Friday, February 09, 2007

வாஞ்சி மணியாச்சி வரவேற்கிறது

அதிகாலை 7.30 மணி அளவில் சென்னையில் இருந்து திருநெல்வேலி வருகின்ற நெல்லை விரைவு வண்டியானது மணியாச்சி என்ற இரயில் நிலையத்தில் வந்து ஓய்வெடுக்கின்றது.

ஒவ்வொரு முறை சென்னை சென்றுவிட்டு திரும்பும்பொழுதும் திருநெல்வேலி நெருங்கும்பொழுது இந்த ஸ்டேஷன் கண்ணில் படும்பொழுதெல்லாம் எனக்கு வாஞ்சிநாதன் ஞாபகம்தான் வரும

காபி டீ காபி டீ.. சத்தங்கள் ஒலி குறைந்தும் அதிகபட்டும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருக்கின்றது

டீ குடிக்கும் ஆவலில் கதவுக்குப் பக்கத்தில் உள்ள ஒருவரை விலக்கிவிட்டு கீழே இறங்கினேன்.

வாஞ்சி மணியாச்சி என்ற பலகை கொட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. அந்தப் பெயரைசாதாரணமாய் நம் கண்கள் வாசித்து விட்டு விலகி விட முடியாது.
அப்பொழுது முதல் வகுப்பு பெட்டி அருகே பரபரப்பாய் இருந்தது. மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். யாரோ ஒருவர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றார். அப்பொழுது பரபரப்பாய் வந்த ஒருவரிடம் கேட்டேன்..

ஹலோ என்ன ஆச்சு? என் இந்தப் பரபரப்பு?

முதல் வகுப்பில் வந்த கலெக்டரை ஒருவன் சுட்டுவிட்டான் என்று கூறிக்கொண்டே அவர் விரைந்து சென்றார்

யார் என்ன என்று விசாரித்தபொழுதுதான் தெரிந்தது..?

சுட்டவன் பெயர் வாஞ்சிநாதன்

சுடப்பட்டவர் ஆஷ் துரை

தூரத்தில் அதோ வாஞ்சிநாதன் ஓடிக்கொண்டிருக்கின்றான். அப்படியே மறைந்து போகின்றான். அந்த இடத்தில் இரயில்வே தடங்கள் நீண்டு சென்று கொண்டிருக்கின்றது. மறுபடியும் நினைவு மீண்டு பார்த்தால் எந்த பரபரப்பும் இல்லை. நான் வந்த இரயில் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கின்றது.

அட 1911ம் ஆண்டு ஜுன் மாதம் நான் இதே இரயில் வந்திருந்தால் சுட்டுவிட்டு ஓடுகின்ற வாஞ்சிநாதனை கண்டிருக்கக் கூடும். யாருக்கும் தெரியும். வாஞ்சிநாதனுடன் நானும் கூட ஓடியிருக்கலாம்.

அந்த நினைவுகளோடு இரயில் மணியாச்சியை விட்டு சென்று கொண்டிருக்க என் மனதில்
படுவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு இரயிலானது போராட்ட காலத்திற்குச் சென்றது.


தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுள் மறக்கமுடியாத இன்னமும் மக்களால் பேசப்படுகின்ற வீரராக இருப்பவர்களுள் ஒருவன்தான் வாஞ்சிநாதன்.


1911 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்த இடம் எவ்வளவு பரபரப்பாய் இருந்திருக்கும் என்று தற்பொழுது என்னுடன் இரயில் பயணிப்பவர்களுக்கோ அல்லது அந்த நேரத்தில் இரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பவர்களுக்காகவாவது புரிந்திருக்குமா? இனி நீங்கள் திருநெல்வேலி பயணத்தில் மணியாச்சியை நெருங்கும் பொழுது நினைத்துப்பார்ப்பதற்காகவாவது கொஞ்சம் வாஞ்சிநாதன் வாழ்ந்த நாட்களுக்கு சென்று வருவோமா..?




தேசபக்திக் குரல்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த ஒலிச்சப்தத்தின் அதிர்வு திருநெல்வேலி மாவட்டத்திலும் அதிகமாக அலைவரிசைகளை வீசியது.

1880 ம் ஆண்டு எனது அல்வாப்பூமி என்றழைக்கப்படும் திருநெல்வேலியில் செங்கோட்டையில் அம்பிகாபுரம் அருகே உள்ள அம்மன்கோவில் தெருவில் இரகுபதி அய்யருக்கும் குப்பச்சி அம்மாளுக்கும் பிறந்தவன்தான் வாஞ்சிநாதன்.


அவனது தந்தை பெரிதாய்ச் சொல்லிக் கொள்ளும்படியான உத்தியோகம் எதுவுமில்லை. கோவிலில் கிடைக்கின்ற மானியம் மற்றும் சுவாமிக்கு ஆராதனை செய்யும்பொழது விழுகின்ற காசுகளை வைத்துதான் குடும்பத்தை கரையேற்றிக்கொண்டிருந்தார்.

அதிலேயும் பாருங்க அவருக்கு நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள். பாவம் வருமானமும் இல்லாம எவ்வளவு சிரமப்பட்டிருப்பாரு ? வாஞ்சிநாதன்தாங்க மூத்தவன். அவங்கப்பா இட்ட பெயர் சங்கரன்தான். எப்படி வாஞ்சிநாதன்னு பெயர் மாறிச்சுன்னு தெரியலை.

அவ்வளவு கஷ்டத்திலேயும் அவங்கப்பா வாஞ்சிநாதனை செங்கோட்டை ஆங்கில மீடியாவில்தான் படிக்க வச்சார். அங்க பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு திருவனந்தபுரத்துல உள்ள திருநாள் மகாராஜா கல்லூரியில பிஏ வகுப்புப் படித்து அரியர்ஸ் வைக்காம பாஸ் செய்தான் வாஞ்சிநாதன்.

அப்புறம் மரவேலை சம்பந்தமாக படிப்புக்காக பரோடா சென்றான். அங்கேயும் அரியர்ஸ் வைக்காம படிச்சி முடிச்சுட்டு ஊர் திரும்பினான். அப்பெல்லாம் சீக்கிரமே; கல்யாணம் முடிச்சு வச்சிருவாங்கல்ல. அதான் பையன் படிச்சு முடிச்சுட்டான் அடுத்து என்ன ஒரு கல்யாணத்தையும் நடத்தி வச்சுறுவோம்னு முன்னீர்பள்ளத்தைச் சார்ந்த சீதாராமய்யர் பொண்ணு பொன்னம்மாளை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. பாவம். 23 வயசுலேயே அவருக்கு கஷ்டப்படணும்னு விதி.

முன்ன எல்லாம் 10 படிச்சாலே அரசாங்க வேலைதானே. அவனுக்கும் புனலூர் காட்டில கார்டாக வேலை கிடைச்சுது.

பரோடா திருவனந்தபுரம்னு சுத்துனதால தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் இந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் நம்ம வாஞ்சிநாதன் செம கில்லாடிங்க..

தானுண் தன் வேலை உண்டுன்னு நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தான். அந்த நேரத்துலதான் வ.ஊசி - சுப்ரமணிய சிவா ஆகியோர்களை செக்கிழுக்க வைத்து ஆங்கிலேய அரசு கொடுமைப்படுத்தியது. அந்தக்கொடுமையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 4 பேர் மரணமடைய இதனைக் கேள்விப்பட்ட வாஞ்சிநாதனால் பொறுக்க முடியவில்லை.

உடனே வேலையின் ஈடு பாட்டைக் குறைத்துவிட்டு திருநெல்வேலியில் தலைமறைவாக செயல்பட்டு வந்த பாரத மாதா சங்கத்தில் இணைந்தான.

வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தென்காசி எட்டயபுரம் திருநெல்வேலின்னு ஊரெல்லாம் சுத்தி இயக்கத்திற்கு ஆள் சேர்த்தான்.

அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் பாரதமாதாவைத்தான் வணங்குவார்கள். குங்குமத்தைக் கரைத்து குடித்து சத்தியம் செய்வார்கள் கட்டை விரலில் கத்தியால் கீறி அதன் இரத்தத்தில் திலகமிட்டுக்கொள்வார்கள்ஃ அனைவரும் சங்கேதப் பெயர்களையே வைத்திருப்பார்க்ள.

அந்த இயக்கத்தோட தலைவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவர் வேதாந்த கூட்டம் நடத்துவதுபோல தேசபக்திக் கூட்டம் நடத்துவார்.

சிறைக்கொடுமைகளுக்கும் கலவரத்திற்கும் அப்பாவி மக்கள் கொல்லப்படுதலுக்கும் காரணம் ஆஷ்துரைதான் ஆகவே ஆஷ்துரையைக் கொல்ல வாஞ்சிநாதன் சபதமெடுத்தான்.


அந்த நேரத்தில் அவனது குடும்பத்தில் ஒரு சோகம்.. ஆம் அவனது மனைவி பொன்னாம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் அந்தக் குழந்தை பிறந்தவுடனையே இறந்துவிட்டது.
திருனந்தபுரம் போய் தற்குண்டான ஜாதிச் சடங்குகள் செய்யதுட்டு வாடான்னு அவங்க அப்பா சொல்லிப்பார்த்தாரு ஆனால் வாஞ்சி நாதன் கேட்பதாக இல்லை. அரசியல் பக்கம் போகாதடா என்று மகனின் மீது உள்ள பாசத்தில் அவங்கப்பா கெஞ்சிக் கேட்க வாஞ்சிநாதனோ நாட்டின் மீது வைத்த பாசத்தினால் அவங்க அப்பா சொல்றதை அலட்சியப்படுத்தினான்.

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்து குறி தவறாமல் சுடப் பழகிக் கொண்டான். அந்த நேரத்தில்தான் ஆஷ்துரை தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்று உல்லாசமாய் இருக்கத் திட்டமிட்டான்.

நம்ம மக்களையெல்லாம் கொன்னுட்டு இவன் மட்டும் உல்லாசமாய் இருக்கிறதா? விடக்கூடாது அவனைக் கொன்றுவிடவேண்டும் என்ற வெறியுடன் திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷன் சென்று ஆஷ் துரை புறப்படுகிற அன்று தனக்கும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கி வைத்துக்கொண்டான். பாரதமாதா இயக்கத்தைச் சார்ந்த மாடசாமி என்பவனும் அப்பொழுது வாஞ்சிநாதனின் உடனிருந்தான்

ஆஷ்துரை முதலாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். வாஞ்சிநாதன் இரண்டாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். வண்டி மெல்ல மெல்ல திருநெல்வேலியில் இருந்து மணியாச்சிக்கு சென்று நின்றது.

கையில் துப்பாக்கியுடனும் மனதில் வீரத்துடனும் கொஞ்சம் படபடப்போடு வாஞ்சிநாதன் அமர்ந்திருந்தான். மணியாச்சி இரயில் நிலையத்தில் வண்டி நின்றவுடன் மெல்ல வாஞ்சிநாதன் வெளியே வருகின்றான். ஒருமுறை பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை உறுதிபடுத்திக்கொள்கின்றான்.


இரண்டாம் வகுப்பிலிருந்து தண்ணீர் குடிப்பது போலவும் காற்று வாங்குவது போலவும் இறங்கி ஆஷ்துரை இருக்கின்ற முதல் வகுப்பை நோக்கி நடக்கின்றான்.

இதோ ஆஷ்துரை இருக்கின்ற பெட்டி வந்துவிட்டது. எட்டிப்பார்க்கின்றான் தனது மனைவியோடு ஆஷ்துரை அமர்ந்திருக்கின்றான். எடுத்தான் துப்பாக்கியை ஆஷ்துரையின் மார்பை நோக்கி குறிவைத்தான். டமால்..டமால் என இரண்டு முறை சுட்டுவிட்டு தப்பியோடினான்.

திடீரென்று யாரோ ஒருவன் தனது கணவனை கண்முன்னால் சுட்டதால் அவன் மனைவி அதிரந்து போய் கத்த ஆரம்பித்தாள். வாஞ்சி நாதன் ஓட ஆரம்பித்தான். அவனைப்பிடிக்க ஒரு கூட்டம் அவைனைப்பின்தொடர்ந்து ஓடியது.

எங்கு ஓடுவது எனத்தெரியாமல் ப்ளாட்பாரத்தில் உள்ள கக்கூஸில் நுழைந்துவிட்டான். அந்த கக்கூஸை சுற்றி வளைத்தனர் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயரிடம் மாற்றி சிறைத்தண்டனை பெறுவதா? கூடாது எனத் தீர்மானித்து தன் வாயில் அந்த துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டான் வாஞ்சிநாதன்.


பரபரப்பான பொது இடத்தில் ஒரு கலெக்டரைக் சுட்டுக் கொன்ற செய்தி கேட்டு நாடே ஸ்தம்பித்தது. இங்கிலாந்து நாட்டில பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது இந்தக் கொலை. அங்குள்ளவர்களால் சுதந்திர நாட்டின் முதல் வெடிச்சப்தம் என்றும் இது அழைக்கப்பட்டது

கூட இருந்த மாடசாமி என்ன ஆனான் என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை.

ஆனால் இந்த வாஞ்சிநாதன் சரித்திரத்தில் பல முரண்பாடுகள் இருப்பபதையும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.

தினமும் நடைபயணத்தை மேற்கொள்ளுபவர் ஆஷ்துரை. ஓருநாள் தனது சாரட்டை பின்னால் நடத்தி கூட்டிவரும்படி குதிரையோட்டிக்கு ஆணையிட்டுவிட்டு நடந்து செல்லும்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட பெண் பிரசவவேதனையில்; கத்திக்கொண்டிருக்க அவளை தனது சாரட்டில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு குதிரையோட்டியிடம் ஆணையிடுகிறான் ஆஷ்

ஆனால் அந்த வழியில் உள்ள அக்கிரஹார மக்கள் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை இந்த வழியாக கொண்டு செல்லக் கூடாது என்று ஆஷின் சாரட்டை வழிமறிக்கின்றார்கள். உடனே ஆஷ் குதிரைச் சவுக்கால் அங்குள்ளவர்களை பலமாக அடித்துவிட்டு வண்டியை முன்னேற விடுகிறார். அந்தக்கும்பலில் அடிவாங்கிய ஒரு 16 வயது இளைஞன் ஆஷ் துரையை பழிவாங்கப் புறப்படுகின்றான். அவன் பெயர் என்ன தெரியுமா? வாஞ்சிநாதன்

என்று ழான் வோனிஸ் எழுதிய யுளா ழுககஉயைட ழேவநள எனும் குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது என்று நமது வலைப்பதிவர் வரவனையான் குறிப்பிட்டிருக்கின்றார்.

அது மட்டுமல்ல கொலை செய்ய வந்த இடத்தில் திருநெல்வேலியில் முந்தைய இரவில் ஒரு வேசியின் வீட்டில் அவர் தங்கியிருந்ததாகவும் அதனை அந்த வேசியே வந்து சாட்சி சொன்னதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விசயத்தில் ஒன்று மட்டும் புலப்படுகின்றது. பல சாதிகளாக பிரிந்திருக்கின்ற மக்கள் தனது சாதியை உயர்த்திக் காட்டுவதற்காக சரித்திரத்தின் சுவடுகளை ஆங்காங்கே மாற்றியிருக்கின்றனர் என்பது மட்டும் லேசாய்த் தெரிகின்றது.

இனிமேல் திருநெல்வேலி மணியாச்சியை நெருங்குகின்ற மணி ஆச்சு என்றால் நமது வாஞ்சிநாதனை நினைத்துக்கொள்ளுங்கள்.

- ரசிகவ் ஞானியார்

3 comments:

Raveendran Chinnasamy said...

There are lot of confusion about our freedom struggle history as Congress made only their cadres get name and fame .

VOC doesnt have fame as thilak . why ?

I m prod to be born in Old Thirunelveli dist .



Note :Sorry for english comment

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Raveendran Chinnasamy said...
There are lot of confusion about our freedom struggle history as Congress made only their cadres get name and fame . //

வஉசி யைப்பற்றி அடுத்த பதிவில் தருகின்றேன்.

சரித்திரத்தின் சுவடுகள் மத சாதி வெறியர்களால் மறைக்கப்பட்டுள்ளன என்பது மட்டும் உண்மை

Anonymous said...

Nantaaga eluthukireerkal//

kadaisi stanza udpada..

'namma oor eluthalar entu ennumpothu perumaiyaka irukirathu

தேன் கூடு