்கின்றார்கள்.
மனிதன் மற்றும் அவனது வாழ்க்கை இதுவே சிறுகதையின் மூலம். இதனை மையமாக கொண்டுதான் எல்லா சிறுகதைகளும் அமைகின்றன. இந்தப்போட்டிக்கு வந்த சிறுகதைகளும் அப்படியே.
போட்டிக்கு வந்த சிறுகதையில் தமிழ் அடிப்படை தவறுகள் நிறைய உள்ளன.
புதுமைப்பித்தனின் நினைவு சிறுகதைப்போட்டிக்கு ஒருவர் புதுமைப்பித்தனின் கதையையே காப்பியடித்து எழுதி அனுப்பியிருக்கின்றார் என்று அவர் கூறியபோது கூட்டத்தில் சிரிப்பலை.
தனித்துவம் - சொல்லாற்றல் - வாழ்க்கையை பார்க்கும் சுயபார்வை - தனி நடை - தத்துவ நோக்கு மற்றும் ஆழ்ந்த அழகான கருத்துக்கள் படைப்பில் தெரியவேண்டும்
கதையின் மூலம் பிரச்சாரத்தை வெளிப்படுத்தலாம் ஆனால் பிரச்சாரம் செய்வதாய் தெரியக்கூடாது. கதையில் பிரச்சாரம் வெளியிட்ட கந்தர்வனின் கதைகளை முன்னோடிகளாச் சொல்லலாம்.
புதிதாக கதை எழுதுபவர்கள் முன்னோடிகளின் கதைகளை நன்கு படித்து எழுத ஆரம்பித்தது பின் அவர்களையும் மிஞ்சும் வண்ணம் எழுதவேண்டும்.
உண்மைகளை சரியாகவும் தைரியமாகவும் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக படைப்புகள் இருக்க வேண்டும்
ஆழமாக படித்தால் என்றுமே கதைக்கு பஞ்சமே கிடையாது. என்று தனது உரையை முடித்தார்.
பின் நாடகம் நடத்தும் முன் அதன் கதையை காவல்துறையிடனிரிடம் காட்டி அனுமதி பெறவேண்டும் என்கிற ஆங்கிலேய அடக்குமறை சட்டம் தொடரும் நிலையை ரத்துசெய்யவேண்டும் என்றும்
தேவநேயப்பாவாணர் அரங்கை குளிர் சாதன அரங்காக மாற்றி இன்னும் பல அரங்குகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் தீர்மானங்கள் கொண்டுவந்தனர்.
விழா முடிந்ததும் வல்லிக்கண்ணன் அவர்கள் அரங்கை விட்டு வெளியே வந்து ஆட்டோவுக்காக தனியாக காத்திருந்தது மனசை என்னவோ செய்தது.
இப்பொழுது புதுமைப்பித்தன் மற்றும் வல்லிக்கண்ணன் ஆகியோர்கள் இறந்து
விட்டாலும் அவர்களுடைய எழுத்துக்கள்மூலம் இன்றைய தலைமுறையினர்கள் அவரைப்பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும்.
- ரசிகவ் ஞானியார்
- ரசிகவ் ஞானியார்
Friday, December 15, 2006
நன்றிக்கடன்
அலட்சியமாய் களைந்த
ஆடைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து ...
துவைத்து வைப்பாள்!
தன் வயிறு
காய்வதைப்பற்றி
கவலைப்படாமல் ...
துணிகளை காயவைப்பதில்
கவனமாய் இருப்பவள்!
மிச்சம் ஏதுமின்றி
தின்று வீசிய
பாத்திரங்களை ...
பத்திரமாய் பூசி விடுவாள் !
நாங்கள் வேண்டாமென்று
ஒதுக்கிய உணவுகள் ...
அவளுக்கு அமுதம் !
சொந்தக்குழந்தை
வீட்டில் அநாதையாய் இருக்க...
எங்கள் வீட்டுக்குழந்தைகளை
சொந்தமாக்குபவள்!
ஒருநாள் வராவிடினும் ...
வீட்டை கூவம் என்று அழைப்போம் !
இப்படி
விவரம் தெரிந்த நாள்முதல்
அறிவிக்கப்படாத உறவாக ..
வலம் வருபவள்!
இன்று காலைதான் செய்தி வந்தது:
என் வீட்டு
வேலைக்காரி இறந்துவிட்டாளாம்!
அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?
- ரசிகவ் ஞானியார்
Thursday, December 14, 2006
பேச்சிலர்கள் பார்க்க வேண்டாம்..
காலையில் நேரத்துக்கு நாஷ்டா தயார் பண்ணவில்லையா..இதோ வாங்கிக்கோங்க...
பளார்..பளார்..பளார்...

எந்தப்பொண்ணுடனாவது பேசிக்கொண்டிருந்தீங்களா...இதோ வாங்கிப்போங்க...
டிஷ்யும்..டிஷ்யும்...டிஷ்யும்

பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போவில்லையா...இதோ வாங்கிக்கோங்க...
டமார்...டமார்...டமார்

ஆகவே பேச்சுலர்களே உஷாரா இருங்கப்பா...? அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கோங்க..

- ரசிகவ் ஞானியார்
பளார்..பளார்..பளார்...
எந்தப்பொண்ணுடனாவது பேசிக்கொண்டிருந்தீங்களா...இதோ வாங்கிப்போங்க...
டிஷ்யும்..டிஷ்யும்...டிஷ்யும்
பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போவில்லையா...இதோ வாங்கிக்கோங்க...
டமார்...டமார்...டமார்
ஆகவே பேச்சுலர்களே உஷாரா இருங்கப்பா...? அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கோங்க..
- ரசிகவ் ஞானியார்
Monday, December 11, 2006
என்னாச்சு இந்தப்பொண்ணுக்கு?
இதோ இந்தப் படத்தில் தெரியும் பெண் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் அலங்கோலமாக சுற்றிக்கொண்டிருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு அநாதையாய் வலம் வந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே உடனிருந்த ஒரு பிச்சைக்காரர் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட, இந்தப்பெண் உடனே ஒரு பேப்பர் எடுத்து ஏதோ எழுதி அந்தப்பிச்சைக்காரனிடம் கொடுத்து பக்கத்தில் உள்ள மருந்துகடையில் சென்று கொடுக்குமாறு சொல்ல, அந்த மருந்து கடைக்காரர் உட்பட அந்தப்பகுதியில் உள்ள அனைவருக்கும் ஆச்சர்யம்.
அந்த பேப்பரில் ஒரு தரமான மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகள் போலவே எழுதப்பட்டிருந்தது. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இப்படி எழுதிக்கொடுத்தது அந்தக் கடைக்காரருக்கு சந்தேகம் வரவே , மெல்ல அந்தப்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார். அந்தப்பெண்ணும் அந்தக்கடைக்காரரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கண்டு அவர் மேலும் ஆச்சர்யமடைந்தார்.
அந்தப்பெண் தன் பெயர் புஷ்பலதா என்றும் தான் ஒரு டாக்டர் என்றும் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்ல தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அத்துடன் தன்னுடைய குடும்பத்தினரின் தொலைபேசி எண்களையும் கொடுத்திருக்கின்றார். அதில் தொடர்பு கொண்டு பேசியபொழுது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை.
இந்தச்சம்பவம் உள்ளுர் பத்திரிக்கையில் வெளிவந்தவுடன் இந்தப்பெண்ணிற்கு உதவிசெய்ய பல தன்னார்வு தொண்ட நிறுவனங்களும் மற்றும் பலரும் உதவ முன்வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப்பெண் எவருடனும் செல்ல மறுத்துவிட்டார். அந்தப்பெண்ணின் அலங்கோலமான நிலையைக்கண்டு பரிதாப்பட்ட போலிஸார்கள் அவரை நெல்லை சமூக சேவை அமைப்பான சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.
பின் நெல்லை மாவட்ட மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் அன்புராஜன், அந்தப்பெண்ணை தனது மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தினார். அதனைத்தொடர்ந்து அந்தப்பெண் முழுவதுமாக குணமடைந்தார்.
தற்பொழுது அந்தப்பெண் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பீஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமல்ல அங்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புஷ்பலதா :
அவர் தனது வாழ்க்கையில் என்ன நடந்தது ஏன் அவருக்கு மனநிலை பாதிக்கப்ட்டது? யார் சென்னையில் இருந்து இங்கு அழைத்துவந்தார்? என்ற தகவல்களை கேட்டபொழுது,
"எனக்கு கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான சம்பவங்கள் இப்பொழுது தெரிய வருகின்றது. அது ஒரு சோகமான நிகழ்வு. எனக்குத் தெரியாமலையே அச்சம்பவம் நடைபெற்றுவிட்டது . நான் இப்பொழுது முழுமையாக குணமடைந்துவிட்டேன். இந்த மருத்துவமனையில் டூட்டி டாக்டராக பணிபுரிகின்றேன்."
"எனக்கு சமூகசேவையிலும் ஆர்வம் அதிகம். ஆகவே பக்கத்து கிராமங்களான நாலுமாவடி பாவூர்சத்திரம் - எட்டயபுரம் - கடையநல்லூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று இலவசமாக மருத்துவமுகாம்கள் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க விரும்புகின்றேன். "
"வீட்டிற்கு தொலைபேசி செய்தும் பேசிவிட்டேன். எனது அண்ணன் விசயம் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்துள்ளார். நான் எனது குடும்பத்தினரை காண விரும்புகின்றேன். ஆகவே அடுத்தவாரம் சென்னை செல்கின்றேன்.இது எனக்கு கிடைத்த மறுவாழ்வு..என்னால் மறக்கவே முடியாது"
என்று மிகத்தெளிவாக அவர் பேட்டியளித்தார்.
மனநிலை சரியில்லாமல் சுற்றிக்கொண்டு திடீரென்று டாக்டரான இந்தப்பெண்ணைப்பற்றித்தான் நெல்லை மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
நானும் இதுபோன்ற மனநிலை சரியில்லாதவர்களை இந்தப்பகுதியில் கண்டிருக்கின்றேன். அதிலும் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால் வயதானவர்கள்தான் அதிகம் காணப்படுவார்கள்.
நான் சென்றமாதம் கூட இந்தப்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் மனநிலை சரியில்லாவர்களிடம் மெல்ல விசாரித்து, அவர்களின் நிலைக்கு காரணத்தை ஆராயலாமா? என்று ஹைகிரவுண்ட்டில் உள்ள ஒரு மனநிலை சரியில்லாதவரை எனது நண்பருடன் பின்தொடர்ந்தேன்.
அவருக்கு வயது சுமார் 25 முதல் 30 க்குள் இருக்கும். கைகளில் ஒரு அழுக்குப்பையோடு தாடியை தடவிக்கொண்டே சென்றார். அருகில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம் விசாரித்தபொழுது "அந்தநபர் ஒருவார காலமாகத்தான் இந்தப்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கின்றார்" என்று கூறினார்.
பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்த அந்த நபர் எங்களைப்பார்த்து திடீரென்று முனக ஆரம்பித்தார். பின் நாங்கள் பக்கத்தில் வருகிறோம் எனத்தெரிந்ததும் பயந்து போய் அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்.
அவரைப் பின்தொடர்வதை யாராவது பார்த்து ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வார்களோ என நினைத்து பின் தொடர்வதை விட்டுவிட்டோம். பின் எங்கேயாவது நான் பைக்கில் செல்லும்பொழுது கண்ணில் தென்படுவார். இன்னமும் மனது உறுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. அந்த இளைஞருக்கு என்ன ஆகியிருக்கும் ஏன் மனநிலை சரியில்லாமல் போனது என்று.
இதுபோன்று மனநிலை சரியில்லாவர்களை விசாரித்து அவர்களைப் பற்றி எழுதி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களை ஏதாவது காப்பகத்தில் சேர்க்கலாமே என்று நான் எனக்குத் தெரிந்த பிரபல வாரப்பத்திரிக்கை நிருபர் ஒருவரிடமும் இதுபற்றிக் கூறினேன். அவரும் எழுதுவதாக வாக்களித்துள்ளார். இந்தப்புஷ்பலதா போன்று எத்தனை புஷ்பலதாக்கள் மனநிலைசரியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றார்களோ..?
வாழுகின்ற காலத்தில் நல்லபடியாக வாழ்த்திருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு
சூழ்நிலை அவர்களை இப்படி மனநிலை சரியில்லாவர்களாக ஆக்கியிருக்கின்றது. அவர்களை பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான். ஆகவே அரசாங்கமும் இவர்கள் விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமா..?
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Posts (Atom)