Saturday, August 13, 2005

கணிப்பொறி திருவிளையாடல்



( சில தினங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் அனுப்பிய மெயிலை கொஞ்சம்
மாற்றியிருக்கிறேன் )



காட்சி 1

மதுரை மக்களே எழுந்திருங்கள்.
நாட்டு மக்களுக்கோர் ஓர் நற்செய்தி நமது பாண்டிய மன்னருக்கு ஏற்பட்டுள்ள
சந்தேகத்தை தீர்த்து வைக்கக்கூடிய சி புரோகிராமை எழுதிக்கொண்டு வரும்
புரோகிராமருக்கு ஆயிரம் அமெரிக்கன் டாலர்கள் பரிசளிக்கப்படும்

டும் டும் டும் டும் டும்

தருமி கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து தெளிவாய் கேட்கிறான்.

எவ்வளவு? ஆயிரம் அமெரிக்க டாலரா?

யானை மீதிருக்கும் அந்த அரசாங்க ஊழியன் கூறுகிறான்

ஆமாம் ஆயிரம் அமெரிக்க டாலர்கள்

தருமி சந்தோஷத்தை கட்டுபடுத்த முடியாமல் தனக்குத்தானே புலம்பிக்கொண்டு போகிறான்.
-------------------------

காட்சி 2



தருமிக்கும் சிவனுக்கு இடையே உரையாடல் ஆரம்பிக்கிறது

தருமி : யாரு என்கிட்டேயேவா என்கிட்டேயேவா என்கிட்டேயே
மோதப்பார்க்கிறியா..நான் ஆளு பார்க்கிறதுக்கு சுமாராகத்தான்
இருப்பேன்..ஆனா என் புரோகிராமிங் பத்தி உனக்கு
தெரியாது..தயாரா இரு

சிவன் : அப்படியா கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது
நான் கேட்கட்டுமா?

தருமி : ஆங்.. நானே கேட்கிறேன்..எனக்கு கேட்கத்தான் தெரியும்.ம் ம் ம்

தருமி தொடர்கிறான் : பிரிக்க முடியாதது என்னவோ?
சிவன் : பில்கேட்ஸ{ம் விண்டோஸ{ம்

தருமி : சேர்ந்தே இருப்பது?
சிவன் : விண்டோஸ{ம் பக்கும்

தருமி : சொல்லக்கூடாதது?
சிவன் : கிளைண்டிடம் உண்மை

தருமி : சொல்லக்கூடியது?
சிவன் : செமினாரில் பொய்கள்

தருமி : கோடுக்கு அழகு?
சிவன் : கமெண்டுடன் இருப்பது

தருமி : ரோடுக்கு அழகு?
சிவன் : குண்டும் குழியுமாய் இருப்பது

தருமி : கமெண்டெனப்படுவது?
சிவன் : புரியாமலிருப்பது

தருமி : ஓ எஸ்ஸ{க்கு
சிவன் : யுனிக்ஸ்

தருமி : லாங்குவேஜ்க்கு?
சிவன் : சி

தருமி : டே;டாபேஸ{க்கு
சிவன் : ஆரக்கிள்

தருமி : வெப் சைட்டுக்கு
சிவன் : கூகிள்

தருமி : ஆப் சைட்டுக்கு
சிவன் : நீ

தருமி : ஆன் சைட்டுக்கு
சிவன் : நான்


தருமி : யப்பா ஆளை விடு

தருமி சிவனின் காலில் விழுகின்றான்.

தருமி : அய்யா நீர் புரொகிராமர்
சிவன் : நீ

தருமி : இல்லை நான் புரொகிராமர் இல்லை..டேட்டா என்ரி ஆபரேட்டர்.
எங்கே அந்த புரொகிராமைக்கொடுங்கள். மன்னர் என்ன கொடுக்கிறாரோ அதை
அப்படியே தங்களிடம் கொடுக்கிறேன். நீர் பார்த்து ஏதாவது செய்யும்


சிவன் தன் கையிலிருக்கும் சிடியை தருமியிடம் கொடுக்கின்றான்.

-------------------------


காட்சி 3


தருமி சிவன் கொடுத்த சிடியை பாண்டிய மன்னனிடம் கொடுக்கிறான். பாண்டிய
மன்னனோ அரசவை டே;டா என்ரி ஆபரேட்டரிடம் அதனை கொடுக்க அவன் அதனை
கணிப்பொறியில் இட்டு சி புரோகிராமை ஓபன் செய்கிறான்.


#include
void main()
{
a = 13*3;
printf("%d\n",a);
}



பாண்டிய மன்னன் உணர்ச்சிவசப்படுகிறான்

பாண்டிய மன்னன் : ஆ என்ன அருமையான லாஜிக் ஆழ்ந்த சின்டக்ஸ் தீர்ந்தது சந்தேகம்

தருமி : மன்னா பரிசு

பாண்டிய மன்னன் : யார் அங்கே ஆயிரம் அமெரிக்க டாலர்கள் எடுத்து வாருங்கள்

தருமி ( மனதுக்குள்) : முதல்ல இந்த சிடிகாரன் கடனை தீர்க்கணும்

பாண்டிய மன்னன் : ஆ என்ன அருமையான லாஜிக் ஆழ்ந்த சின்டக்ஸ் தீர்ந்தது சந்தேகம்

தருமி : மன்னா பரிசு

பரிசு வருகிறது. தருமி பரிசை பெறுவதற்கு தயாரகி விடுகிறான்.திடீரென்று
நக்கீரர் எழுந்திருக்கிறார்

நக்கீரன் : மன்னா சற்றுப்பொறுங்கள் புரொகிராமரே சற்று இப்படி வருகிறீர்களா..?

தருமி : முடியாது பரிசை வாங்கிகொண்டுதான் வருவேன்..மன்னா போடு

நக்கீரன் : அதில்தான் பிரச்சனை இருக்கிறது

தருமி நக்கீரன் அருகே செல்கிறான்.

தருமி : வேந்தே என்னய்யா பிரச்சனை?

நக்கீரன் : இந்த புரோகிராமை எழுதியது நீர்தானோ?

தருமி : நான் நான் நானேதான் எழுதினேன் பின்ன இண்டர்நெட்டுல இருந்து டவுண்லோட்
பண்ணிகிட்டா வந்தேன்? என்னுடையதுதான் என்னுடையதுதான்
என்னுடையதுதான் அய்யா!

நக்கீரன் : அப்படியானால் அதை கம்பைல் செய்துவிட்டு பிறகு பரிசை பெற்று செல்லலாமே

தருமி : மன்னருக்கே விளங்கி விட்டது இடையில் நீர் என்ன?
மன்னா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் இவர் வேறு கம்பைல்
செய்ய சொல்லுகிறார்

இதற்கிடையில் நக்கீரன் புரொகிராமை கம்பைல் செய்கிறார். அது பிழை என வருகிறது.

எ நாட் டிபைண்ட்


நக்கீரன் : சரியான ஒரு புரொகிராமுக்கு என் மன்னவன் பரிசளிக்கிறான்
என்றால் அதைக்கண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான். அதே சமயம் கென்
தாம்ஸ்ஸனும் டென்னிஸ் ரிச்சும் கட்டிக்காத்த இந்த சாப்;ட்வேர்
திருச்சபையிலே தவறான ஒரு புரொகிராமுக்கு பாண்டியன் பரிசளிக்கிறான்
என்றால் அதைக்கண்டு வருத்தப்படுபவனும் நான்தான்

-------------------------

காட்சி 4


சிவன் : ( நக்கீரனிடம்) எங்கு குற்றம் கண்டீர்? சின்டக்ஸ்லயா இல்ரைல லாஜிக்லயா?

நக்கீரன் : லாஜிக்கில் இல்லை சின்டக்ஸில்தான் குற்றம் இருக்கிறது

சிவன் : என்ன குற்றம்?

நக்கீரன் : எங்கே உமது புரோகிராமை காட்டும்?

சிவன் :



#include
void main()
{
a = 13*3;
printf("%d\n",a);
}

நக்கீரன் : இதன் பொருள்?

சிவன் : பதிமூன்றையும் மூன்றையுமு; பெருக்கி எ என்ற வேறியபலில்
வைக்கிறேன். புpறகு எவை பரிண்ட
செய்கிறேன்

நக்கீரன் : இதன்மூலம் தாங்கள் மன்னருக்கு சொல்ல விரும்புவது?


சிவன் : ஹா ஹா புரியவில்லை? "int a;" வென்கிற டிக்லரேசன்
தேவையில்லை என்பது என்னோட
முடிவு

நக்கீரன் : ஒருக்காலும் இருக்க முடியாது. முதலிலையே டிக்லர் செய்வதனால்
மட்டுமே ஒரு வேரியபிலை உபயோகிக்க முடியுமே தவிர டிக்லர் பண்ணாமல்
உபயோகிக்க முடியாது

சிவன் : சி ப்ளஸ் ப்ளஸ் - யிலும் அப்படித்தானோ?

நக்கீரன் : ஆம்

சிவன் : ஜாவாவில்

நக்கீரன் : ஜாவா என்ன..எல்லா ஹை லெவல் லாங்குவேஜிலும் அப்படித்தான்.

சிவன் : உனது ப்ராஜக்ட் மேனேஜருக்கும் அப்படித்தானோ?

நக்கீரன் : ப்ராஜக்ட் மேனேஜர் என்ன..நான் அன்றாடம் வழிபடும்
கெர்னிக்குக்கு இடப்பக்ம் அமர்ந்திருக்கிறானே ரிட்சி அதே விதிப்படித்தான்
(Kernigh Ritchie )

சிவன் : நிச்சயமாக?

நக்கீரன் : நிச்சயமாக

சிவன் : உமது சாப்ட்வேர் புலமை மீது ஆணையாக?

நக்கீரன் : எனது சாப்ட்வேர் கன்ஸல்டன்ஸிமீது ஆணையாக

சிவன் : நக்கீரா என்னை நன்றாக பார்..
( மின்னல் தெறித்து சிவன் ஒளிப்பிழப்பாகிறார்;)
நான் எழுதிய சி புரோகிராம் குற்றமா?


நக்கீரன் : நீர் என் மவுஸை புடுங்கினாலும் ஹார்ட்டிஸ்கை எரித்தாலும்
குற்றம் குற்றமே

( சிவன் நக்கீரனின் கம்ப்யூட்டரின் ஹார்ட்டிஸ்க்கை எரிக்கிறார்)

பாண்டியன் : இறைiவா பிழை பொறுத்தருள வேண்டும். சுPனியர் சிஸ்டம்
அனைலைஸ்ட் நக்கீரனின் ஹார்ட்டிஸ்க்கை திரும்ப தந்துவிடு

( சிவனின் உருவம் பெரிதாகிறது)

சிவனின் : பாண்டியா.. நக்கீரனின் ஹார்ட்டிஸ்க் இப்போது சரியாகிவிடும்

( ஹார்ட்டிஸ்க் சரியாகிவிடுகிறது)

நக்கீரன் : யுனிக்ஸ{ம் நீயே..விண்டோஸ{ம் நீயே
சியும் நீயே..ஜாவாவும் நீயே
வேரியபிலும் நீயே..கான்ஸ்டன்டும் நீயே
க்ளைண்டும் நீயே புரோகிராமரும் நீயே
வாழ்க தமிழகம் வளர்க புரோகிராமிங்




இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்


4 comments:

கலை said...

சிவனும் தருமியும், சம்பாஷனையும் நல்லாயிருக்கு.

சினேகிதி said...

Nilavu Nanban ungaluku nalathan katpanai varuthu...aduthathu sivanuku JAVA, PEARL m clear padipichu vidungo

பரஞ்சோதி said...

படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

நன்றாக எழுதுகிறீர்கள், பாராட்டுகள்.

Suresh said...

நன்றாக இருக்கிறது. வயிறு குழுங்க சிரித்தேன்.

தேன் கூடு